காகம் ஓயாமல் கரைந்தால் கெட்ட சகுனமா? ஆன்மீகமும் அறிவியலும் சொல்லும் உண்மை!

முன்னோர்களின் ஆசியா அல்லது ஆபத்தின் எச்சரிக்கையா? காகத்தின் குரலுக்குப் பின்னால் இருக்கும் சுவாரஸ்ய ரகசியம்.
காகம்
காகம்Gemini image
கே.எஸ்.கிருஷ்ணவேனி

Iam a graduate from Vaishnav College in the year 1984. My writings were published in Mangayar Malar,Aval Vikadan,Kumudham Sneghethi since 1992 and received many prizes. Now I am writing in Kalki Publications. Cooking, writing, playing Shuttle cock & making fur dolls are my passions.

Updated on

நம்முடைய அன்றாட வாழ்வில் தினம் தினம் காணும் பறவை காகம். இது நம்முடைய இறந்த முன்னோர்களின் அம்சமாகத் திகழ்வதால், நம் முன்னோர்களின் நினைவு நாட்களில் காகத்திற்கு அன்னம் வைப்பது சிறப்பு என்று கூறப்படுகிறது. இன்றைக்கும் கிராமப்புறங்களில் காகம் ஓயாது கரைந்தால் விருந்தினர் வரப்போவதற்கான சகுனம் என்று சொல்வார்கள். பயணிக்கும் ஒருவரை நோக்கி காகம் கரைந்து கொண்டே பறந்து வந்தால், ஆபத்து ஏற்படும் என்றும், பயணத்தை தவிர்த்து விட வேண்டும் என்றும் சொல்வார்கள். அதுவே ஒரு காகம் மற்றொரு காகத்திற்கு உணவு ஊட்டும் காட்சியைக் கண்டால் பயணம் இனிதாகும் என்றும் கூறுவார்கள்.

காகம் தொடர்ந்து கத்துவதற்குப் (கரைவதற்கு) பின்னால் ஆன்மீக சாஸ்திர நம்பிக்கைகளும், அறிவியலும் வெவ்வேறு காரணங்களையும் விளக்கங்களையும் தருகின்றன. இந்து சாஸ்திரங்கள் மற்றும் சகுன நூல்களின்படி, காகம் கத்துவதற்குப் பல்வேறு பலன்கள் கூறப்படுகின்றன. 

1. சாஸ்திர ரீதியான நம்பிக்கைகள்:

இந்து சாஸ்த்திரத்திலும், சகுன சாஸ்திரத்திலும் காகம் ஒரு முக்கியமான பறவையாகக் கருதப்படுகிறது. இது சனீஸ்வரனின் வாகனமாகவும், நம் முன்னோர்களின் வடிவமாகவும் பார்க்கப்படுகிறது.

விருந்தினர் வருகை: 

நம் வீட்டின் வாசலையோ அல்லது சுவரையோ நோக்கி அமர்ந்து காகம் தொடர்ந்து கத்தினால் வீட்டிற்கு உறவினர்கள் அல்லது விருந்தினர்கள் வரப்போகிறார்கள் என்பது காலம் காலமாக நம்பப்படும் பொதுவான சகுனம் ஆகும். 

காகம்
காகம்Gemini image

பயணம் மற்றும் நல்ல செய்தி: 

காகம் காலை நேரத்தில், சூரிய உதயத்திற்குப் பின்பு இனிமையாகக் கரைந்தால், அது நல்ல செய்திகள், பணவரவு அல்லது சுப காரியங்கள் நடக்கப் போவதைக் குறிப்பதாக நம்பிக்கை உள்ளது. காகம் கிழக்கு நோக்கி அமர்ந்து கத்தினால் நல்ல செய்திகளும், தெற்கு நோக்கி கத்தினால் பயணங்கள் அல்லது லாபமும் கிடைக்கும் என்று கூறப்படுகிறது. 

