பிறர் பேசுவதைக் கேட்பதன் முக்கியத்துவத்தை உணர்ந்து கொள்வோம்!

நவம்பர் 29, தேசிய கேட்கும் (Listening) தினம்
National Listening Day
National Listening Day
Published on

மெரிக்காவில் தேசிய கேட்கும் தினம் ஒவ்வொரு ஆண்டும் நன்றி செலுத்தும் நாளுக்குப் பிறகு வரும் வெள்ளிக்கிழமையன்று அனுசரிக்கப்படுகிறது. இந்த வருடம் நவம்பர் 29ம் இன்று தேதி கடைபிடிக்கப்படுகிறது. பிறர் பேசுவதைக் கேட்பதன் முக்கியத்துவத்தைப் பற்றி இந்தப் பதிவில் பார்ப்போம்.

2008ம் ஆண்டு ஸ்டோரிகார்ப்ஸ் என்ற லாப நோக்கமற்ற நிறுவனத்தால் இந்த நாள் உருவாக்கப்பட்டது. இந்த நாள் அனைத்துப் பின்னணியில் இருந்தும் மக்களின் கதைகளை பாதுகாப்பதற்கும் பகிர்வதற்கும் அர்ப்பணிக்கப்பட்ட நாள். தனி நபர்கள் தங்கள் அன்புக்குரியவர்களுடன் அர்த்தமுள்ள உரையாடல்களில் ஈடுபடவும், அவர்களின் கதைகளை தீவிரமாகக் கேட்கவும் ஊக்குவிக்கிறது. இதனால் வெவ்வேறு தலைமுறைகள் மற்றும் அனுபவங்களின் தொடர்புகளை உருவாக்குதல் மற்றும் புரிந்து கொள்வதன் முக்கியத்துவத்தை வலியுறுத்துகிறது.

பிறர் பேசுவதை கேட்பதன் முக்கியத்துவம்:

நமது வேகமான, பரபரப்பான வாழ்க்கை முறையில் பெரும்பாலும் பிறரை கவனிப்பதும் இல்லை, அவர்கள் பேசுவதைக் கேட்பதும் இல்லை. பிறர் பேசுவதை பொறுமையாகக் கேட்டால் அது ஆழமான தொடர்புகளையும் புரிதலையும் வளர்க்கிறது.

அர்த்தமுள்ள உரையாடல்களில் ஈடுபடுவது உறவுகளை ஆழமாக்கும். மற்றவர்களின் கதைகளைக் கேட்பது பச்சாதாபம் மற்றும் புரிதலை வளர்க்கிறது. இதன் மூலம் குடும்பம் மற்றும் சமூகப் பிணைப்புகள் வலுப்படுகின்றன.

தனிநபர்கள் தங்கள் கதைகளை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்வதன் மூலம் வாய் வழியாக ஆவணப்படுத்துகிறார்கள். இவற்றைக் கேட்கும் நபர்கள் பல தலைமுறைகளுக்கும் அவற்றைக் கொண்டு செல்லலாம்.

கேட்கும் செயல் பல்வேறு பின்னணிகள் கலாசாரங்கள் மற்றும் அனுபவங்களைப் புரிந்துகொள்ள உதவுகிறது. கதைகளைப் பகிர்வதன் மூலம் தனி நபர்கள் ஒருவருக்கொருவர் கற்றுக்கொள்ளும் வாய்ப்பை பெறுகிறார்கள். சகிப்புத்தன்மையையும் வேறுபாடுகளை பாராட்டுவதையும் ஊக்குவிக்கிறார்கள். இது உணர்ச்சிபூர்வமான தொடர்பிற்கும் மன ஆரோக்கியத்திற்கும் நல்வாழ்விற்கும் பங்களிக்கிறது.

இதையும் படியுங்கள்:
அமில மழையால் ஏற்படும் சுற்றுச்சூழல் பாதிப்புகளும் தடுப்பு முறைகளும்!
National Listening Day

பிறரின் கதைகளைக் கேட்பது தனி நபர்களை ஊக்குவிக்கும் மற்றும் வாழ்க்கையில் ஏற்படும் சவால்கள், போராட்டங்கள் பற்றிய புதிய கண்ணோட்டங்களை வழங்க உதவுகிறது. ஒருவர் தனது சொந்த அனுபவங்களைப் பகிர்வதன் மூலம் பிறருக்கு அவை பாடங்களாக அமையலாம். இந்த நாளில் பகிரப்படும் கதைகள் ஒரு பெரிய மரபுக்கும் பாரம்பரியத்திற்கு வழி வகுக்கும். இந்த நாளில் பகிரப்படும் கதைகள் தனிப்பட்ட வரலாறுகளை மட்டுமல்ல, சமூகங்களை வடிவமைக்கும் கலாசார விவரிப்புகளையும் பாதுகாக்கும்.

தேசிய கேட்பு நாள் என்பது வாழ்வில் கதை சொல்லல் மற்றும் கேட்பதன் மதிப்பை நினைவூட்டுகிறது. இது மற்றவர்களுடன் இணைவதற்கும் முக்கியமான வரலாறுகளை பாதுகாப்பதற்கும் உதவுகிறது. மேலும், துண்டிக்கப்பட்ட உலகில் தனித்தீவுகளாக மனிதர்கள் வாழ்கின்ற உலகில் புரிதல், பச்சாதாபம் மற்றும் சமூகத்தை இணைப்பதற்கும் ஒரு வாய்ப்பாக அமைகிறது. மனித இணைப்பின் அழகை வலியுறுத்தி இந்த நாள் தனி நபர்களை மதிப்பதற்கும் ஆழமான செவிமடுக்கும் செயலில் ஈடுபடுவதற்கும் ஊக்குவிக்கிறது.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com