உங்க மனசே உங்களுக்கு எதிரியா? ஓவர் திங்கிங்கை நிறுத்த பகவத் கீதை சொல்லும் எளிய வழி!

Overthinking
Overthinking
Published on

சில ராத்திரிகள் தூக்கமே வராது, அமைதியா இருந்தாலும் மனசுக்குள்ள ஆயிரம் எண்ணங்கள் ஓடிக்கிட்டே இருக்கும். செஞ்ச தப்பையே திரும்பத் திரும்ப நினைச்சுப் பார்ப்போம், நடக்காத ஒண்ணை நினைச்சு கவலைப்படுவோம். இதுக்கு பேருதான் ஓவர் திங்கிங். இது ஏன் நடக்குது தெரியுமா? நம்ம கைய மீறி எதுவும் போயிடக் கூடாது, எல்லாமே நம்ம கட்டுப்பாட்டுல இருக்கணும்னு நாம பயப்படுறதுதான் முக்கியமான காரணம். இந்தச் சிக்கலுக்கு பல்லாயிரம் வருஷங்களுக்கு முன்னாடியே பகவத் கீதை ஒரு தெளிவான வழியைக் காட்டியிருக்கு.

பிரச்சனையின் ஆணிவேர்:

நாம ஏன் ஒரு விஷயத்தை திரும்பத் திரும்ப யோசிக்கிறோம்னா, அப்படி யோசிச்சா எதிர்காலத்தை நம்மால கணிக்க முடியும், தப்புகளை சரி செஞ்சிடலாம்னு நம்புறோம். ஆனா, இது ஒரு மாயைன்னு கீதை சொல்லுது. நாம செய்யுற வேலை மேல மட்டும்தான் நமக்கு உரிமை இருக்கு, அதோட முடிவு மேல இல்லன்னு கிருஷ்ணர் அர்ஜுனனுக்கு சொல்றார். நாம முடிவுகளைக் கட்டுப்படுத்த முயற்சிக்கும்போதுதான், மனசு பயத்துல சிக்கி, அதிகமா யோசிக்க ஆரம்பிக்குது. இந்த பயம்தான் எல்லாத்துக்கும் காரணம்.

கர்ம யோகம்:

இதுக்கு கீதை சொல்ற தீர்வுதான் 'கர்ம யோகம்'. அதாவது, "கடமையைச் செய், பலனை எதிர்பார்க்காதே". இதோட அர்த்தம் சோம்பேறியா இருக்கணும் என்பதல்ல. உங்க வேலையை முழு மனசோட, நேர்மையா செய்யுங்க. ஆனா, அதோட முடிவு எப்படி இருக்குமோங்கிற கவலையை விட்டுடுங்க. முடிவு நம்ம கையில இல்லைங்கிறத ஏத்துக்கிட்டாலே, மனசு அமைதியாகிடும். ஜெயித்தாலும் தோத்தாலும், புகழ்ச்சி வந்தாலும் இகழ்ச்சி வந்தாலும், சமநிலையோடு இருக்கப் பழகிக்கணும். இதை கீதை 'சமத்வம்'னு சொல்லுது.

இதையும் படியுங்கள்:
ஓவர் நைட்டில் மில்லினியர் ஆன இருவரின் வியக்க வைக்கும் நிஜங்கள்!
Overthinking

ஓவர் திங்கிங்கை நிறுத்தணும்னா, சிந்திக்கிறதையே நிறுத்த வேண்டியதில்லை. சிந்தனைகளோட தன்மையை மாத்திக்கிட்டா போதும். நம்ம கட்டுப்பாட்டை இழந்துடுவோமோங்கிற பயத்தை விட்டுட்டு, நம்ம கடமையில மட்டும் கவனம் செலுத்தினா, மனசு தானா அமைதி பெறும். கீதை சொல்ற மாதிரி, கட்டுப்பாடற்ற மனசுதான் நமக்கு முதல் எதிரி; அதையே கட்டுப்படுத்திட்டா, அதுதான் நம்மளோட சிறந்த நண்பன்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com