பெற்றோரின் மகிழ்ச்சி நமக்கு பெரும் பலம்! மறந்துடாதீங்க பிரெண்ட்ஸ்!

Happy parent with daughter
happy parents
Published on

நம்மை இந்த உலகிற்கு கொண்டு வந்து, நம்மை வளர்த்து, சிறந்த வாழ்க்கையை அமைத்துக்  கொடுத்தவர்கள் நம் பெற்றோர்கள். அவர்களின் தியாகங்களும், அன்பும் அளப்பரியது. ஆனால், வேகமாக ஓடும் இந்த நவீன உலகில், நாம் பெற்றோர்களை கவனிப்பதிலும், அவர்களை மகிழ்ச்சியாக வைத்திருப்பதிலும், சில சமயம் மறந்து விடுகிறோம். அந்த வகையில், பெற்றோர்களை மகிழ்ச்சியாக வைத்திருக்க சில வழிகளை இங்கே பார்ப்போம்.

பெற்றோர்களுடன் தினமும் பேசுங்கள்

தினமும் அவர்களுடன் சிறிது நேரம் செலவிடுங்கள்.

அவர்களின் நாளைப் பற்றி கேளுங்கள், உங்கள் நாளைப் பகிர்ந்து கொள்ளுங்கள்.

தொலைபேசியில் பேசுவதை விட, நேரில் பேசுவது அவர்களுக்கு அதிக மகிழ்ச்சியை அளிக்கும்.

அவர்கள் சொல்ல வரும் விஷயங்களை பொறுமையாக கேளுங்கள்.

அவர்களின் தேவைகளை புரிந்து கொள்ளுங்கள்:

உடல்நலம், மருந்து மாத்திரைகள், உணவு, உடை என அவர்களின் அடிப்படை தேவைகளை கவனித்துக் கொள்ளுங்கள்.

மருத்துவமனை செல்ல வேண்டியிருந்தால் உடன் இருங்கள்.

வீட்டு வேலைகளில் உதவி தேவைப்பட்டால் தயங்காமல் செய்யுங்கள்.

பிடித்த பொருட்களை வாங்கி கொடுங்கள்:

அவர்களுக்கு பிடித்தமான உணவை சமைத்து கொடுங்கள். அவர்கள் விரும்பும் ஒரு பொருளை அவ்வப்போது பரிசளியுங்கள்.

அவர்களை பூங்கா, கோவில் அல்லது விருப்பமான இடங்களுக்கு அழைத்துச் செல்லுங்கள்.

அவர்களுடன் நேரம் செலவிடுங்கள்:

தொலைக்காட்சி பார்ப்பது, புத்தகங்கள் படிப்பது, அல்லது  அரட்டை அடிப்பது என அவர்களுடன் நேரத்தை செலவிடுங்கள்.

குடும்ப நிகழ்வுகளில்  பங்கு பெற செய்யுங்கள்.

குடும்ப நிகழ்ச்சிகளில், குறிப்பாக திருமணங்கள், பண்டிகைகள் போன்றவற்றுக்கு அவர்களை உடன் அழைத்து செல்ல முடிந்தால், அது அவர்களுக்கு பெரும் மகிழ்ச்சியை அளிக்கும்.

இதையும் படியுங்கள்:
குடும்ப வாழ்க்கையை தொடங்கும் இளைஞரா நீங்க? 50:30:20 விதியின் ரகசியம் தெரிஞ்சுக்கோங்க பாஸ்!
Happy parent with daughter

அவர்களின் கருத்துக்களுக்கு மதிப்பளியுங்கள்:

முக்கிய முடிவுகள் எடுக்கும்போது, அவர்களின் கருத்துக்களையும் கேளுங்கள்.

அவர்களின் அனுபவ அறிவு உங்களுக்கு உதவலாம்.

எல்லா நேரமும் அவர்களின் கருத்துக்களை ஏற்க முடியாவிட்டாலும், அவற்றை மதித்து கேட்பது முக்கியம்.

பாதுகாப்பு உணர்வை அளியுங்கள்:

நீங்கள் எப்போதும் அவர்களுக்கு துணையாக இருப்பீர்கள் என்ற நம்பிக்கையை அவர்களுக்கு அளியுங்கள்.

அவர்கள் 'தனியாக இருக்கிறோம்' என்ற உணர்வை ஒருபோதும் அடைய விடாதீர்கள்.

உங்கள் வாழ்க்கையில் அவர்களுக்கு ஒரு முக்கிய இடம் உண்டு என்பதை உணர்த்துங்கள்.

பெற்றோர்கள் நம்மிடம் எதிர்பார்ப்பது பணம், பொருள் மட்டுமல்ல. நம் அன்பும், அருகாமையும், அவர்களுடன் நாம் செலவிடும் நேரமும்தான் அவர்களுக்கு மிகப்பெரிய சொத்து. நம்மை வளர்த்தது போலவே, அவர்களையும் நாம் கவனித்துக் கொள்வது நம் கடமை மட்டுமல்ல; அது நமக்கு கிடைக்கும் ஒரு வரம். வாழ்க்கை எவ்வளவு வேகமாக சென்றாலும் நம் பெற்றோரின் மகிழ்ச்சி நமக்கு பெரும் பலம் என்பதை என்றும் மறக்காதீர்கள். இன்றே உங்கள் பெற்றோருடன் சிறிது நேரம் செலவிட்டு அவர்களை மகிழ்ச்சிப்படுத்துங்கள்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com