உங்க வீட்டு மாடியிலயும் கொத்து கொத்தாக மல்லிகை பூக்க இந்த சீக்ரெட் டிப்ஸ உடனே ட்ரை பண்ணுங்க!

grow-jasmine-plant
grow-jasmine-plant
Updated on

மாலை நேரத்தில் காற்றில் கலந்து வரும் அந்த மயக்கும் மல்லிகை வாசனையை விரும்பாத ஆட்களே உலகத்தில் இருக்க முடியாது. தலையில் வைத்து அழகு பார்க்கவும், வீட்டை மங்களகரமாக வைத்திருக்கவும் இந்த வெள்ளை மலர்கள் பெண்களுக்கு மிகவும் பயன்படுகின்றன. 

இதற்காக தினமும் கடைகளில் காசு கொடுத்து வாங்குவதை விட, நமது வீட்டு பால்கனியிலோ அல்லது மொட்டை மாடியிலோ ஒரு சின்ன தொட்டியில் நாமே இதை ஆசை ஆசையாக வளர்ப்பது ஒரு அலாதியான சந்தோஷத்தை கொடுக்கும். இதற்கு பெரிய அளவில் நிலம் தேவை என்ற அவசியம் எல்லாம் இல்லை. 

தொட்டி, மண்!

செடியை வளர்க்கத் தொடங்கும் போது கொஞ்சம் அகலமான மற்றும் போதுமான ஆழம் உள்ள பிளாஸ்டிக் அல்லது மண் தொட்டியை வாங்குவது நல்லது. தொட்டிக்குள் தண்ணீர் தேங்கி நின்றால் வேர் அழுகி செடி செத்துவிடும். அதனால், அடியில் நல்ல பெரிய ஓட்டைகள் இருப்பதை கவனித்து வாங்குங்கள். அந்த ஓட்டைகளை சுற்றி சில கூழாங்கற்களைப் போட்டு வைத்தால் அதிகப்படியான தண்ணீர் மிக சுலபமாக வெளியேறிவிடும். 

அதே போல, செடி வைக்க மண்ணைத் தயார் செய்யும் போது வெறும் மண்ணை மட்டும் பயன்படுத்தாமல், கொஞ்சம் செம்மண், சிறிதளவு மணல் மற்றும் மண்புழு உரம் கலந்த கலவையைப் பயன்படுத்துங்கள். இது வேர்களுக்கு நல்ல பலத்தைக் கொடுத்து செடியை ஆரோக்கியமாக வளரச் செய்யும்.

வெயில், தண்ணீர்!

மல்லிகைச் செடிக்கு வெயில் என்றால் ரொம்பவே பிடிக்கும். குறைந்தது அரை நாளுக்காவது நல்ல சுட்டெரிக்கும் வெயில் படும் இடத்தில் அந்தத் தொட்டியை வைப்பது மிக மிக முக்கியம். வெயில் படாத இருட்டான இடத்தில் வைத்தால் செடி உயரமாக வளருமே தவிர மொட்டுகள் வைக்காது. அடுத்ததாக தண்ணீர் ஊற்றும் விஷயத்தில் கொஞ்சம் கவனமாக இருக்க வேண்டும். 

செடிக்கு தினமும் தண்ணீர் ஊற்ற வேண்டும் என்ற எந்த கட்டாயமும் இல்லை. தொட்டியில் உள்ள மேல் மண் காய்ந்து சற்று ட்ரையாக இருப்பதை உங்கள் விரல்களால் தொட்டுப் பார்த்த பிறகு மட்டும் கொஞ்சமாகத் தண்ணீர் ஊற்றுங்கள். அளவுக்கு அதிகமாகத் தண்ணீர் ஊற்றிக் கொண்டே இருந்தால் செடி சீக்கிரமே வாடிவிடும்.

இதையும் படியுங்கள்:
செடிகளில் கவாத்து செய்யும் முறையும், கிடைக்கும் பலனும்!
grow-jasmine-plant

கவாத்து செய்வது முக்கியம்!

செடி நேராக வளர்ந்து கொண்டே போனால் அதிக பூக்களை நம்மால் எதிர்பார்க்க முடியாது. அதனால், கிளைகளின் நுனிகளை அடிக்கடி கைகளால் கிள்ளி விட வேண்டும். காய்ந்த இலைகள் மற்றும் பூத்து முடித்த பழைய கிளைகளை அவ்வப்போது வெட்டி விட்டால் தான், செடி அடர்த்தியாகப் பல புதிய கிளைகளுடன் பசுமையாக வளரும். 

அதே போல, செடிக்கு மாதம் ஒருமுறை இயற்கை உரங்களைக் கொடுப்பது சூப்பரான ரிசல்ட்டைத் தரும். கடைகளில் விற்கும் கெமிக்கல் உரங்களை முற்றிலுமாகத் தவிர்த்துவிட்டு, நம் வீட்டிலேயே கிடைக்கும் வாழைப்பழத் தோலை தண்ணீரில் இரண்டு நாட்கள் ஊறவைத்து அந்தத் தண்ணீரைக் கொடுக்கலாம். இது மொட்டுகள் பெரிதாக வளர நல்ல 

இதையும் படியுங்கள்:
இந்த 5 சிலைகள் உங்கள் வீட்டில் இருந்தால் அதிர்ஷ்டம் உங்களைத் தேடி வருவது உறுதி!
grow-jasmine-plant

இந்த எளிமையான வழிமுறைகளைப் பின்பற்றி, இன்றே உங்கள் வீட்டில் ஒரு மல்லிகைச் செடியை நட்டு வையுங்கள். கூடிய சீக்கிரமே உங்கள் வீடு முழுவதும் இயற்கையான மல்லிகை வாசம் கமகமக்கத் தொடங்கும்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com