தன்னம்பிக்கையை வளர்த்துக்கொள்ள வேண்டுமென்றால் கட்டாயம் சில முயற்சிகளில் ஈடுபட வேண்டும். அந்த முயற்சிகள் அனைத்துமே சற்று கடினமானவை என்றாலும், நீங்கள் அதனைக் கட்டாயம் மேற்கொள்ள வேண்டும். அதேபோல் தன்னம்பிக்கையை வளர்த்துக்கொள்ள சில எளிய வழிகளும் உள்ளன. அவை என்னவென்று பார்ப்போம்.
1. நீங்கள் செய்த சாதனைகளை எழுதி வைத்துக்கொள்ளுங்கள். சிறிய சாதனைகளையும் சேர்த்துதான்.
2. உங்கள் ஆரோக்கியத்தில் கவனம் செலுத்துங்கள்.
3. தினமும் தியானம் செய்யுங்கள்.
4. புது பழக்கங்களைக் கடைப்பிடிக்க ஆரம்பியுங்கள்.
5. சில ஆபத்துகள் நிறைந்த முயற்சிகளையும் துணிந்து எடுங்கள்.
6. எதிர்மறையான பேச்சுகளை கைவிடுங்கள். அதேபோல் அந்த பேச்சுகளை கேட்காமல் இருக்க முயற்சி செய்யுங்கள்.
7. முதலில் உங்களிடம் நீங்கள் அன்பாக நடந்துக் கொள்ளுங்கள்.
8. உண்மைகளை வெகுநாட்கள் எண்ணிக்கொண்டு குழப்பம் அடைந்துவிடாதீர்கள்.
9. சுமைகளை இறக்கி வைய்யுங்கள்.
10. வாசனைத் திரவியங்கள் பயன்படுத்துங்கள்.
11. உங்களைப் பிறருடன் ஒப்பிட்டுக் கொள்வதை நிறுத்துங்கள்.
12. நிராகரிப்பை ஏற்றுக்கொள்ளப் பழகுங்கள்.
13. போட்டியாளர்களை அதிகமாக வைத்துக் கொள்ளுங்கள்.
14. உங்களின் பலவீனங்களை கண்டுப்பிடித்து அதிலிருந்து பலவற்றை கற்றுக்கொள்ள முயற்சி செய்யுங்கள்.
15. நேரத்தை சரியாகப் பிரித்து பயன்படுத்துங்கள்.
16. காயமானால் நீங்களே உங்களை சரிப்படுத்திக் கொள்ளுங்கள்.
17. பணம் செலவு செய்வதில் திட்டம் செய்துக்கொள்ளுங்கள்.
18. முதலில் சிறு முயற்சிகளை செய்யுங்கள். அதேபோல் முதலில் சிறு பிரச்சனைகளிலிருந்து வெளியே வர கற்றுக்கொள்ளுங்கள்.
19. உங்களுக்கு நீங்களே சவால் விட்டுக்கொள்ளுங்கள்.
20. உங்கள் மனநிலையை திடமாக வைத்துக்கொள்வதற்கு தேவையான அனைத்தையும் செய்யுங்கள்.
21. நடக்கும்போது நிமிர்ந்து நடக்கப் பழகுங்கள்.
22. ‘வேண்டாம்’ என்று சொல்லி பழகுங்கள்.
23. உங்கள் மரியாதையை பாதுகாத்துக் கொள்ளுங்கள்.
24. உங்களுக்கு எந்த உடையில் நம்பிக்கைப் பிறக்கிறதோ அந்த உடையை உடுத்திக்கொள்ளுங்கள்.
25. போதுமான அளவு பணத்தை உங்களுக்கு செலவழித்துக் கொள்ளுங்கள்.
இந்த இருபத்தைந்து விஷயங்களில் சரியாக நடந்துக்கொண்டாலே தானாக உங்களுக்கு தன்னம்பிக்கை உணர்வு வளர்ந்துவிடும்