வாழ்க்கையில் ரொம்ப கஷ்டப்படுறீங்களா... கிருஷ்ணர் சொல்லும் இந்த ஒரு சீக்ரெட் உங்க தலையெழுத்தையே மாற்றிவிடும்!

lord-krishna-advice
lord-krishna-advice
Updated on

வாழ்க்கையில் சில நேரங்களில் எல்லாம் முடிந்துவிட்டது என்ற ஒரு வெறுமையான உணர்வு நமக்குத் தோன்றும். நாம் உயிருக்கு உயிராக நேசித்த ஒரு நபரோ அல்லது மிகவும் எதிர்பார்த்த ஒரு வாய்ப்போ நம்மை விட்டு விலகும் போது தாங்க முடியாத அளவுக்கு ஒரு வலி ஏற்படும். 

அந்த இக்கட்டான சூழ்நிலையில் தான் பகவான் கிருஷ்ணர் அர்ஜுனனுக்கு குருக்ஷேத்திர போர்க்களத்தில் ஒரு மாபெரும் உண்மையை உணர்த்தினார். அந்த உண்மை அர்ஜுனனுக்கு ஆறுதல் சொல்வதற்காகச் சொல்லப்பட்டது அல்ல, அவனைத் தட்டி எழுப்புவதற்காகச் சொல்லப்பட்டது. வலிகள் நம்மை எப்படி ஒரு புதிய மனிதனாக வலிமையாக்குகின்றன என்பதை இந்தப் பதிவில் பார்க்கலாம்.

இழப்புகள் தரும் பெரிய பாடம்!

நம்மை விட்டு ஒரு விஷயம் அல்லது ஒரு மனிதர் போய்விட்டார் என்றால் அவர் என்றுமே நமக்குச் சொந்தமானவர் கிடையாது என்பதுதான் மிகவும் கசப்பான உண்மை. எதெல்லாம் நமக்காகப் படைக்கப்பட்டதோ அது எந்தக் கடினமான சூழ்நிலையிலும் நம்மை விட்டுப் பிரியாது. சில மனிதர்கள் விலகிச் செல்வது நமக்கு மிகப்பெரிய இழப்பாகத் தோன்றலாம். 

ஆனால் அது உண்மையில் இழப்பு கிடையாது, அது இயற்கை நமக்குக் கொடுக்கும் ஒரு மிகப்பெரிய பாதுகாப்புக் கவசம். நமக்குச் செட் ஆகாத ஒரு தவறான பாதையிலிருந்து நம்மைத் திருப்பி, ஒரு சரியான இலக்கை நோக்கிப் பயணிக்க வைக்கும் இயற்கையின் ஒரு சுவாரஸ்யமான தந்திரம் தான் அந்தப் பிரிவு.

வலிகள் ஒருபோதும் தண்டனை அல்ல!

உங்களுக்கு வரும் கஷ்டங்கள் உங்களை அழிப்பதற்காகக் கொடுக்கப்பட்ட தண்டனைகள் என ஒருபோதும் நினைக்கக் கூடாது. உங்களை ஒரு சிறந்த சிற்பமாகச் செதுக்க வந்த உளிதான் இந்த வலிகள். அர்ஜுனன் போர்க்களத்தில் சோர்ந்து போன போது, கிருஷ்ணர் அவனது பிரச்சனைகளை உடனடியாகத் தீர்த்து வைக்கவில்லை. 

பிரச்சனைகளைப் பார்க்கும் அவனது கோணத்தை மட்டுமே மாற்றினார். நம்மால் நடக்கும் சம்பவங்களைத் தடுக்க முடியாது என்பது நிஜம் தான். ஆனால் அந்தச் சம்பவங்களில் இருந்து நாம் எப்படிப் பாடங்களைக் கற்றுக்கொண்டு முன்னேறப் போகிறோம் என்பது முற்றிலும் நமது கைகளில்தான் உள்ளது.

இதையும் படியுங்கள்:
இந்த முறை நிச்சயமாக பொன்னியின் செல்வன் வருகிறான்
lord-krishna-advice

மற்றவர்களைத் திருப்திப்படுத்துவதை நிறுத்துங்கள்!

இந்தச் சமூகத்தில் உள்ள அனைவரையும் திருப்திப்படுத்த வேண்டும் என்ற நினைப்பு நம்மில் பலருக்கும் இருக்கிறது. அதற்காக நம்மைக் குறைத்துக்கொண்டு மற்றவர்களுக்காகவே வாழ்ந்து நமது ஒட்டுமொத்த அடையாளத்தையும் தொலைத்து விடுகிறோம். 

உலகத்தில் உள்ள எல்லோரையும் சந்தோஷப்படுத்துவது என்பது சாத்தியமே இல்லாத ஒரு காரியம். மற்றவர்களின் சர்டிபிகேட்டுக்காக வாழாமல் உங்களுக்கான வேலையை மட்டும் மிகச் சரியாகச் செய்யுங்கள். உங்களை நீங்கள் நேசிப்பதுதான் நீங்கள் எடுக்கும் மிகச் சிறந்த முடிவாக இருக்க முடியும்.

கடந்த காலத்தை நினைத்து அழுதுகொண்டே இருப்பதை விட்டுவிட்டு, உங்கள் கட்டுப்பாட்டில் இல்லாத விஷயங்களை அப்படியே ஏற்றுக் கொள்ளப் பழகுங்கள். உங்களை விட்டுச் சென்றவர்களை மனதார வாழ்த்தி வழியனுப்புங்கள். உங்களின் ஒவ்வொரு அடியையும் உங்கள் வளர்ச்சிக்காக மட்டுமே எடுத்து வையுங்கள்.

இதையும் படியுங்கள்:
சிங்கப்பூர் போறீங்களா? அப்படின்னா இந்த 7 விஷயத்தை கண்டிப்பா செய்யாதீங்க!
lord-krishna-advice

இந்த அவமானங்களும், இழப்புகளும், வலிகளும் உங்களை வீழ்த்துவதற்காக வந்தவை அல்ல, உங்களை ஒரு இரும்பைப் போல மாற்றுவதற்காகப் பயிற்சி கொடுக்க வந்தவை.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com