படிக்கவே போர் அடிக்குதா? டாப்பர்ஸ் யாரும் சொல்லாத அந்த 5 ரகசியங்கள் இதோ!

Tips for reading students
Tips for reading students
Published on

"நாளைக்கு எக்ஸாம் இருக்கு, ஆனா புத்தகத்தை எடுக்கவே மனசு வரலையே" - இந்தத் தவிப்பு நம்மில் பலருக்கும் இருக்கும். ஒரு பக்கம் இன்ஸ்டாகிராம் ரீல்ஸ் கூப்பிடும், இன்னொரு பக்கம் "கொஞ்ச நேரம் தூங்கலாம்" என்று கண்ணை சொக்கும். படிக்க உட்கார்ந்தால் மட்டும் இல்லாத வேலைகள் எல்லாம் ஞாபகத்துக்கு வரும். 

இது சோம்பேறித்தனம் இல்லை; இது நம் மூளையின் ஒரு விளையாட்டு. உங்கள் மூளையைச் கொஞ்சம் ஏமாற்றி, சுலபமாகப் படிக்க வைக்கும் அந்த 5 உளவியல் தந்திரங்களைப் பார்ப்போம்.

1. ஐந்து நிமிட விதி (The 5-Minute Rule)

இதுதான் இருப்பதிலேயே பெரிய பிரம்மாஸ்திரம். படிக்கப் பிடிக்காதபோது, உங்கள் மூளையிடம் ஒரு பொய் சொல்லுங்கள். "நான் ரொம்ப நேரம் படிக்கப் போவதில்லை, வெறும் 5 நிமிஷம் மட்டும் தான் படிப்பேன்" என்று சொல்லிக்கொண்டே புத்தகத்தை எடுங்கள். நம் மூளைக்குத் தொதங்கத்தான் கஷ்டமே தவிர, ஒருமுறை ஆரம்பித்துவிட்டால் அது பாட்டுக்கு ஓட ஆரம்பித்துவிடும். 5 நிமிஷம் என்று உட்கார்வீர்கள், ஆனால் அறியாமலே ஒரு மணி நேரம் படித்து முடித்திருப்பீர்கள்.

2. யானையை முழுசா முழுங்காதீங்க!

முழுப் புத்தகத்தையும் பார்த்தால் யாருக்குத்தான் பயம் வராது? "இவ்வளவு சிலபஸ் இருக்கே" என்று மலைக்காதீர்கள். ஒரு யானையை முழுசா சாப்பிட முடியாது, ஆனா சின்னச் சின்ன துண்டுகளா வெட்டினால் சாப்பிடலாம் இல்லையா? அதே டெக்னிக் தான். "இன்னைக்கு நான் இந்த ஒரு பாராகிராப் மட்டும் தான் படிப்பேன்" அல்லது "இந்த ரெண்டு கணக்கு மட்டும் போடுவேன்" என்று இலக்கைச் சிறிதாக்குங்கள். வேலை சின்னதாகத் தெரிந்தால், மூளை உற்சாகமாகிவிடும்.

இதையும் படியுங்கள்:
படிப்பது ஈஸிதான்! இந்த 8 கட்டுக்கதைகளை நம்பாதீங்க!
Tips for reading students

3. வாத்தியார் விளையாட்டு!

சும்மா மனப்பாடம் பண்ணுவது போர் அடிக்கும். அதுக்கு பதிலா, உங்க வீட்டுல இருக்கிற நாற்காலியோ அல்லது சுவரையோ மாணவர்களா நினைச்சுக்கோங்க. நீங்க படிச்சதை, ஒரு வாத்தியார் மாதிரி அவங்களுக்குச் சத்தமா சொல்லிக் கொடுங்க. யாருக்கோ பாடம் எடுப்பது போல நடிக்கும்போது, உங்களுக்குப் புரியாத விஷயங்கள் கூடத் தெளிவாகப் புரியும். படிப்பு சுமையா தெரியாது, ஒரு விளையாட்டா மாறிடும்.

4. இடத்தையும், உடையையும் மாற்றுங்கள்!

தயவுசெய்து படுக்கையில் படுத்துக்கொண்டே படிக்காதீர்கள். அது தூங்குவதற்கான இடம் என்று உங்கள் மூளைக்குத் தெரியும். அதனால் தானாகவே தூக்கம் வரும். எழுந்து, ஒரு மேஜையில் உட்காருங்கள். குளித்துவிட்டு, ஃப்ரெஷ்ஷாக உடையை மாற்றிவிட்டு உட்கார்ந்தால், ஒரு புது எனர்ஜி கிடைக்கும். இடம் மாறினால், மனநிலையும் மாறும்.

5. குட்டி லஞ்சம் கொடுங்க!

நமக்கு நாமே ஒரு சின்ன லஞ்சம் கொடுத்துக்கலாம். "இந்த ஒரு பாடத்தை முடிச்சுட்டா, ஒரு 10 நிமிஷம் போன் பார்ப்பேன்" அல்லது "ஒரு சாக்லேட் சாப்பிடுவேன்" என்று உங்களுக்கு நீங்களே ஒரு பரிசு அறிவித்துக்கொள்ளுங்கள். அந்தப் பரிசுக்காகவே உங்கள் மூளை வேகவேகமாகப் பாடத்தை முடிக்கும். இதைத்தான் 'போமோடோரோ' (Pomodoro) டெக்னிக் என்றும் சொல்வார்கள்.

இதையும் படியுங்கள்:
படிக்க உட்கார்ந்தால் கவனம் சிதறுதா? கவனம் சிதறாமல் படிப்பது எப்படி?
Tips for reading students

படிப்பது என்பது கஷ்டமான விஷயம் இல்லை, அதை நாம் அணுகும் விதத்தில்தான் எல்லாமே இருக்கிறது. மேலே சொன்ன இந்த ஐந்து தந்திரங்களையும் ஒருமுறை முயற்சி செய்து பாருங்கள். உங்களைப் பார்த்து "இவன் எப்போடா படிச்சான்?" என்று உங்கள் நண்பர்களே ஆச்சரியப்படும் அளவுக்கு மாற்றம் நிகழும். 

வெற்றியின் ரகசியம் கடின உழைப்பு இல்லை, புத்திசாலித்தனமான உழைப்புதான்… ஆல் தி பெஸ்ட்!

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com