வாழ்க்கை தத்துவம் பேசும் வலை வீச்சுகள் 20!

motivation image
motivation imageImage credit - pixabay.com
கலைமதி சிவகுரு

I am so thankful for kalki in my life. I am graduate from Holy Cross college in Nagercoil in the year 1983.I also tailaring work and make some bags, pouches. My writing were published in mangayarmalar, and Devathai, kudumbamalar with thinathanthi and received some prizes. Now I am writing in kalki publications. Cooking, Writing, reading anmigam books, playing chess are my hobbies.

Updated on

* வாழ்க்கை கால்பந்து விளையாட்டுபோல! நீங்கள் ஒரு கோல். 10 பேர் உதவவும், 11 பேர் எதிர்க்கவும் செய்வார்கள்.

* கடவுள் எல்லாக் கதவுகளையும் அடைத்துவிட்டாரே என்று கவலைப்படாதே. ஒருவேளை வெளியே புயலாக இருக்கலாம்.

* புத்தகங்களை மூலையில் போடாமல் மூளையில் போடுங்கள்.

* வாழ்க்கையில் சந்தோஷங்களைவிட கஷ்டங்கள் நல்ல படிப்பினைகளைச் சொல்லிக் கொடுக்கின்றன.

* கடுமையான கஞ்சத்தனம், தகுதியற்ற தற்பெருமை, எல்லையற்ற பேராசை இந்த மூன்றும் மனிதனை நாசமாக்கிவிடும்.

* அர்த்தம் இல்லாமலும், சம்பந்தம் இல்லாமலும், பின் விளைவுகளை அறியாமலும், பேசுவதைவிட மவுனம் சிறந்தது.

* உதிர்ந்த இலைகள்தான் மரங்கள் வளர மீண்டும் உரமாகும். வாழ்க்கை துன்பங்களும் அதுபோலவே.

* அனைத்து துன்ப பூட்டுகளையும் திறக்க உதவும் திறவுகோல் அன்பு.

* குழந்தைங்க கெட்டுப்போறதே செல்ஃபோனால்தான். செல்ஃபோன் கெட்டுப்போறதே குழந்தைகளால்தான்.

* இழந்தால் சம்பாதிக்கக் கூடியது சொத்து, பணம். இழந்தால் சம்பாதிக்க முடியாதது நம்பிக்கையும், நாணயமும்.

* தீரப் போகும் சோப்பை புது சோப்போடு இணைத்து பயன்படுத்துவது நடுத்தர வர்க்கத்தின் பொருளாதாரக் கொள்கை.

*  சில நேரம் வழி தெரிந்தும் பயணிக்க முடிவதில்லை. ஆனால், பல நேரம் வழி தெரியாமலே பயணிக்கிறோம்.

* ஃப்ரிட்ஜில் வைப்பதில் மட்டுமல்ல. நட்புகளிலும்தான் புதிய வரவில் பழையதை மறந்துவிடுகிறோம்.

* கோடி வார்த்தைகளில் இருந்து துளித்துளியாய் சேமித்துக் கட்டப்பட்ட தேன்கூடு மவுனம்.

இதையும் படியுங்கள்:
தேங்காய்ப்பூவின் ஆரோக்கிய மகத்துவம்!
motivation image

* நொடி முள், நிமிட முள், மணி முள்ளின் ஓய்வில்லாத உழைப்பைக் காட்டத் தவறிவிட்டன டிஜிட்டல் கடிகாரங்கள்.

* ஒவ்வொரு துளி நீரையும் மதியுங்கள். அது தண்ணீராக இருந்தாலும் சரி, கண்ணீராக இருந்தாலும் சரி.

* படிக்கும்போது கணக்குக்காக பக்கத்தில் கடன் வாங்கியது வாழ்க்கையிலும் தொடர்கிறது.

* சிரிக்கத் திறக்கும் உதடுகள் வழியே துன்பங்கள் வெளியேறுகின்றன.

* குழந்தைகளுக்குக் கற்றுத் தர வேண்டியது எப்படி சிந்திக்க வேண்டும் என்பதையே. என்ன சிந்திக்க வேண்டும் என்பதை அல்ல.

* வயதான பிறகும் முகத்தில் புன்னகையுடன் இருக்கும் அனைவரும் வாழ்நாள் சாதனையாளர்களே.

logo
Kalki Online
kalkionline.com