இதையும் படியுங்கள்:
உங்கள் வீட்டுக்குள் பூனை தானாக வருகிறதா? நீங்கள் கோடீஸ்வரன் ஆவது உறுதி!
காகம்

திசைகளின் பலன்கள்: 

காகம் கரையும் திசையை வைத்தும் பலன்கள் மாறுபடும் என்று சொல்லப்படுகிறது. உதாரணமாக கிழக்கு நோக்கி கரைந்தால் அரசாங்க ஆதரவு மற்றும் லாபமும், தெற்கு நோக்கிக் கரைந்தால் சில இடர்பாடுகளும் வரலாம் என்றும் கூறப்படுகிறது.

பித்ருக்களின் ஆசி: 

காகம் எமதர்மன் மற்றும் முன்னோர்களின் (பித்ருக்கள்) வாகனமாகக் கருதப்படுகிறது. எனவே அது கத்துவது முன்னோர்கள் தங்களுக்கு உணவு வைக்குமாறு நினைவூட்டுவதாகவும், அவர்களின் ஆசி நமக்கு கிடைப்பதன் அடையாளம் என்றும் நம்பப்படுகிறது. எனவே காகத்திற்கு ஒரு கைப்பிடி சாதம் வைப்பது பித்ரு தோஷங்களை நீக்கும்.

2. அறிவியல் ரீதியான காரணங்கள்: 

அறிவியல் பூர்வமாக காகங்கள் மிகவும் புத்திசாலித்தனமான மற்றும் சமூகக் கூட்டமாக வாழும் பறவைகள் ஆகும். இவை தொடர்ந்து கத்துவதற்கு பல காரணங்கள் கூறப்படுகின்றன. 

ஆபத்து எச்சரிக்கை: 

வீட்டின் அருகிலோ அல்லது மரத்திலோ காகத்தின் அருகில் பூனை, பருந்து, கழுகு அல்லது பாம்பு போன்ற வேட்டையாடும் எதிரி விலங்குகளின் நடமாட்டம் இருந்தால், அது தன் கூட்டத்திற்கு ஆபத்தை எச்சரிக்கவும், அந்த எதிரிகளை பயமுறுத்தவும் உரத்த குரலில் தொடர்ந்து கத்தும்.

இதையும் படியுங்கள்:
சகுனமா அல்லது இயற்கையின் அதிசயமா? வீட்டில் குளவி கூடு கட்டுவதன் நிஜ பின்னணி!
காகம்

உணவு இருப்பிடம்: 

ஒரு காகம் புதிய உணவு ஆதாரத்தைக் கண்டறிந்தால் மற்ற காகங்களையும் உணவை பகிர்ந்து உண்பதற்கு அழைப்பதற்காக தொடர்ந்து கத்தும்.

தொடர்பு கொள்ளுதல்: 

காகங்கள் தங்களுக்குள் பேசிக் கொள்ளும் (communication). தன் துணையை அழைக்கவோ அல்லது குஞ்சுகளுக்குப் பயிற்சி அளிக்கவோ அவை தொடர்ந்து சத்தமிடும். 

எல்லை பாதுகாப்பு: 

பிற பறவைகள் தன் எல்லைக்குள் அல்லது கூட்டின் அருகில் வரும் பொழுது அவற்றை விரட்டுவதற்காக காகங்கள் சத்தமாக கத்தும். தனது கூட்டை பாதுகாக்கவும், பிற பறவைகள் தன் எல்லைக்குள் வராமல் தடுக்கவும் சத்தமிடும்.

காகம் தொடர்ந்து கரைவதற்கு பின்னால் இருக்கும் சாஸ்திர நம்பிக்கைகள் மற்றும் அதன் பின்னணியில் உள்ள அறிவியல் காரணங்களை விரிவாக அறிந்து கொண்டு தெளிவு பெறலாம்.

logo
Kalki Online
kalkionline.com