வாழ்க்கை ஜம்முன்னு இருக்க இந்த 10 விஷயத்தை செஞ்சி பாருங்க!

Try these 10 things to make life smoother
Try these 10 things to make life smootherhttps://dingfasafe.cn
நான்சி மலர்

வணக்கம். என் பெயர் நான்சி மலர். என்னைப் பற்றி தெரிந்து கொள்ள ஆர்வம் காட்டியதற்கு நன்றி. நான் B.E. Computer science Engineering முடித்துள்ளேன். எனக்கு சிறுவயது முதலே எழுதுவதில் அதிக ஆர்வம் உண்டு. ‘எழுத்துக்கள் மூலம் நம் எண்ணங்களை எளிதில் வெளிப்படுத்த முடியும்’ என்று நம்புகிறேன். கட்டுரைகள், கவிதைகள் எழுதுவதில் அனுபவம் உண்டு. Content writing துறையில் சாதிக்க வேண்டும் என்ற ஆர்வம் உள்ளது. மோட்டிவேஷன், பயணம், ஆரோக்கியம், ஃபேஷன், ஆன்மீகம் போன்ற கட்டுரை எழுதுவதில் ஆர்வம் அதிகம். என்னுடைய எழுத்து வாசகர்களாகிய உங்களை கவர்ந்தால், அது எனக்கு மகிழ்ச்சியே! ‘ இன்னும் எதிர்காலத்தில் உங்கள் மனதில் என் எழுத்துக்கள் மூலம் இடம் பிடிப்பேன்’ என்று முழுமையாக நம்புகிறேன்.

Updated on

சுப்பேத்துறவங்க கிட்ட உம்முன்னும் கடுப்பேத்துறவங்க கிட்ட கம்முன்னும் இருந்தால், வாழ்க்கை சும்மா ஜம்முன்னு போகும். அப்படி ஜம்முன்னு போக இந்த 10 விஷயத்தை ஃபாலோ பண்ணுங்க.

* உங்களை யார் புகழ்ந்தாலும் சரி, இகழ்ந்தாலும் சரி அமைதியாகவே இருங்கள். புகழ்ச்சியை தலைக்கும், இகழ்ச்சியை மனதிற்கும் எடுத்துச் செல்ல வேண்டாம்.

* உலகத்திற்காகவோ, அடுத்தவர்களுக்காகவோ, உறவுக்காகவோ வாழ்வதை நிறுத்துங்கள். உங்களுக்காக வாழ கற்றுக்கொள்ளுங்கள்.

* நம் வாழ்க்கையில் எதுவும் நிரந்தரமற்றது. எல்லாமே மாறக்கூடியதாகும். அன்பு, பாசம், மனிதர்கள் ஆகியவையும் இதில் அடங்கும் என்பதை நினைவில் வைத்துக்கொள்ளுங்கள்.

* வாழ்க்கையில் எப்போதுமே பூக்களை கொண்ட பாதைகள் மட்டுமே அமைவதில்லை. மேடு, பள்ளங்கள் இருக்கத்தான் செய்யும். நாம்தான் அதற்கு ஏற்றாற்போல வாழக் கற்றுக்கொள்ள வேண்டும்.

* ஈசலின் வாழ்க்கை ஒருநாள்தான். இறப்பு என்பதை பூமியில் பிறந்த எல்லோருமே எதிர்க்கொண்டுதான் ஆகவேண்டும். இறப்பை பற்றி நினைத்து கவலைப்பட்டால் இன்றைக்கான வாழ வேண்டிய நாள் நரகமாகிவிடும். எனவே, நிகழ்காலத்தை மகிழ்ச்சியாக மாற்றிக்கொள்ளுங்கள்.

* பணம் என்பது வருவதும், போவதுமாகவே இருக்கும். பணம் நிலைத்திருக்கும் தன்மைக்கொண்டதல்ல. ஆனால், நல்ல மனிதர்கள் அப்படியில்லை. அவர்கள் நம் வாழ்வில் நிலையானவர்கள். நிறைய பணம் சம்பாதிப்பதைக் காட்டிலும் நல்ல மனிதர்களை சம்பாதிப்பதே முக்கியமாகும்.

* உங்களைப் பிடித்தவர்கள் எக்காரணம் கொண்டும் உங்களை விட்டு விலகப் போவதில்லை. ஆனால், உங்களை வேண்டாம் என்று நினைப்பவர்களை இறுக்க பிடித்துக்கொள்ள தேவையில்லை. அவர்கள் போக வேண்டும் என்று நினைத்தால், போக விடுங்கள்.

* எதிர்ப்பார்ப்பு என்பது மனித குணமே! அடுத்தவர்களிடமிருந்து எதிர்ப்பார்ப்பதை முடிந்த வரை நிறுத்திக்கொள்ள பாருங்கள். அப்போதுதான் வாழ்வில் ஏமாற்றமும் குறைவாகவே இருக்கும்.

இதையும் படியுங்கள்:
எதற்கெடுத்தாலும் எரிச்சல்படும் மனநிலையை மாற்றுவது எப்படி?
Try these 10 things to make life smoother

* முடிந்தவரை அதிகம் பேசுவதை குறைத்துக்கொள்ளுங்கள். அடுத்தவர்களின் செயலை உன்னிப்பாகக் கவனியுங்கள். அது உங்களுக்கு சொல்லிக் கொடுக்கும் பாடங்கள் ஆயிரம்.

* அழகிய முகத்தையும், இனிமையான பேச்சையும் நம்ப வேண்டாம். இரண்டுமே காலத்திற்கு ஏற்றது போல மாறக்கூடிய தன்மை கொண்டவை. ஒருவரின் குணத்தைப் பார்த்து பழகுவதே சிறந்ததாகும்.

logo
Kalki Online
kalkionline.com