ஷாக் அடிச்சாலும் சாகாம இருக்கலாமா? இந்த 1000 ரூபாய் டிவைஸ் பண்ணும் மேஜிக்!

RCCB
RCCB
Published on

வீட்டில் ஒரே ஒரு கருவியைப் பொருத்திவிட்டால், எலெக்ட்ரிக் ஷாக்கிலிருந்து பாதுகாப்பாக இருக்கலாம் என்று நம்மில் பலர் கேள்விப்பட்டிருப்போம். அந்தக் கருவியின் பெயர் RCCB (Residual Current Circuit Breaker). தமிழ்நாடு மின்சார வாரியம் கூட, இப்போது எல்லா வீடுகளிலும் இதைக் கட்டாயம் பொருத்த வேண்டும் என்று பரிந்துரை செய்துள்ளது. ஆனால், இந்தக் கருவி நிஜமாகவே நம்மைக் மின்சார அதிர்ச்சியிலிருந்து காப்பாற்றுமா? அது எப்படி வேலை செய்கிறது என்று பார்க்கலாம் வாங்க.

நமக்கு ஏன் ஷாக் அடிக்கிறது?

முதலில், ஷாக் ஏன் அடிக்கிறது என்று தெரிய வேண்டும். ஒரு பேட்டரியில் ஒரு முனையை மட்டும் தொட்டால் நமக்கு ஷாக் அடிக்காது, அதன் சுற்று (Circuit) பூர்த்தியாகாது, மேலும் அது கிரவுண்டுடன் பேலன்ஸ் ஆகாது. ஆனால், நம் வீடுகளுக்கு வரும் மின்சாரம் அப்படியல்ல. அது 3-பேஸ் (Phase) சிஸ்டம் எனப்படும் அமைப்பில் வருகிறது.

இதையும் படியுங்கள்:
காந்தாரா அத்தியாயம் 1ல் வரும் பிரம்ம ராக்ஷசன் யார்?
RCCB

இதில் 'லைன்' (Line) வழியாக வரும் கரண்ட், 'நியூட்ரல்' (Neutral) வழியாகத் திரும்பிச் செல்ல வேண்டிய அவசியமில்லை; அது பூமியுடன் தொட்டாலே பேலன்ஸ் ஆகிவிடும். நாம் 'லைன்' கம்பியைத் தொடும்போது, நம் உடலே ஒரு வழியாக மாறி, கரண்ட் நமக்குள் பாய்ந்து பூமிக்குச் செல்கிறது. இதுதான் நமக்கு 'ஷாக்' அடிக்கக் காரணம்.

RCCB எப்படி நம்மைக் காப்பாற்றுகிறது?

RCCB கருவி மிகவும் புத்திசாலித்தனமானது. இது 'லைன்' வழியாக வீட்டிற்குள் உள்ளே வரும் கரண்ட்டின் அளவையும், 'நியூட்ரல்' வழியாக வெளியே செல்லும் கரண்ட்டின் அளவையும் தொடர்ந்து ஒப்பிட்டுப் பார்த்துக்கொண்டே இருக்கும். சாதாரணமாக, ஒரு பல்பு எரிந்தால், 4 ஆம்பியர் கரண்ட் உள்ளே வந்தால், அதே 4 ஆம்பியர் கரண்ட் நியூட்ரல் வழியாக வெளியே செல்ல வேண்டும்.

ஒருவேளை உங்களுக்கு ஷாக் அடித்தால், கரண்ட் உங்கள் உடல் வழியாகப் பூமிக்குச் சென்றுவிடும், நியூட்ரலுக்குத் திரும்பாது. உடனே RCCB இதைக் கண்டுபிடித்துவிடும். உள்ளே வந்த கரண்டிற்கும் வெளியே செல்லும் கரண்டிற்கும் வித்தியாசம் இருப்பதால், அது உடனடியாக மின் இணைப்பைத் துண்டித்துவிடும்.

இதையும் படியுங்கள்:
ஒரு தண்ணீர்க் கதை
RCCB

ஆனால், ஒரு முக்கியமான விஷயம்: இது ஷாக் அடிப்பதை முன்பே தடுக்காது; ஷாக் அடிக்க ஆரம்பித்த பிறகுதான் ட்ரிப் ஆகும். இது 30 மில்லிஆம்பியர் (30mA) கரண்ட் லீக் ஆனதும் ட்ரிப் ஆகும். இந்த 30mA என்பது வலிக்கக்கூடிய ஒரு ஷாக்தான், ஆனால் அது உயிருக்கு ஆபத்தை உண்டாக்கும் முன்பே RCCB நம்மைக் காப்பாற்றிவிடும்.

RCCB கருவி 99% ஷாக் விபத்துக்களில் இருந்து நம்மைக் காப்பாற்றும் ஒரு சிறந்த பாதுகாப்பு சாதனம். ஆனால், நீங்கள் ஒரே நேரத்தில் லைன் மற்றும் நியூட்ரல் ஆகிய இரண்டு கம்பிகளையும் தொட்டால் இது வேலை செய்யாது, அப்போது உங்கள் உடல் ஒரு பல்பு போலச் செயல்படும், கரண்ட் வித்தியாசம் இருக்காது.

ஒவ்வொரு வீட்டிலும் RCCB இருப்பது மிகவும் அவசியம். உங்கள் வீட்டில் இது இருக்கிறதா என்று சோதித்துப் பாருங்கள். இல்லையென்றால், ஒரு நல்ல எலக்ட்ரீஷியனை அழைத்து உடனடியாகப் பொருத்துங்கள்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com