-மஞ்சு வாசுதேவன்
முன்னேறத் துடிக்கும் ஒவ்வொருக்கும் அடிப்படைத் தேவை நம்பிக்கை. என்னால் முடியும் என்ற எண்ணமே அடுத்த கட்டத்திற்கு நகர உதவும்.
அதிகமானவர்களுக்கு பிடித்தது, அடுத்தவர்களுக்கு அறிவுரை கூறுவது. பிடிக்காதது அறிவுரை பிறரிடம் இருந்து பெறுவது. எனவே கூடுமானவரை பிறருக்கு அறிவுரைகள் கூறுவதை தவிர்க்கவும்.
அறிவுரைகள் கூறப்போய் அதை அவர்கள் நிராகரித்து விட்டால் அல்லது ஏதாவது எதிர் மறையயாக சொல்லிவிட்டால், பெரும்பான்மையானவர்களுக்கு தாங்கிக் கொள்ளும் சக்தி கிடையாது என்பது நிதர்சனமான உண்மை.
அதனால் நம்பிக்கை இழந்து தன்னம்பிக்கை காணாமல் போக வாய்ப்பு உண்டு. எனவே முடிந்த வரையில் பிறருக்கு அறிவுரைகள் கூறுவதை தவிர்ப்பது உசிதம்.
ஆங்கிலத்தில் silent spectator என்று கூறுவார்கள். மவுனமாக கேட்டுக் கொள்வது, பார்ப்பது என்று பொருள். அப்படி இருப்பவர்கள் தன்னம்பிக்கை வளர்த்துக் கொள்பவர் களாக இருப்பார்கள். செயல்பட்டால்தான் ரிசல்ட் தெரியும். தையரியத்தை வளர்த்துக் கொள்ள, self belief மிகவும் உதவும். பதட்டப்படாமல், உள் வாங்கிக் கொண்டு செயல்பட பழகிக் கொள்ளவும்.
ஆரம்பத்தில் கடினமாக இருந்தாலும், தளர்ந்து விடாமல் முடியும் என்ற எண்ணத்தோட பழகி வந்தால் நடைமுறைக்கு சாதியமாகும்.
முடிந்த வரையில் பிறருக்கு உதவுங்கள். அவ்வாறு தாங்கள் உதவும் பொழுது ஏற்படும் மனநிறைவு (self satisfaction) தனி சக்தி தரும். உங்களை அறியாமலேயே உஙகள் நம்பிக்கையை வளர்க்க உதவும்.
ஒவ்வொருவரும் தாங்கள் விரும்பும்படியே ரிசல்ட் வரவேண்டும் என்று நினைப்பது இயல்பு. தவறு ஒன்றும் இல்லை. ஆனால் நாம் வசிப்பது பூமியில். பல் வேறு நடவடிக்கைகள் மற்றும் மனிதர்கள் நடுவில் நாமும் வாழ்கின்றோம் என்பதை கொஞ்சமும் மறக்க கூடாது.
எனவே ரிசல்ட் எதிர்பார்த்தபடி வரவில்லை என்றால், எதிர் கொண்டு நகர பழகிக்கொள்ள நம்பிக்கையும், தன்னம்பிக்கையும் கை கொடுக்கும்.