
மனிதவாழ்க்கையில் நல்லதும் கெட்டதும் மாறி மாறி வரும். அதேபோல பாவமும் புண்ணியமும் கலந்து கலந்து வரும்,நமது செயல்களுக்கேற்ப.
மனதார நாம் பிற உயிா்களுக்கு தீங்கு நினைக்காமல் கூடுமான வரையில் நன்மையே செய்ய, நம்மை பக்குவப்படுத்திக்கொள்ள வேண்டும். ஒருவர் நமது உறவிலோ, அல்லது நட்பு வட்டத்திலோ,அவரது வாாிசுக்கு திருமணம் நிச்சயம் செய்கிறாா் தனி ஒரு ஆளாக அனைத்து வேலைகளையும் செய்கிறாா். அப்போது நீங்களாக வலியச்சென்று அவருக்கு பலவகையிலும் உதவி ஒத்தாசை செய்யலாம்.
ஆனால் காலம் பூராவும் நான் இல்லையென்றால் அந்தக்காாியமே தடைபட்டிருக்கும் என தற்பெருமை பேசுவதால் என்ன பயன், எதுவும் கிடையாது.
"அதுதான் நிறைகுடம் ததும்பாது மாறாக குறைகுடம் ததும்பும்" என்பாா்கள். பிரதிபலன் எதிா்பாா்த்து மேற்கொள்ளப்படும் உதவியானது உதவியே அல்ல. தன்னைபாராட்டியே தீரவேண்டும் என எதிா்பாா்ப்பதும் தவறுதான். அதேபோல உதவியைப்பெற்றவரும் மனசாட்சியுடன் நடந்துகொள்ள வேண்டும்.
அவரோ நாம் செய்த உபகாரத்தை மறக்கக்கூடாது. சந்தர்ப்பம் வரும்போது ஏதாவது ஒரு வகையில் திருப்பி அந்த உதவிக்கு ஈடாய் உதவி செய்துவிடவேண்டும். அதுதான் நீடித்த நட்போடு கூடியஉறவுக்கு எப்போதும் துணை நிற்கும்.. எதிலும் எங்கும் எப்போதும் எல்லை மீறாமல் பாா்த்துக்கொள்ள வேண்டும்.
இதுபோலவே குடும்பத்தில் உள்ள உறவுகளிடம் நேரம் கிடைக்கும் போது பேசி நலம் விசாிக்க வேண்டும். அதுவே மிகுந்த நாகரீகமாகும்.
"கேட்காத கடனும் பாா்க்காத உறவும் பாழ்"
அதேபோல அவர்களோ நம்மிடம் மகள் திருமண தினத்தில் நீ உதவி செய்திராவிட்டால்விட்டால் என்மகள் திருமணமே நடந்திருக்காது. உன்னை வாழ்நாள் முழுவதும் மறக்கமாட்டேன் என சொல்லுவாா்கள் அது அவரது மனஉணர்வுகளின் வெளிப்பாடு. அதில் எந்த அளவுக்கு உண்மையான வாா்த்தை என்பது ஆண்டவனுக்கு்ே வெளிச்சம்.
பொதுவாக அவர்களுக்கு கொடுத்த பணத்தை நாம் திருப்பிக் கேட்காவிட்டாலும் அவர்களாகவே கொஞ்சம் கொஞ்சமாக முன் வந்து திருப்பிக் கொடுப்பதே நல்லது. அவர் பணத்தை திருப்பிக் கேட்காமல் இருக்கிறாா் நல்ல உறவுக்காரர் என மனைவி பிள்ளைகளிடத்தில் பெருமையாக பேசுவதால் ஒரு பிரயோஜனமும் இல்லை. கொஞ்சம் கொஞ்சமாக குறிப்பிட்ட கால கெடுவிற்குள் திருப்பிக்கொடுப்பதே அழகு. அதை செய்யாதபோது அது மனசாட்சியை ஏமாற்றியதாக அர்த்தம், அது பாவம்.
சில வருடம் கழித்து நமக்கு உடல்நலம் சரியில்லாதபோது நாம் அவர்களிடம் உதவி கோரலாம். அப்போது அவர்கள் நாம் செய்த பழைய உதவியை நினைத்துப்பாா்த்து நமக்கு பணம் கொடுப்பது நல்லது. கட்டாயமல்ல இருந்தாலும் பழைய சம்பவத்தை நினைத்து செய்யலாம். அந்த நேரம் குரங்கு மனது மாறிவிடக்கூடாது.
அவசியம் உதவியைச் செய்யவேண்டும் அதை செய்யாமல் அவர் திருப்பித் தருவாரோ மாட்டாரோ, பணம் இல்லாமல் வயோதிக காலத்தில் வாழ்கிறாா், வாாிசுகள் வேறு கைவிட்டுவிட்டாா்கள், என்ற நிலையில் சுயநலமாக ஒதுங்கிவடுவது அதர்மமான விஷயம்.
பாவத்தை மூட்டை கட்டி வைப்பதுபோன்றதாகும். அது சந்ததியைப்பாதிக்கும் நமக்கு உதவி செய்ததை நாம் திரும்ப செய்யாமல் போவது எந்த வகையிலும் நியாயமே அல்ல.
அப்போது நான் அவருக்கு உதவி செய்தேன். ஆனால் எனக்கு ஒரு நெருக்கடி வந்தபோது உதவாமல் ஒதுங்கிவிட்டாா் என பலரிடம் சொல்லவேண்டிய நிலை வரலாம். ஆக நமது நிலையில் நமது நிலைபாட்டில் கவனமாக நிதானமாக செயல்பட்டிருக்கவேண்டும்.
நாம் நமது உறவுதானே என நினைத்து செய்யும் உதவியை குறைத்துக்கொணடு, நம் எதிா்கால வாழ்க்கைக்காக சேமித்து வைத்துக்கொண்டிருக்க வேண்டும். முதுமையில் யாாிடமும் கையேந்தும் நிலைக்கு நாம் வந்து நமது துணைவியாருக்கு சங்கடம் தரவே கூடாது.
ஆக மனிதன் வாழ்வில் புண்ணியத்தை சேமித்து வைத்திருப்பது போல, பணத்தையும் சோ்த்து வைத்துக்கொள்வது நல்லது. பணம் தான் உலகம். அதையும் யாரையும் எதிா்பாா்த்து எதையும் செய்யக்கூடாது. ஆற்றில் போட்டாலும் அளந்து போடவேண்டும் என சும்மாவா சொன்னாா்கள் முன்னோா்கள்!