உத்வேகம் அளிக்கும் டானிக்: காலம் கடந்தும் புதியனவாகவே இருக்கும் சீன ஞானியின் போதனைகள்...

கன்பியூசியஸின் போதனைகள் ஆயிரக்கணக்கான ஆண்டுகளுக்கு முன்பே சொல்லப்பட்டவை என்றாலும், அவை இன்றும் புதியனவாகவே இருக்கின்றன.
Confucius
Confucius
Published on

உலகத்தையே தனது சிந்தனைகளால் மாற்றியமைத்த சீன ஞானி கன்பியூசியஸ், வெறும் தத்துவவாதி மட்டுமல்ல; ஒழுக்கமான வாழ்விற்கும், சிறந்த நிர்வாகத்திற்கும் வழிகாட்டியவர். “கல்வியும், ஒழுக்கமுமே ஒரு மனிதனை முழுமையாக்கும்” என்பது இவரது அடிப்படைப் போதனை. அவர் வழங்கிய வாழ்வியல் நெறிகளையும், அவை இன்றைய காலத்திற்கு எவ்வாறு பொருந்துகின்றன என்பதையும் இங்கு காண்போம்.

வாழ்க்கை மற்றும் வளர்ச்சி:

விடாமுயற்சி: “நீங்கள் எவ்வளவு மெதுவாகச் செல்கிறீர்கள் என்பது முக்கியமல்ல, நீங்கள் எங்கும் நின்றுவிடாமல் பயணிப்பதே முக்கியம்.”

மேன்மை: “உன்னை விடச் சிறந்த ஒருவனைச் சந்தித்தால், அவனைப் போல மாற முயற்சி செய். உன்னை விடத் தாழ்ந்த ஒருவனைச் சந்தித்தால், உனக்குள் இருக்கும் குறைகளை ஆராய்ந்து பார்.”

தவறுகள்: “தவறு செய்வது தவறு அல்ல, செய்த தவறைத் திருத்திக் கொள்ளாமல் இருப்பதே மிகப்பெரிய தவறு.”

அறிவு மற்றும் கல்வி:

உண்மையான அறிவு: “உனக்குத் தெரிந்ததைத் தெரியும் என்றும், தெரியாததைத் தெரியாது என்றும் ஒப்புக்கொள்வதே உண்மையான அறிவு.”

கற்றலும் சிந்தித்தலும்: “சிந்திக்காமல் கற்பது வீண்; கற்காமல் சிந்திப்பது ஆபத்தானது.”

இதையும் படியுங்கள்:
ஜெர்மானிய தத்துவமேதை நீட்சே (Nietzsche) கூறிய 10 பொன்மொழிகள்!
Confucius

நன்னெறி மற்றும் பழக்கவழக்கம்:

தன்னடக்கம்: “மற்றவர்கள் உங்களுக்கு எதைச் செய்யக்கூடாது என்று நீங்கள் நினைக்கிறீர்களோ, அதை நீங்களும் மற்றவர்களுக்குச் செய்யாதீர்கள்.”

நிதானம்: “கோபம் வரும்போது அதன் விளைவுகளைப் பற்றிச் சிந்தித்துப் பார்.”

நட்பு: “உன்னை விடச் சிறந்த பண்புகள் இல்லாதவர்களுடன் ஒருபோதும் நட்பு வைத்துக்கொள்ளாதே.”

வெற்றி மற்றும் இலக்குகள்:

இலக்கை நோக்கி: “உங்களால் இலக்குகளை அடைய முடியாவிட்டால், இலக்குகளை மாற்றாதீர்கள்; அவற்றை அடைவதற்கான உங்கள் செயல்பாடுகளை (Action) மட்டும் மாற்றுங்கள்.”

முயற்சி: “வெற்றி என்பது உங்கள் தயாரிப்பைப் பொறுத்தது. முறையான தயாரிப்பு இல்லாமல் தோல்வி நிச்சயம்.”

வலிமை: “எப்பொழுதும் விழாமல் இருப்பது நமது பெருமையல்ல; ஒவ்வொரு முறை விழும்போதும் மீண்டும் எழுவதே உண்மையான பெருமை.”

சுய ஒழுக்கம் (Self-Discipline):

தன்னை ஆளுதல்: “தன்னைத் தானே அடக்கி ஆளத் தெரிந்தவனே உண்மையான வீரன்.”

நேர்மை: “நேர்மையான மனிதன் எதைச் செய்தாலும் அது தர்மத்தின் வழியிலேயே இருக்கும்.”

அதிர்ஷ்டம்: “அதிர்ஷ்டம் என்பது வாய்ப்பும், கடின உழைப்பும் சந்திக்கும் ஒரு புள்ளியாகும்.”

சமூகம் மற்றும் மனித உறவுகள்:

உதவி: “உங்களுக்கு உதவி தேவைப்படும்போது மற்றவர்களிடம் எப்படி எதிர்பார்க்கிறீர்களோ, அப்படியே மற்றவர்களுக்குத் தேவைப்படும்போதும் நீங்கள் உதவியாக இருங்கள்.”

பெரியோர்கள்: “மூத்தவர்களின் அனுபவத்திலிருந்து கற்றுக்கொள்ள மறுப்பவன், வாழ்க்கையில் மீண்டும் மீண்டும் அதே தவறுகளைச் செய்வான்.”

அமைதி: “உனது வீட்டில் அமைதி நிலவ வேண்டுமென்றால், முதலில் உனது இதயத்தில் அமைதியை ஏற்படுத்திக்கொள்.”

“ஒரு வேலையைச் செய்வதற்கு முன் உனது கோடாலியைத் தீட்டிக்கொள். அது வேலையை எளிதாக்கும்.”

“ஒரு மனிதன் தன் கடந்த காலத்தை விரும்பிப் படித்து, அதிலிருந்து புதியனவற்றைக் கற்றுக்கொண்டால், அவன் மற்றவர்களுக்கு ஆசிரியராகத் தகுதியுடையவன் ஆகிறான்.”

இதையும் படியுங்கள்:
வாழ்க்கையை அர்த்தமுள்ளதாக்கும் புத்தரின் 10 போதனைகள்!
Confucius

கன்பியூசியஸின் போதனைகள் ஆயிரக்கணக்கான ஆண்டுகளுக்கு முன்பே சொல்லப்பட்டவை என்றாலும், அவை இன்றும் புதியனவாகவே இருக்கின்றன. மனிதன் தன்னைத் தானே செதுக்கிக் கொள்வதன் மூலமே ஒரு சிறந்த சமுதாயத்தை உருவாக்க முடியும் என்பதை அவர் அழுத்தமாகப் பதிவு செய்துள்ளார். அவரது சிந்தனைகளை வெறும் வாசிப்போடு நிறுத்தாமல், வாழ்வில் ஒரு சிறு பகுதியாவது கடைப்பிடிப்பதே அந்த மாமேதைக்கு நாம் செய்யும் உண்மையான மரியாதையாகும்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com