

வாஸ்து சாஸ்திரம் என்பது நேர்மறை எண்ணங்களை உருவாக்கும் ஒரு வகையான முயற்சியின் ஆரம்பமாகும். சில சமயங்களில் நாம் ஏதேச்சையாக மாற்றி வைத்த அல்லது வாங்கி வந்த பொருட்கள், அவற்றை வைக்கும் இடம் மற்றும் திசை ஆகியவை சேர்ந்து நமக்கு ஒரு சுறுசுறுப்பையும் மன அமைதியையும் ஏற்படுத்தும். அதை நாம் அதிர்ஷ்டம் அல்லது ராசி என்று சொல்வோம்.
நாம் எல்லோரும் நமது வீட்டை அழகாக வைத்திருக்க பலவிதமான முயற்சிகள் செய்து அலங்கரிப்போம். அப்படி செய்யும் போது சில இடங்களில் வாஸ்து முறைக்கு ஏற்ப சில பொருட்களை வீட்டில் வைத்தால் அது அலங்காரம் மட்டும் அல்லாமல் நல்ல ஆற்றல், அமைதி மற்றும் செல்வத்தை கொடுக்க வல்லது என்று கூறுகின்றனர்.
இந்த 9 பாரம்பரிய பொருட்கள் வீட்டினுள் நேர்மறை எண்ணங்களை பரவ உதவுகின்றன என்று வாஸ்து நிபுணர்கள் கூறுகின்றனர்.
செல்வ செழிப்பை அள்ளித்தரும் அத்தியாவசிய வாஸ்து பொருட்கள்
1. சிறிய உட்புற நீர் நீரூற்று (Small Indoor Water Fountain)
வீட்டில் பாயும் தண்ணீர் நல்ல ஆற்றலை தரும் என்று வாஸ்து கூறுகிறது. ஹாலின் வடக்கு அல்லது கிழக்கு மூலையில் ஒரு சிறிய நீர் நீரூற்று வைத்தால் அமைதியான சூழல் கிடைக்கும். தண்ணீர் வீட்டுக்குள் நோக்கி பாயவேண்டும்.
2. உலோக அல்லது படிக ஆமை (Metal or Crystal Tortoise)
பித்தளை அல்லது படிக ஆமை பொறுமை மற்றும் நீண்ட ஆயுளைக் குறிக்கிறது. இதை ஒரு சிறிய கிண்ணத்தில் தண்ணீருடன் வடக்கு திசையில் வைத்தால் நல்லது. தண்ணீரை சில நாட்களுக்கு ஒருமுறை மாற்ற வேண்டும்.
3. சிரிக்கும் புத்தர் சிலை (Laughing Buddha Statue)
சிரிக்கும் புத்தர் சிலை மகிழ்ச்சி மற்றும் நல்ல அதிர்ஷ்டத்தை குறிக்கிறது. இதை வீட்டின் நுழைவாயில் கதவுக்கு எதிராக வைத்தால் வீட்டுக்குள் நல்ல ஆற்றல் வருவதாக நம்பப்படுகிறது.
4. இமயமலை உப்பு விளக்கு ( Himalayan Salt Lamp)
இளஞ்சிவப்பு நிற உப்பு விளக்குகள் வீட்டிற்கு அழகையும் அமைதியையும் தரும். இதை தென்மேற்கு பகுதியில் வைத்தால் எதிர்மறை ஆற்றலை குறைக்கும் என்று கூறப்படுகிறது.
படுக்கையறையிலும் வைக்கலாம். அதனால்தான் நம் முன்னோர்கள் உப்பை ஒரு குவளையில் போட்டு வீட்டின் நுழைவாயிலுக்கு அருகில் வைத்து இருப்பார்கள்.
5. ஜோடி யானை சிலைகள் (Pair of Elephant Statues)
யானைகள் ஞானம், சக்தி மற்றும் பாதுகாப்பை குறிக்கின்றன. தும்பிக்கை மேலே இருக்கும் இரண்டு யானை சிலைகளை வீட்டின் நுழைவாயிலுக்கு அருகில் வைக்கலாம்.
6. காற்று மணி (Wind Chimes)
உலோக காற்று மணிகள் காற்றில் ஒலி எழுப்பி வீட்டில் நல்ல ஆற்றலை பரப்பும். இதை வடக்கு அல்லது மேற்கு திசையில் தொங்கவிடலாம்.
7. மயில் இறகுகள்( Peacock Feathers)
மயில் இறகுகள் இந்திய கலாச்சாரத்தில் புனிதமாக கருதப்படுகின்றன. அவை எதிர்மறை ஆற்றலைத் தடுக்க உதவுகின்றன என்று நம்பப்படுகிறது. ஒரு கண்ணாடி குவளையில் 3 அல்லது 4 மயில் இறகுகளை வைத்து அலங்கரிக்கலாம்.
8. தியான புத்தர் சிலை (Meditating Buddha Statue)
தியான நிலையில் இருக்கும் புத்தர் சிலை அமைதி மற்றும் ஆன்மீகத்தை குறிக்கிறது. இதை வடகிழக்கு பகுதியில் ஒரு மேசை அல்லது அலமாரியில் வைக்கலாம். தரையில் நேராக வைக்கக் கூடாது.
9. கோமதி சக்கர மரம் (Gomati Chakra Tree)
இது செம்பு கம்பியால் செய்யப்பட்ட சிறிய மர வடிவம். அதில் கோமதி சக்கரம் எனப்படும் ஓடுகள் இருக்கும். இது நல்ல ஆற்றல் மற்றும் செழிப்பை தரும் என்று நம்பப்படுகிறது. இதை படுக்கையறை அல்லது பக்க மேசையில் வைக்கலாம்.
வீட்டில் வாஸ்து பொருட்களை வைப்பது என்பது பெரிய மாற்றங்கள் செய்யாமல் நல்ல ஆற்றலை ஏற்படுத்த உதவும். ஒரு நீர் நீரூற்று, உப்பு விளக்கு அல்லது காற்று மணி போன்ற சிறிய பொருட்களையும் சரியான இடத்தில் வைத்தால் வீட்டில் அமைதி மற்றும் செழிப்பு அதிகரிக்கும்.
சிறு முயற்சி ஒரு பெரிய நல்ல மாற்றத்தை ஏற்படுத்தும் என்றால், அதனை செய்து வீட்டில் மகிழ்ச்சியான நேர்மறை எண்ணங்கள் பெருகி பரவச் செய்வோமே.
இந்த எளிய வாஸ்து மாற்றங்களைச் செய்வதன் மூலம், உங்கள் இல்லத்தில் தேங்கியிருக்கும் எதிர்மறை ஆற்றல் விலகி, குடும்ப உறுப்பினர்களிடையே அன்பும், நிதி நிலையில் அசுர வளர்ச்சியும், மனதிற்கு இதமான அமைதியும் நிரந்தரமாகக் குடியேறுவதை நீங்கள் உணர்வீர்கள்.