விவாகரத்து அதிகரிப்பு ஆபத்தா, விடுதலையா? மறைந்திருக்கும் அதிர்ச்சி உண்மைகள்!

divorce reasons in India
divorce reasons in India
Updated on

விவாகரத்து அதிகரிப்பது சமூக அமைப்பில் சில சவால்களை ஏற்படுத்தினாலும், நச்சுத்தன்மையான உறவுகளில் வாழும் தனி நபர்களுக்கு அது பாதுகாப்பான மற்றும் அவசியமான முடிவாகவே பார்க்கப்படுகிறது. அதிகரித்து வரும் விவாகரத்து விகிதம் நன்மை, தீமை என இரண்டு பரிமாணங்களைக் கொண்டுள்ளது. இது ஆபத்தானதா இல்லையா என்பது சூழ்நிலையைப் பொறுத்து மாறுபடுகிறது.

விவாகரத்து அதிகரிப்பதன் சாதகங்கள் (நன்மைகள்): 

சுதந்திரமான வாழ்க்கை: மனரீதியான துன்புறுத்தல்கள், வன்முறை, தொடர்ச்சியான மன அழுத்தம், இணக்கமற்ற சூழலில் இருந்து விடுபட்டு நிம்மதியாக வாழ  மற்றும் சுயமரியாதைக்கு ஆபத்தான குடும்பச் சூழலில் இருந்து விடுபட உதவுகிறது. இது மனநலம் மற்றும் பாதுகாப்பை அளிக்கிறது.

பெண்களின் சுதந்திரம்:  பெண்கள் பொருளாதார ரீதியாக சுதந்திரமாக இருப்பதால், தங்கள் சுயமரியாதையைக் காத்துக்கொள்ள விவாகரத்தை தேர்வு செய்கின்றனர். முக்கியமாக தன்னம்பிக்கைப் பெற்ற பெண்கள் தவறான உறவுகளில் சமரசம் செய்துகொள்ள விரும்பாமல் பிரிவைத் தேர்ந்தெடுக்க முடிவு செய்கின்றனர்.

தனிப்பட்ட வளர்ச்சி: 

இருவரின் மன அமைதிக்கும், ஆரோக்கியமான எதிர்காலத்திற்கும் இது ஒரு புதிய தொடக்கமாக அமைகிறது.

குழந்தைகள் பாதுகாப்பு: 

ஆரோக்கியமற்ற சண்டைகள் நிறைந்த குடும்பச் சூழலில் வளரும் குழந்தைகளுக்கு பதிலாக, அமைதியான சூழலை கிடைக்க வழிவகை செய்கிறது.

இதுவே ஆபத்தாக மாறுவதற்கான காரணங்கள்: 

 குழந்தைகளின் பாதிப்பு

பெற்றோர் பிரிவால் குழந்தைகளின் மனநலம் மற்றும் கல்வி பாதிக்கப்படலாம். சரியான கவனிப்பு இல்லா விட்டால் அவர்கள் தவறான வழிகாட்டுதலுக்குச் செல்ல நேரிடலாம் என்பதையும் கவனத்தில் கொள்ளவேண்டும். முக்கியமாக பெற்றோர் பிரிவால் குழந்தைகள் உளவியல் ரீதியான குழப்பங்களுக்கும், பாதுகாப்பற்ற உணர்வுக்கும் ஆளாக நேரிடலாம்.

இதையும் படியுங்கள்:
சிங்கிள் மதரா நீங்க? சமூகம் வைக்கும் விமர்சனங்களைச் சமாளிப்பது எப்படி?
divorce reasons in India

சமூக மற்றும் பொருளாதார சிக்கல்கள்: 

குடும்ப உறவுகளின் மீதான நம்பிக்கை குறைவதோடு, கலாச்சார மாற்றங்களும் ஏற்படுகின்றன. அத்துடன் இந்தியாவில் விவாகரத்து என்பது இன்றும் குடும்பங் களுக்குப் பெரிய சமூக அழுத்தத்தை ஏற்படுத்துகிறது. குறிப்பாக பொருளாதார ரீதியாகப் பின்தங்கிய பெண்களுக்கு ஜீவனாம்சம் கிடைப்பதில் தாமதம் போன்ற சட்ட சிக்கல்கள் ஆபத்தாக முடிகிறது.

ஒட்டுமொத்தமாகப் பார்க்கும்போது விவாகரத்து அதிகரிப்பது சமூக கட்டமைப்புக்கு ஒரு சவாலாகத் தெரிந்தாலும், தனிமனிதனின் சுதந்திரம் மற்றும் நல்வாழ்வுக்கு இது ஒரு அவசியமான தீர்வாகவே விளங்குகிறது. திருமணத்திற்கு முந்தைய புரிதலும், திருமணத்திற்கு பிந்தைய விட்டுக் கொடுத்தலும் விவாகரத்தின் எண்ணிக்கையை வெகுவாக குறைக்க உதவும்.

ஆனால் இன்றைய காலகட்டத்தில் விட்டுக்கொடுக்கும் மனப்பான்மை குறைந்து வருவதாலும், திருமணத்துக்கு தேவையான முக்கிய புரிதலின்மை போன்ற காரணங்களாலும் விவாகரத்துகள் அதிகரித்து வருகின்றன. விவாகரத்து என்பது விரும்பத்தக்கது அல்ல என்றாலும், தீவிரமான பாதிப்புகளைத் தவிர்க்கும்போது அது சரியான முடிவாகவும் பார்க்கப்படுகிறது.

logo
Kalki Online
kalkionline.com