குடும்ப உறவில் அன்பை நிலைநாட்டுவதற்கு அவசியமான குணநலன்கள்!

To maintain love in family relationships
Happy family relations
கலைமதி சிவகுரு

I am so thankful for kalki in my life. I am graduate from Holy Cross college in Nagercoil in the year 1983.I also tailaring work and make some bags, pouches. My writing were published in mangayarmalar, and Devathai, kudumbamalar with thinathanthi and received some prizes. Now I am writing in kalki publications. Cooking, Writing, reading anmigam books, playing chess are my hobbies.

Updated on

அன்பை நிலை நாட்டும் குணநலன்கள்

1.பொறுமை: குடும்பத்தில் ஒவ்வொருவரும் தனித்துவம் கொண்டவர்கள். அவர்களின் பழக்கவழக்கங்கள், எண்ணங்கள், செயற்பாடுகள் பல வேறுபடக் கூடும். சின்ன சின்ன முரண்பாடுகள் ஏற்படும்போது பொறுமையுடன் சமாளிக்கத் தெரிந்தால், உறவு சீராக இருக்க உதவுகிறது.

2.அக்கறை மற்றும் கவனிப்பு: பெற்றோர், சகோதரர்கள், வாழ்க்கைத்துணை அல்லது பிள்ளைகள், அனைவரும் ஒருவர் மீது ஒருவர் அக்கறை கொண்டிருப்பது முக்கியம். நாள்தோறும் நிகழும் சிறிய விஷயங்களில்கூட “நீ நல்லா இருக்கியா?” என்று கேட்பது அன்பை உறுதிசெய்யும்.

3.நம்பிக்கை: குடும்ப உறவுகளில் நம்பிக்கையில்லாத இடத்தில் சந்தேகங்கள், பிணைப்பு இல்லாத மனநிலை உருவாகும். நம்பிக்கையுடன் வாழும் உறவுகள் மிக வலிமையானவை.

4.மரியாதை: வயதில் பெரியவர், சிறியவர் என்று பாராமல், ஒருவருடைய எண்ணங்கள், நேரம், தனிப்பட்ட இடம் ஆகியவற்றிற்கு மரியாதை கொடுத்தால் உறவு விருப்பமாய் வளர்கிறது.

4.மன்னிப்பு: குடும்பத்தில் தவறுகள் ஏற்படுவது சகஜம். ஒருவரை நாம் நன்கு அறிந்தாலும், அவர் எப்போதும் நம்முடைய எதிர்பார்ப்புப்படி நடப்பார் என்று இல்லை. மன்னிக்கத் தெரிந்தால் மனதிற்கும் அமைதி கிடைக்கும், உறவுக்கும் நிலைத்தன்மை கிடைக்கும்.

5.திறந்த மனதுடன் பேசுதல்: உங்கள் உணர்வுகளை வெளிப்படையாக சொல்லவும், மற்றவர்கள் சொல்வதை ஆழ்ந்து கேட்கவும் பழகவேண்டும். “எனக்கு இது வேணும்”, “நீ இப்படி செய்தது என்னை வருத்திச்சு” போன்ற உரையாடல்கள் நேர்மையாக இருந்தால் போதும்.

இதையும் படியுங்கள்:
விதவிதமான ஆணிகளும் அவற்றின் பயன்பாடுகளும்!
To maintain love in family relationships

6.ஒருமைப்பாடு: குடும்ப உறுப்பினர்கள் ஒரே இடத்தில் இருப்பது மட்டுமல்ல, மனதிலும் இணைவுடன் இருப்பது முக்கியம். சிக்கல்கள் வந்த போதும், எது நம் குடும்ப நலனுக்காக என்று எண்ணிப் பேசுவது அவசியம்.

7.பரிவும் பரஸ்பர உதவியும்: ஒருவர் மற்றவருக்காக சற்று கூடுதலாக செய்யும் உதவி, அன்பு உணர்வை வளர்க்கும். “நான் இதைப் பார்த்துக் கொள்கிறேன்”, “நீ சோர்வாக இருக்கிறாய், ஓய்வெடு” என்று சொல்லும் வார்த்தைகள் உறவை உறுதியாக்கும்.

அன்பு நிலைநிற்க, ஒவ்வொரு குடும்ப உறவிலும் பரஸ்பர புரிதலும், மதிப்பும், பொறுமையும், தொடர்ந்து அக்கறையும் இருக்கவேண்டும்.

ஒருநாள் முழுவதும் குடும்ப உறவுகளை மேம்படுத்த எளிமையான மற்றும் அர்த்தமுள்ள செயல்பாடுகள்.

காலைநேரம்: குடும்ப உறுப்பினர்கள் ஒருவருக்கொருவர் “காலை வணக்கம்” கூறவும். ஒவ்வொருவரும் ஒரு நிமிடம் எடுத்துக் கொண்டு, “நீ என் வாழ்க்கையில் இருக்கிறதுக்கு நன்றி” என்று ஒருவருக்கொருவர் சொல்ல வேண்டும். முழு குடும்பமும் ஒன்றாக அமர்ந்து காலை உணவு சாப்பிடுவது.

மத்தியநேரம்: கூட்டு செயல்பாடு” சேர்ந்து சமைத்தல், தோட்ட வேலை, வீடு அலங்காரம் போன்ற ஒன்று. பெரியவர்கள் இளையோருக்கு தங்கள் வாழ்க்கை அனுபவங்களைச் சொல்லலாம். ஒருவரை ஒருவர் பாராட்டிக் கொள்ளலாம். “இந்த வாரம் உன்னால் நாங்கள் பெருமைபடுகிறோம்” என்று ஒரு சின்ன பாராட்டு.

இதையும் படியுங்கள்:
பிளஸ் டூ முடித்த மாணவர்கள் நல்ல கல்லூரியை தேர்ந்தெடுக்க 6 வழிகள்!
To maintain love in family relationships

மாலைநேரம்: “உணர்வுப் பகிர்வு” சுற்றம் ஒவ்வொருவரும் இதுபோன்ற கேள்விக்கு பதிலளிக்கலாம்: “இந்த வாரத்தில் என்ன உங்களை மகிழ்ச்சியடையச் செய்தது?” “என்ன செய்தால் நம் குடும்பம் இன்னும் சந்தோஷமாக இருக்கும்?” ஒரு சிறிய விளையாட்டு (லுடோ, ப்ளாஃபர், பாடல் போட்டி), அல்லது ஒரு குடும்பப்படம் பார்ப்பது.

இரவு நேரம்: “நட்பின் ஒளிக்கதிர்” தொட்டு உரையாடல் ஒருவரை ஒருவர் அணைத்து பிடித்தல், தோளில் கை வைப்பது போன்ற எளிய அன்புக் காட்சிகள். மனநிறைவு சொல்லுதல், “இன்று மிகவும் மகிழ்ச்சி”, “இந்த நாள் மறக்க முடியாது” போன்ற வார்த்தைகள்.

மொபைல் / டிவி தடை: குறைந்தபட்சம் ஒரு மணிநேரம் குடும்ப நேரத்தில் அனைத்தையும் விலக்கி வைத்தல்.

logo
Kalki Online
kalkionline.com