பணம் சம்பாதிப்பது என்பது வாழ்க்கையில் ஒரு முக்கியமான அம்சமாகும். இது நமது அடிப்படை தேவைகளை பூர்த்தி செய்வதோடு மட்டுமல்லாமல், நமது வாழ்க்கைத் தரத்தை மேம்படுத்தவும், எதிர்காலத்திற்கு சேமிக்கவும், நம் அன்புக்குரியவர்களுக்கு உதவவும் பணம் தேவைப்படுகிறது. இருப்பினும் பல ஏழை மக்கள் பணம் சம்பாதிப்பது எப்படி என்பதைப் பற்றி போதுமான தெளிவில்லாமல் போராடுகிறார்கள். இந்தப் பதிவில் பணம் சம்பாதிப்பது பற்றி ஏழைகளுக்குத் தெரியாத சில முக்கிய விஷயங்கள் பற்றி பார்க்கலாம்.
பணம் சம்பாதிப்பது கடினம்: பல ஏழை மக்கள் பணம் சம்பாதிப்பது மிகவும் கடினம் என்பதை நம்புகிறார்கள். இதன் விளைவாக அவர்களால் அதிக பணம் சம்பாதிக்க முடியாது என்றெண்ணி முயற்சி செய்வதை நிறுத்தி விடுகின்றனர். உண்மையில் பணம் என்பது ஒரு சிறந்த வளமாகும். அதை சம்பாதிக்க பல்வேறு வழிகள் உள்ளன. இதை ஏழை மக்கள் நம்பினால் மட்டுமே பணம் சம்பாதிப்பதற்கான சாத்தியக்கூறுகளை அவர்கள் உருவாக்க முடியும்.
கடின உழைப்பு மட்டும் போதாது: பலர், பணம் சம்பாதிப்பதற்கு கடின உழைப்பு மட்டும் போதும் என நினைக்கிறார்கள். ஆனால் கடின உழைப்புடன் சரியான திறமை, அறிவு மற்றும் வாய்ப்புகள் தேவை என்பதை அவர்கள் உணர வேண்டும்.
சேமிப்பு மற்றும் முதலீடு: பல வறுமையில் வாழும் மக்கள் தங்கள் வருமானத்தை முழுவதுமாக செலவு செய்கிறார்கள். எதிர்காலத்திற்கு சேமிக்கவும் அல்லது முதலீடு செய்யவும் அவர்கள் திட்டமிடவில்லை. எனவே திடீரென ஏற்படும் எதிர்பாராத செலவுகளை சமாளிக்க முடியாமல் நிதிச் சிக்கலில் மாட்டிக் கொள்கின்றனர்.
பணம் சம்பாதிக்க பல வழிகள் உள்ளன: பணம் சம்பாதிக்க ஒரே விதமான வேலைகளை மட்டும் நம்பி இருக்காமல், பல வழிகள் உள்ளன என்பதை ஏழைகள் புரிந்துகொள்ள வேண்டும். சிறு வியாபாரம், ஃப்ரீலான்ஸ் வேலை, ஆன்லைன் வருமானம் போன்ற பல்வேறு வாய்ப்புகளை ஆராய்ந்து பார்த்து அவர்களுக்கு சரியானதைத் தேர்ந்தெடுத்து முயற்சிக்க வேண்டும்.
கல்வி மற்றும் திறன் வளர்ச்சி: பணம் சம்பாதிக்கும் திறனை மேம்படுத்த கல்வி மற்றும் திறன் வளர்ச்சியில் முதலீடு செய்ய வேண்டியது முக்கியம். பெரும்பாலான ஏழைகளுக்கு இது தெரிவதில்லை. புதிய திறமைகளை கற்றுக் கொள்வதன் மூலம் அதிக பணம் சம்பாதிக்கும் வாய்ப்புகளை நாம் பெற முடியும்.
ஏர்மறையான மனநிலை: பணத்தையும் பணம் சம்பாதிப்பவர்களையும் பற்றி எப்போதும் தவறாக நினைக்காமல், பணத்தின் மீது நேர்மறையான மனநிலை கொண்டிருப்பது மிகவும் முக்கியம். தன்னம்பிக்கை மற்றும் விடாமுயற்சி இருந்தால் எதையும் சாதிக்க முடியும் என்பதை அவர்கள் உணர்ந்து கொண்டாலே, ஏழ்மை நிலையிலிருந்து கொஞ்சம் கொஞ்சமாக மீண்டு வரலாம்.
இப்படி பணம் சம்பாதிப்பது பற்றி ஏழைகளுக்குத் தெரியாத பல விஷயங்கள் உள்ளன. இந்தப் பதிவில் குறிப்பிட்டுள்ள விஷயங்களைப் பற்றி நாம் அறிந்து கொள்வதன் மூலம், நமது வாழ்க்கையை ஓரளவுக்கு மேம்படுத்த முடியும். கடின உழைப்பு, திறமைகள், அறிவு மற்றும் வாய்ப்புகளை சரியாக பயன்படுத்தினால், எந்த ஒரு ஏழையும் வாழ்க்கையில் அதிக பணம் சம்பாதித்து வெற்றி பெற முடியும்.