ஏஐ-யிடம் வேலையை இழக்காமல் தப்பிக்க சாணக்கியர் கூறும் 6 சீக்ரெட் டிப்ஸ் இதோ!

chanakya-niti-tips
chanakya-niti-tips
Updated on

நமது சமூகத்தில் பெரும்பாலான குடும்பங்கள் ஆண்களின் வருமானத்தை நம்பியே முழுமையாக இயங்கி வருகின்றன. ஆனால், தற்போதுள்ள சூழ்நிலை முற்றிலும் மாறிவிட்டது. ஏஐ போன்ற நவீன தொழில்நுட்பங்களின் வரவால், தினமும் பலரும் தங்களின் வேலைகளை இழந்து நடுத்தெருவிற்கு வரும் அவலம் நிலவுகிறது.

 இந்த மாதிரியான ஒரு கடினமான சூழல் எதிர்காலத்தில் கட்டாயம் வரும் என்பதை பல நூற்றாண்டுகளுக்கு முன்பே மிகவும் தீர்க்கதரிசனமாக கணித்தவர் சாணக்கியர். ஒரு ராஜாவோ அல்லது சாதாரண மனிதனோ அவனது மரியாதையை ஒரே நாளில் இழந்துவிடுவது கிடையாது. அவனுக்குள் இருக்கும் சில மோசமான பழக்கங்கள்தான் அவனை மெல்ல மெல்ல அழிவின் விளிம்பிற்கு அழைத்துச் செல்கின்றன. 

வேலை பார்க்கும் இடம், நட்பு வட்டம் மற்றும் குடும்ப உறவுகள் என எல்லா இடங்களிலும் சரிவை சந்திக்காமல் இருக்க, ஆண்கள் கண்டிப்பாக கைவிட வேண்டிய ஆறு பழக்கங்களை சாணக்கியர் பட்டியலிட்டுள்ளார். 

தொடர் முயற்சியின்மை & வீண் கர்வம்!

வேலையில் புதிதாக சேரும்போது நல்ல பெயர் வாங்க வேண்டும் என்பதற்காக பலரும் மிகவும் கடினமாக உழைப்பார்கள். ஆனால், ஒரு வசதியான நிலை அல்லது பதவி கிடைத்தவுடன் அந்த உழைப்பை அப்படியே ஓரம் கட்டிவிடுவார்கள். தான் முன்பு உழைத்த உழைப்பே தன் வாழ்நாள் முழுவதும் சோறு போடும் என நினைப்பது மாபெரும் தவறாகும். நீங்கள் அப்டேட் ஆகாமல் ஒரே இடத்தில் தேங்கி நின்றால், புதியவர்கள் உங்களை முந்திச் சென்று கொண்டே இருப்பார்கள். 

அதேபோல, எனக்கு எல்லாமே தெரியும் என்ற அதீத கர்வம் இருப்பவர்களுக்கு வீழ்ச்சி வெகு சீக்கிரத்தில் வந்து சேரும். இவர்கள் மற்றவர்கள் சொல்லும் அறிவுரைகளைத் தங்களுக்கு ஏற்படும் அவமானமாகவே நினைப்பார்கள். இப்படி புதிய விஷயங்களை கற்றுக்கொள்ள மறுப்பவர்களை இந்த உலகம் மிக எளிதாக தூக்கி எறிந்துவிடும் என்பதை சாணக்கியர் மிக ஆழமாகப் பதிவு செய்துள்ளார்.

பாராட்டை எதிர்பார்ப்பது & ஆதிக்கம் செலுத்துவது!

சில மனிதர்கள் எப்போதுமே மற்றவர்கள் தங்களை புகழ்ந்து தள்ள வேண்டும் என அதிக ஆசைப்படுவார்கள். ஒருவேளை அப்படிப் பாராட்டு கிடைக்காத போது இவர்களின் மனநிலை கடுமையாக பாதிக்கப்பட்டு கோபப்படுவார்கள். எந்தவொரு வேலை செய்தாலும் அதற்குப் பிறரின் அங்கீகாரம் வேண்டும் என நினைப்பவர்கள், மற்றவர்களுக்கு ஒரு பெரிய சுமையாகவே மாறிவிடுவார்கள்.

இதையும் படியுங்கள்:
பங்குனி உத்திரம்: வெறும் பட்டினி கிடப்பது விரதமல்ல... உண்மையான விரதம் எது தெரியுமா?
chanakya-niti-tips

மேலும், உண்மையான தலைமைப் பண்பு என்பது ஒருவரின் தனிப்பட்ட திறமையால் மட்டுமே வர வேண்டும். அதை விட்டுவிட்டு, மற்றவர்களை மிரட்டியும் அதிகாரத்தாலும் அடக்கி ஆள நினைப்பது வீணான செயலாகும். எல்லாவற்றையும் தன் கட்டுப்பாட்டில் வைத்திருக்க நினைப்பவர்களைப் பார்த்து மக்கள் பயப்படுவார்களே தவிர ஒருபோதும் உளமார மதிக்க மாட்டார்கள். இப்படிப்பட்ட நபர்கள் தங்களை அறியாமலேயே அனைவராலும் வெறுக்கப்படுவார்கள்.

மௌனம் & இலக்கில்லாத பயணம்!

வாழ்க்கையில் கடினமான சூழ்நிலைகளை எதிர்கொள்ள பயந்து கொண்டு எப்போதும் மௌனமாக இருப்பவர்களை யாரும் பெரிய அளவில் நம்ப மாட்டார்கள். முக்கியமான நேரங்களில் கருத்து சொல்லாமல் தட்டிக் கழிப்பவர்களை மக்கள் காலப்போக்கில் கண்டுகொள்ளவே மாட்டார்கள். இதனால் உறவுகளுக்குள் விரிசல் ஏற்பட அதிக வாய்ப்புள்ளது. 

எல்லாவற்றிற்கும் மேலாக, வாழ்க்கையில் ஒரு தெளிவான இலக்கு இல்லாமல் வெறும் இயந்திரம் போல தினமும் ஒரே ரொட்டீனில் வேலை செய்பவர்களுக்கு எந்த மரியாதையும் கிடைக்காது. இலக்கு இல்லாதவர்களை ஒரு சாதாரண ஆப்ஷனாகவே இந்த உலகம் பார்க்கும்.

இதையும் படியுங்கள்:
வாழ்க்கைத் துணையைத் தேர்ந்தெடுப்பதில் குழப்பமா? சாணக்கியர் கூறும் 6 விதிகளின் 'சீக்ரெட் பார்முலா'!
chanakya-niti-tips

சாணக்கியர் சொன்ன இந்த ஆழமான வாழ்வியல் தத்துவங்கள் இன்றைய மாடர்ன் கார்ப்பரேட் உலகிற்கும் நூறு சதவீதம் கச்சிதமாகப் பொருந்தும். உங்களிடம் இந்த ஆறு பழக்கங்களில் ஏதேனும் ஒன்று இருந்தாலும் அதை உடனடியாக மாற்றி அமைத்துக் கொள்வது உங்களுடைய சிறப்பான எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமாகும்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com