

பெரும்பாலான வெற்றியாளர்கள் தொடர்ந்து தயார் செய்து கொள்வதை குறிக்கோளாக வைத்துக் கொண்டு நகர்வதில் கவனம் செலுத்துவார்கள். அவர்களுக்கு எப்பொழுதும் தொடர் வெற்றி கிட்டாது என்று அனுபவம் நன்றாகவே கற்றுக்கொடுத்து இருக்கும்.
மேலும் தொய்வு, தோல்வி ஏற்படுவது என்பது இயற்கையின் நியதி மற்றும் அதிகமாக கற்றுக் கொள்ளவும், நடைமுறைக்கு ஏற்ப புதுப்பிதுக் கொள்ளவும் கிடைக்கும் வாய்ப்பை பயன் படுத்திக் கொள்ளவும் தயங்க மாட்டார்கள்.
சிலர் இத்தகையை தடங்கல்கள், தடைகளுக்கு நன்றியும் கூறிக் கொள்வார்கள். இது அவர்களுக்கு கிட்டும் சுய பரிசோதனை செய்து கொள்ளும் அவகாசம் அல்லது நேரம் என்றும் கருதி தேவை இல்லாதவற்றை ஒதுக்கவும், தேவையான புதியனவற்றை சேர்த்துக் கொள்ளவும் பயன்படுத்திக்கொள்வார்கள்.
அப்படிப்பட்டவர்கள் தயார் செய்து கொள்ளவதில் கவனம் செலுத்துவார்களே தவிர தக்க தருணத்திற்காக தேவைவையில்லாமல் வெயிட் செய்து அதன் மூலம் இழப்புக்களை அதிகரித்துக் கொள்ள மாட்டார்கள்.
அனுபவம் ஒவ்வொரு வாய்பிலும் எதிர் பாரத அனுபவ பாடங்களை அளிக்கின்றது. வெற்றிக்கு வழி வகுக்கும் தருணம் எந்த நேரத்திலும், எந்த வகையிலும் முன்னேறி செல்லும் பாதையில் வரும். அத்தகையை தருணத்தில் அந்த பாதையை ஒட்டி பயணிப்பதே புத்திசாலி தனம் என்பதை இவர்கள் நன்கு அறிவார்கள்.
தயார் செய்துகொண்டிருப்பதில் முழு கவனம் இருப்பதால், இவர்களால் அத்தகையை முன்னேற்றம் அளிக்கும் அத்த குறிப்பிட்ட தருணத்தில் இரண்டற கலந்து மேலே பயணிப்பது சாத்தியமாகின்றது. சாதிக்கவும் வெற்றி கனியை சுவைக்கவும் இயல்பாக முடிகின்றது.
இவர்கள் குறிப்பிட்ட தருணத்திற்காக காத்துக் கொண்டிருந்து தள்ளிப் போட்டு தமாதிக்காமல் பயணிக்கும் பாதையில் தருணத்தை சந்தித்து எதிர் கொண்டு அரவணைத்து பயன் படுத்தி பலன் அடைவதினால் வெற்றி இலக்கை சரியாகவும் மேலும் உறுதிப்படுத்திக் கொள்ளவும் ஏதுவாகின்றது.
தொடர்ந்து தயார் படுத்திக்கொள்வது முக்கிய காரணமாகின்றது இத்தகையை சாதனைகளுக்கு என்றால் மிகையாகாது.