ஆண் குழந்தைகளின் எதிர்காலமும், பெற்றோர்களின் பங்களிப்பும்! 

Parent Children
Parent Children
Published on

ஒவ்வொரு குழந்தையும் ஒரு தனித்துவமான மரம் போன்றவர்கள். அந்த மரத்தை தொடக்கத்தில் எப்படி வளர்க்கிறோம் என்பதில்தான் அதன் எதிர்காலம் நிர்ணயிக்கப்படுகிறது. குறிப்பாக, ஆண் குழந்தைகளின் வளர்ப்பு என்பது சமூகத்தின் எதிர்காலத்தை வடிவமைக்கும் ஒரு முக்கிய பணி. ஆண் குழந்தைகளை சமூகத்திற்கு நன்மை பயக்கும் மனிதர்களாக வளர்க்க, பெற்றோர்கள் பல அம்சங்களை கவனத்தில் கொள்ள வேண்டும். 

  1. அன்பு, பாசம்: குழந்தைகள் தங்கள் பெற்றோரின் அன்புக்கு எப்போதும் ஆசைப்படுவார்கள். எனவே, அவர்களிடம் பாசத்தை வெளிப்படுத்துவது அவர்களின் மன உறுதியை அதிகரிக்கும். தன்னம்பிக்கையுடன் இருக்கவும், எதிர்காலத்தை எதிர்கொள்ள தயாராக இருக்கவும் இது அவர்களுக்கு உதவும்.

  2. முன்மாதிரி: குழந்தைகள், பெற்றோர்கள் சொல்வதைவிட, அவர்கள் செய்வதையே முன்மாதிரியாக எடுத்துக்கொள்வார்கள். எனவே, பெற்றோர்கள் நேர்மையாக, பொறுப்புணர்வுடன் நடந்துகொள்ள வேண்டும். அப்போதுதான் உங்களைப் போலவே உங்கள் குழந்தையும் ஆக ஆசைப்படுவார்கள். 

  3. கல்வி: கல்வி என்பது வாழ்க்கையில் வெற்றி பெற மிகவும் அவசியமான ஒன்று. குழந்தைகளுக்கு கல்வியின் முக்கியத்துவத்தை ஒவ்வொரு பெற்றோரும் வலியுறுத்துங்கள். குறிப்பாக ஆண் குழந்தைகள் இந்த சமூகத்தில் பல சவால்களை எதிர்கொள்ள நேரிடும் என்பதால், அவர்களுக்கு கல்வியில் ஆர்வம் ஏற்படும்படி ஊக்குவிக்கவும். 

  4. சுதந்திரம்: குழந்தைகளுக்கு வேண்டிய சுதந்திரத்தை அனுமதித்து, தங்கள் சொந்த முடிவுகளை எடுக்க ஊக்குவிக்கவும். அதேசமயம், அவர்களுக்கு பொறுப்பை கற்றுக் கொடுக்கவும். இது அவர்களை சுயமாக சிந்திக்கும் திறன் உள்ளவர்களாக மாற்றும். 

  5. உணர்வு பற்றிய புரிதல்: ஆண்கள் பொதுவாகவே தங்கள் உணர்ச்சிகளை வெளிப்படுத்துவதில் சிரமப்படலாம். எனவே, உணர்வுகள் சார்ந்த புரிதல் அவர்களுக்கு மிகவும் முக்கியமானது. குழந்தைகளுக்கு தங்கள் உணர்ச்சிகளை அடையாளம் கண்டு அதை வெளிப்படுத்த பெற்றோர்கள் கற்றுக்கொடுக்கவும். 

  6. ஆரோக்கியம்: ஆரோக்கியமான உடல் மற்றும் மனம் என்பது வெற்றிகரமான வாழ்க்கைக்கு அடித்தளமாகும். எனவே, குழந்தைகளுக்கு ஆரோக்கியமான உணவுப் பழக்கங்கள் மற்றும் உடற்பயிற்சியின் முக்கியத்துவத்தை கற்றுக் கொடுக்கவும்.‌

  7. சமூகம்: உங்கள் குழந்தை இந்த சமூகத்தின் ஒரு பகுதியாக இருக்க ஊக்குவிக்கவும். மற்றவர்களுடன் இணைந்து பணியாற்ற அவர்களுக்கு கற்றுக் கொடுக்கவும். இது அவர்களுக்கு சமூகத் திறன்களை வளர்க்க உதவும்.

இதையும் படியுங்கள்:
குழந்தைகளைப் பெற்றெடுக்கும் அதிசய ஆண் கடல்வாழ் உயிரினம் எது தெரியுமா?
Parent Children

ஆண் குழந்தைகளின் எதிர்காலத்தை உருவாக்குவது என்பது பெற்றோர்களின் கையில் உள்ள பெரிய பொறுப்பு. அவர்களுக்கு நல்ல கல்வி, நல்லொழுக்கம், நல்ல பழக்க வழக்கங்கள் ஆகியவற்றை வழங்குவதன் மூலம், அவர்களை சிறந்த குடிமகன்களாக மாற்ற முடியும். எனவே, ஒவ்வொரு குழந்தையின் தேவைகளையும் பூர்த்தி செய்யும் வகையில், பெற்றோர்கள் தங்கள் வளர்ப்பு முறைகளை மாற்றிக்கொள்ள வேண்டும். 

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com