மழை பெய்யும் சமயம் மின்சாரத்திடமிருந்து பாதுகாப்பாக இருக்க சில ஆலோசனைகள்!

Rainy season electricity safety
Rainy season electricity safety
Updated on

ழைக்காலம் தொடங்கி விட்டது. புயல், வெள்ள எச்சரிக்கைகளும் விடுக்கப்படுகின்றன. மழைக்காலத்தில் மின்சாரத்திடமிருந்து நம்மைப் பாதுகாப்பாக காத்துக்கொள்வது எப்படி என்பதை இந்தப் பதிவில் காண்போம்.

* மழை பெய்யும் இந்த சீசனில், சரியாக செயல்படாத மின் விளக்குகள், சுவிட்சுகள், மின் சாதனங்களை முறையாகப் பழுது பார்த்தல் வேண்டும்.

* மின்சார வயரிங் வேலைகளை மழைக்கு முன்னரே செய்து விட வேண்டும். திடீரென பழுதுபடும் மின் சாதனங்களை முறையாக அங்கீகாரம் பெற்ற அல்லது நன்கு வேலை தெரிந்த எலெக்டீஷியனைக் கொண்டே செய்ய வேண்டும்.

இதையும் படியுங்கள்:
அன்றாட வாழ்வில் உதவும் 15 கேபிள் டை டிப்ஸ்!
Rainy season electricity safety

* ஸ்விட்சுகள், மின்விசிறி என எந்த மின் சாதனங்களுக்கும் ஐ.எஸ்.ஐ. முத்திரை உள்ளதா என சரிபார்த்து அதை மட்டுமே வாங்க வேண்டும். விலை சற்று கூடுதலாக இருந்தாலும் தரமான கம்பெனி பொருட்களையே வாங்க வேண்டும்.

* மின்சார பிளக்குகளை பொருத்துவதற்கு முன்னரும் எடுப்பதற்கு‌ முன்பும் சுவிட்சை அணைத்து விட வேண்டும்.

* உடைந்த ஸ்விட்சுகள், பிளக்குகளை உடனே மாற்றுவதோடு, அதில் ஒட்டோ, பிளாஸ்டர்ஸ் போட்டு உபயோகிப்பதைத் தவிர்க்க வேண்டும்.

* கேபிள் டிவி ஒயர்களை மேல்நிலை கம்பிகளுக்கு அருகில் கொண்டு செல்லக் கூடாது. ஸ்விட்சுகள், பிளக்குகளை குழந்தைகளுக்கு எட்டாத உயரத்தில் அமைக்க வேண்டும்.

* வீட்டு ஒயரிங்குகளை அவ்வப்போது சரிபார்ப்பது தேவையெனில் ஐந்து ஆண்டுகளுக்கு ஒருமுறை மாற்றி விடுங்கள்.

* மின்சார கம்பத்துக்காகப் போடப்பட்ட ஸ்டே வயரின் மீதோ அல்லது மின் கம்பத்தில் மீதோ கொடி கட்டி துணி காயப் போடுவதை கண்டிப்பாகச் செய்யக்கூடாது.

* கால்நடைகளை கட்டுவதையும் அதன் மீது விளம்பர பலகைகளை கட்டுவதையும் தவிர்க்க வேண்டும்.

* மழைக்காலத்தில் மின் மாற்றிகள், மின் கம்பங்கள், மின் பகிர்வு பெட்டிகள், ஸ்டே வயர்கள் ஆகியவற்றின் அருகே செல்லாதீர்கள்.

இதையும் படியுங்கள்:
வாஷிங் மெஷினில் துர்நாற்றமா? பிளாக் மோல்டை நீக்கி, பளபளப்பாக்க ஈஸி டிப்ஸ்!
Rainy season electricity safety

* மழை, காற்றால் மின்சார கம்பி அறுந்து விழுந்துள்ளது எனில் அதன் அருகே செல்வதோ, அதை எடுக்க முயற்சிப்பதோ கூடாது. மின்சார அலுவலர்களை தொடர்பு கொண்டு தெரிவிப்பது அவசியம்.

* வீட்டுக்கருகில் மேல்நிலை மின்சார கம்பிகளுக்கு அருகில் வளர்ந்திருக்கும் நம் வீட்டின் மரக்கிளைகளையோ, செடிகளையோ நாமே வெட்ட முயற்சிக்கக் கூடாது.

* பழைய மின் சாதனங்கள், கிரைண்டர், அயர்ன் பாக்ஸ் உபயோகிக்கும்போது காலில் ரப்பர் செருப்பு அணிந்து கொண்டு செய்வது நல்லது.

* மழை, இடி உள்ள சமயங்களில் செல்போன் உபயோகிப்பதையும், சார்ஜ் போடுவதையும் தவிர்க்க வேண்டும். அச்சமயம் ஏசி, வாட்டர் ஹீட்டர் ஸ்விட்சுகள் இயக்காமல் இருப்பது நல்லது.

இதுபோன்ற பாதுகாப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ள மழைக்காலத்திலும் பாதுகாப்பாக இருக்கலாம்.

மகாலெட்சுமி சுப்ரமணியன்

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com