எவ்வளவு திறமையிருந்தாலும் சிலர் மட்டுமே ஏன் வெற்றி பெறுகிறார்கள் தெரியுமா?

Do you know why few people succeed no matter how talented they are?
Do you know why few people succeed no matter how talented they are?Image Credits: Chillzee
நான்சி மலர்

வணக்கம். என் பெயர் நான்சி மலர். என்னைப் பற்றி தெரிந்து கொள்ள ஆர்வம் காட்டியதற்கு நன்றி. நான் B.E. Computer science Engineering முடித்துள்ளேன். எனக்கு சிறுவயது முதலே எழுதுவதில் அதிக ஆர்வம் உண்டு. ‘எழுத்துக்கள் மூலம் நம் எண்ணங்களை எளிதில் வெளிப்படுத்த முடியும்’ என்று நம்புகிறேன். கட்டுரைகள், கவிதைகள் எழுதுவதில் அனுபவம் உண்டு. Content writing துறையில் சாதிக்க வேண்டும் என்ற ஆர்வம் உள்ளது. மோட்டிவேஷன், பயணம், ஆரோக்கியம், ஃபேஷன், ஆன்மீகம் போன்ற கட்டுரை எழுதுவதில் ஆர்வம் அதிகம். என்னுடைய எழுத்து வாசகர்களாகிய உங்களை கவர்ந்தால், அது எனக்கு மகிழ்ச்சியே! ‘ இன்னும் எதிர்காலத்தில் உங்கள் மனதில் என் எழுத்துக்கள் மூலம் இடம் பிடிப்பேன்’ என்று முழுமையாக நம்புகிறேன்.

Updated on

ந்த உலகில் உள்ள பல பேருக்கு திறமையிருந்தாலும் அதில் சிலர் மட்டுமே ஜெயிக்கிறார்கள். அது ஏன் என்று இதுவரை யோசித்ததுண்டா? அதைப்பற்றி தெளிவாக இந்தப் பதிவில் காண்போம்.

ஒரு ஊரில் இரண்டு சிற்பிகள் இருக்கிறார்கள். இரண்டு பேருக்குமே ஒரே அளவிலான திறமையுள்ளது. இரண்டு பேருமே சிற்பக்கலையில் ஆரம்ப நிலையில் உள்ளவர்கள். இவர்களுக்குள் இந்த வாக்குவாதம் ஒரு நாள் வந்தது. இந்த உலகில் பல பேர் திறமையுடன் இருந்தும் சிலரே ஜெயிக்க காரணம் என்ன? என்பதுதான் அது. இருவருமே அதற்கு வாக்குவாதம் செய்ததில் சண்டை முற்றிப் போனது.

அப்போது அந்த வழியாக வந்த முதியவர், ‘உங்களுக்குள் என்ன பிரச்னை? ஏன் இப்படி சண்டை போடுகிறீர்கள்?’ என்று கேட்டார். அதற்கு அந்த இளைஞர்களோ, ‘நாங்கள் இருவருமே திறமைசாலிகள். ஆனால், இருவரில் யார் ஜெயிப்போம் என்று தெரியவில்லை. அதுதான் சண்டையே!’ என்று அந்த முதியவரிடம் கூறுகிறார்கள்.

இதைக்கேட்ட முதியவர் சிரித்துக்கொண்டே பக்கத்திலிருக்கும் பாறையைக் காட்டி அது என்னவென்று கேட்டார்? இதைப் பார்த்த முதல் இளைஞன், ‘அதைப் பார்த்தால் தெரியலில்லையா? அது ஒரு பாறை’ என்று சொன்னான்.

இப்போது அந்த கல்லை பார்த்த இரண்டாம் இளைஞன், ‘இந்த பாறை நன்றாக உறுதியாக இருக்கிறது. இதில் ஒரு சிற்பம் செய்தால் அற்புதமாக இருக்கும்’ என்று கூறினான். ‘பாறையை பாறையாக பார்ப்பவரை விட அதில் மறைந்திருக்கும் சிற்பத்தையும் பார்ப்பவனே ஜெயிப்பான்’ என்று முதியவர் கூறினார்.

இதையும் படியுங்கள்:
சுலபமாக பணம் சம்பாதிக்க வேண்டுமா? அப்போ இந்தக் கதை உங்களுக்குத்தான்!
Do you know why few people succeed no matter how talented they are?

இதுவும் சரிதானே? இந்த உலகில் யாருக்கு வேண்டுமானாலும் திறமையிருக்கலாம். ஆனால், மறைந்து கிடக்கும் வாய்ப்புக்கூட யார் கண்களுக்கு தெரிகிறதோ அவர்கள்தானே ஜெயிப்பார்கள். நாமும் நம்முடைய வாழ்க்கையில் மேலோட்டமாகவே முயற்சி செய்துக்கொண்டிருந்தால், வெற்றிபெற முடியாது. நம் கண்களுக்கு தெரியாமல் மறைந்துக் கிடக்கும் வாய்ப்புகளையும் கண்டுப்பிடித்து முயற்சிக்கும்போதே வெற்றியை அடைய முடியும்.

எனவே, திறமை மட்டுமிருந்தால் போதாது. அந்த திறமையை வெளிக்காட்ட வேண்டிய வாய்ப்புகளை அடையும் விவேகமும் நம்மிடம் இருக்க வேண்டும்.

logo
Kalki Online
kalkionline.com