ஆண்களை பலவீனமாக்கும் 7 விஷயங்கள்!

Sad Man
sad man
Published on

ஆம்பளைன்னா தைரியமா இருக்கணும், எதையும் தாங்கணும்னு நம்ம ஊர்ல ஒரு பேச்சு இருக்கு. ஆனா, உண்மையில சில பழக்கவழக்கங்கள் நம்மளையே அறியாம நம்மளோட தெம்பைக் குறைச்சு, ஒரு மாதிரி பலவீனமாக்கிடுது. நம்ம சந்தோஷமா இருக்குறதுக்கும், வாழ்க்கையில முன்னேறுறதுக்கும் இது பெரிய தடையா நிக்கும். அப்படிப்பட்ட சில சிக்கலான சமாச்சாரங்களப் பத்தி கொஞ்சம் பாப்போம்.

1. எல்லாத்தையும் மனசுக்குள்ளேயே போட்டு புழுங்குறது: என்ன கஷ்டம்னாலும், மனசுக்குள்ள என்ன ஓடுதுன்னாலும், அத வெளில சொல்லாம, தனக்குள்ளயே வச்சி அமுக்குறது ரொம்ப தப்புங்க. இது மனசுக்கு தேவையில்லாத பாரத்தக் குடுத்து, நம்மள சோர்வாக்கிடும். நிம்மதியும் போயிடும்.

2. தேவையில்லாத கூச்ச சுபாவம்: நாலு பேர் இருக்கிற இடத்துல சகஜமா பேசவோ, பழகவோ தயங்குறது, நம்ம மேல நமக்கே நம்பிக்கை இல்லாம ஆக்கிடும். இதனால நல்ல வாய்ப்பெல்லாம் கைநழுவிப் போயிடும். கொஞ்சம் ஓப்பனா இருந்தா தான் நம்ம திறமை வெளில தெரியும்.

3. 'நான் சொல்றதுதான் கரெக்ட்'னு நினைக்கிற எண்ணம்: எப்பப் பாரு, நான் சொல்றது தான் சரி, மத்தவங்க சொல்றதெல்லாம் தப்புன்னு பிடிவாதமா இருந்தா, புதுசா எதையும் கத்துக்க முடியாது. அடுத்தவங்க அனுபவத்தையும் மதிக்கணும்ல? இந்த குணத்தால நல்ல சொந்த பந்தமெல்லாம் போயிடும்.

4. தப்ப ஒத்துக்காம அடுத்தவங்க மேல பழி போடுறது: நாம தப்புப் பண்ணிட்டா, அத ஒத்துக்கிற பக்குவம் வேணும். அத விட்டுட்டு, சும்மா அடுத்தவங்க மேலயோ, நேரம் சரியில்லன்னு சொல்லியோ பழியைத் தூக்கிப் போட்டா, நம்ம மேல இருக்குற கொஞ்ச நஞ்ச மரியாதையும் போயிடும்.

5. உள்ளுக்குள்ள பயம், வெளியில கெத்து: சில விஷயத்துல மனசுக்குள்ள உதறலா இருந்தாலும், அத மறைக்கிறதுக்காக வெளியில தேவையில்லாம பந்தா காட்டுறது, தைரியம் கிடையாது. பயப்படுறது தப்பில்லை, ஆனா அதை ஏத்துக்கிட்டு சமாளிக்கப் பார்க்கணும்.

6. பகை உணர்ச்சியை மனசுல வளர்க்கிறது: யாரோ பண்ண தப்பையோ, சொன்ன பேச்சையோ மனசுலயே வச்சிக்கிட்டு, அவங்கள எப்படா பழிவாங்கலாம்னு யோசிச்சிக்கிட்டே இருக்கிறது, நம்ம நேரத்தையும், நிம்மதியையும் தான் கெடுக்கும். மன்னிச்சு விட்டுட்டுப் போனா, நாம தான் பெரிய மனுஷன்.

இதையும் படியுங்கள்:
நம்ம ஊரு கைமுறுக்கு: பாரம்பரிய சுவையோட எப்படி செய்யறதுன்னு பார்க்கலாமா!
Sad Man

7. எதுலயுமே அக்கறை இல்லாம இருக்கிறது: குடும்பம், வேலை, சொந்த விஷயம்னு எது மேலயுமே ஒரு பொறுப்பு இல்லாம, 'வந்தா வரட்டும், போனா போகட்டும்'னு இருந்தா, வாழ்க்கையில அப்புறம் ரொம்ப கஷ்டப்பட வேண்டியிருக்கும். நம்ம கடமையை நாம சரியா செய்யணும்.

இப்ப சொன்ன மாதிரி விஷயங்கள்லாம் நம்மகிட்ட இருந்தா, அதெல்லாம் சரி இல்லைன்னு முதல்ல நாம ஒத்துக்கணும். நம்மள நாமளே கொஞ்சம் கொஞ்சமா மாத்திக்கிட்டா, நம்ம வாழ்க்கையும் சூப்பரா இருக்கும், நம்மள சுத்தி இருக்கிறவங்களும் சந்தோஷமா இருப்பாங்க. நம்ம தப்பைத் திருத்திக்கிறதுல தான் உண்மையான கெத்து இருக்கு.

இதையும் படியுங்கள்:
குடும்ப உணவுகள் - நம் வாழ்க்கையில் மிஸ் பண்ணக்கூடாத ஒன்று!
Sad Man

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com