வீட்டை விட்டு வெளியேறும் முன் சிங்க்கில் ஒரு பேப்பரை வைத்தால் நடக்கும் மேஜிக்கைப் பாருங்கள்!

Sink Maintenance
Sink Maintenance
Published on

வீட்டு வேலைகள் என்றாலே பெரும்பாலும் சமையல் செய்வது, வீட்டைச் சுத்தம் செய்வது போன்ற பெரிய விஷயங்கள்தான் நமது நினைவுக்கு வரும். ஆனால், சில நேரங்களில் மிகச் சிறிய, ஒரு எளிய பழக்கம் நமது அன்றாட வாழ்க்கையில் பெரிய மாற்றத்தை ஏற்படுத்தும். 

வீட்டை விட்டு வெளியே கிளம்பும் போது, சமையலறை சிங்க்கில் ஒரு காலி டம்ளரையும், ஒரு சிறிய காகிதத்தையும் வைத்துவிட்டுச் செல்லும் ஒரு வித்தியாசமான பழக்கத்தைப் பற்றித்தான் நாம் இங்கே பார்க்கப் போகிறோம். கேட்பதற்கு இது சற்று வேடிக்கையாக இருந்தாலும், இதனை தொடர்ந்து செய்பவர்கள் இதனால் நிறைய நேரம் மிச்சமாவதாக கூறுகிறார்கள்.

காகிதம் செய்யும் ரகசிய வேலை!

இந்த சுவாரஸ்யமான பழக்கத்தை தொடங்குவது மிகவும் எளிது. நீங்கள் அலுவலகத்திற்கோ அல்லது வெளியே எங்காவது செல்லும்போதோ, சிங்க்கை காலியாக வைத்துவிட்டு, அதன் அடியில் ஒரு சாதாரண காகிதத்தை விரித்து வையுங்கள். அது பழைய காகிதமாகவோ அல்லது தேவையில்லாத உறையாகவோ இருக்கலாம். அதன் அருகிலோ, அதன் மீதோ ஒரு சுத்தமான கண்ணாடிக் கிளாசை வைத்துவிட்டு செல்லுங்கள்.

நாம் மாலையில் திரும்பி வரும்போது அந்த காகிதம் எப்படி இருக்கிறது என்பதை வைத்து பல விஷயங்களை நொடிப்பொழுதில் கண்டுபிடித்துவிடலாம். காகிதம் முற்றிலும் காய்ந்து இருந்தால் குழாயில் எந்த பிரச்னையும் இல்லை என்று பொருள். ஒருவேளை அதில் தண்ணீர் கரைகளோ, வேறு நிறத்திலோ ஈரமாக இருந்தால், குழாயில் மெதுவாக தண்ணீர் கசிகிறது என்பதை நாம் உடனடியாக புரிந்துகொள்ளலாம். இதற்காக விலை உயர்ந்த சென்சார்கள் எதுவும் தேவையில்லை.

இதையும் படியுங்கள்:
காகிதம் முதல் காத்தாடி வரை: உலகையே மாற்றிய 10 சீனக் கண்டுபிடிப்புகள்!
Sink Maintenance

டம்ளரின் பயன்!

காகிதம் தண்ணீர் கசிவைக் கண்டுபிடிக்க உதவுகிறது என்றால், அந்த டம்ளர் மற்றொரு முக்கியமான வேலையைச் செய்கிறது. பொதுவாக சிங்க் காலியாக இருந்தால், நாம் சாப்பிட்ட தட்டுகளையும், தேநீர் குடித்த கோப்பைகளையும் அப்படியே அதில் போட்டுவிட்டு செல்வது நமது வழக்கம். ஒரு தட்டு இரண்டு தட்டாகி, பின்பு பெரிய மலையாக மாறிவிடும். 

ஆனால், அங்கே ஒரு பேப்பரும், டம்ளரும் நேர்த்தியாக இருப்பதைப் பார்க்கும்போது, நமது மனம் தானாகவே அந்த இடத்தை குப்பையாக்க தயங்கும். வீட்டில் உள்ள மற்றவர்களும் இதை கவனித்துவிட்டு, பாத்திரங்களை சிங்க்கில் வீசாமல் முறையாக தண்ணீர் ஊற்றி ஓரமாக வைப்பார்கள். இதனால், நீங்கள் சோர்வாக வீடு திரும்பும் போது பெரிய அளவில் பாத்திரங்களைச் சுத்தம் செய்ய வேண்டிய அவசியம் இருக்காது.

அவசரமாக வீட்டைப் பூட்டிவிட்டு கிளம்பிய பிறகு, தண்ணீர் குழாயை சரியாக மூடினோமா என்ற எண்ணம் நம்மில் பலருக்கு வரும். இப்படிப்பட்ட தேவையற்ற மன உளைச்சலைத் தவிர்க்க இந்த சிறிய தந்திரம் பெரிதும் உதவுகிறது. தினமும் இந்த பழக்கத்தை கடைப்பிடிக்கும் போது, தண்ணீர் வீணாவது தடுக்கப்படுவதுடன், கசிவுகளால் வீட்டின் சுவர்கள் பாழாவதும் முன்கூட்டியே தடுக்கப்படுகிறது.

இதையும் படியுங்கள்:
பிஃபா தீம் பாடலை உருவாக்கிய மயிலாடுதுறை இளைஞர்கள்!
Sink Maintenance

குறிப்பாக அடிக்கடி வெளியூர் பயணம் செல்பவர்களுக்கும், பல பேருடன் தங்கியிருப்பவர் களுக்கும் இந்த முறை ஒரு சிறந்த தீர்வாக அமையும். எனவே, நீங்களும் நாளை காலை வெளியே கிளம்பும் போது இந்த எளிய முறையை முயற்சி செய்து பாருங்கள், உங்கள் அன்றாட வேலைப்பளு பெருமளவு குறைவதை நீங்களே உணர்வீர்கள்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com