வெற்றிக்கான முதல் படி : ‘அப்புறம் செய்யலாம்’ என்ற எண்ணத்தை விடுவதுதான்!

Motivation articles
Motivation articles
Published on

“அப்புறம் பார்த்துக்கலாம்” – இந்த ஒரு வரிதான் நம் வாழ்க்கையில் பல வெற்றிகளைத் தடுத்து நிறுத்தும் கண்ணுக்குத் தெரியாத விலங்கு. நாம் எல்லோருமே ஏதோ ஒரு வேலையை, கனவை அல்லது மாற்றத்தை ‘பிறகு’ என்று தள்ளிப்போடுகிறோம். ஆனால், அந்த ‘பிறகு’ என்பது ஒருபோதும் வருவதில்லை. தள்ளிப்போடும் பழக்கத்தை மாற்றி இன்றே செயல்பட உதவும் 7 முக்கியமான உத்திகள் பற்றி இந்தப் பதிவில் (Motivation articles) பார்ப்போம்.

இப்போதே தொடங்குவதே சிறந்தது:

நிறைய பேர் தள்ளிப்போடுவதைத் தற்காலிக ஓய்வு என்று நினைக்கிறார்கள். ஆனால், உண்மை அதுவல்ல. சரியான நேரத்திற்காகக் காத்திருப்பது என்பது ஒரு மாயை. இப்போதே, இருக்கும் வசதிகளைக் கொண்டு வேலையைத் தொடங்குவதே புத்திசாலித்தனம். பூரணத்துவத்திற்காக காத்திருப்பதைவிட, அரைகுறையாகத் தொடங்கினாலும் உடனே தொடங்குவதே சிறந்தது.

சிறு அடிகளே சிகரத்திற்கு வழி:

ஒரே நாளில் எதையும் சாதித்துவிட முடியாது. பெரிய இலக்குகளை அடையத் துடிக்கும்போதுதான் தயக்கம் வரும். அதற்குப் பதிலாக, மிகச்சிறிய செயல்களில் கவனம் செலுத்துங்கள். இன்று எடுக்கும் ஒரு சிறிய முயற்சி, நாளடைவில் ஒரு பெரிய வெற்றியாக மாறும். நாளைக்கான பெரிய திட்டத்தைவிட, இன்றைக்கான சிறிய செயல் அதிக மதிப்புடையது.

பயமே தள்ளிப்போடுதலுக்குக் காரணம்:

நாம் ஏன் ஒரு வேலையைத் தள்ளிப்போடுகிறோம் என்று யோசித்தது உண்டா? பெரும்பாலும் தோல்வி பயம் அல்லது ‘மற்றவர்கள் என்ன நினைப்பார்கள்’ என்ற பயமே காரணம். பயத்தை விலக்கி,  துணிச்சலாக அதை எதிர்கொள்ளும் போதுதான் தன்னம்பிக்கை பிறக்கும். அசௌகரியங்களை ஏற்றுக்கொள்வதே தைரியத்தின் அடையாளம்.

இதையும் படியுங்கள்:
தண்டனை கொடுத்துத் திருத்த முடியாது... ஜெயிக்க இதுதான் ஒரே வழி!
Motivation articles

எதற்கு முன்னுரிமை?

எல்லா வேலைகளும் முக்கியமானவை அல்ல. எது மிக முக்கியம் என்பதை அடையாளம் காண்பது அவசியம். அவசரம் வேறு, அவசியம் வேறு. உங்கள் இலக்கோடு தொடர்புடைய செயல்களுக்கு முதலிடம் கொடுங்கள். தேவையில்லாத வேலைகளில் சக்தியை வீணாக்காமல், உருப்படியான காரியங்களில் கவனம் செலுத்துங்கள்.

நேரம் மதிப்பு வாய்ந்தது:

பணம் போனால் வரும், போன வாய்ப்பு கூட மீண்டும் வரும். ஆனால், கழிந்த ஒரு நிமிடம் மீண்டும் வராது. காலத்தை வீணாக்குவது என்பது நம் வாழ்க்கையையே வீணாக்குவதற்குச் சமம். எதையாவது செய்ய வேண்டும் என்று தோன்றினால், அதைச் செய்ய இப்போதே மிகச் சரியான நேரம்.

திட்டத்தைவிட செயலே முக்கியம்:

நிறைய பேர் திட்டமிடுவதிலேயே காலத்தைக் கழிப்பார்கள். காகிதத்தில் தீட்டப்படும் மிகச்சிறந்த திட்டத்தை விட, களத்தில் இறங்கிச் செய்யப்படும் சிறிய செயலே பலன் தரும். சூழல் நமக்குச் சாதகமாக மாறும் வரை காத்திருக்காமல், செயலில் இறங்குங்கள்; சூழல் தானாக மாறும்.

எதிர்காலத்திற்கான அஸ்திவாரம்:

வாழ்க்கை என்பது எங்கோ எட்டாத தூரத்தில் இருக்கும் இலக்கு அல்ல; அது நாம் இப்போது சுவாசித்துக் கொண்டிருக்கும் இந்த நொடியில் இருக்கிறது. நாளை என்பது வெறும் நம்பிக்கை மட்டுமே, ஆனால் ‘இன்று’ என்பது நம்மிடம் இருக்கும் நிஜம். நாம் இன்று எடுக்கும் ஒவ்வொரு சிறு முடிவும், நாம் செய்யும் ஒவ்வொரு செயலும்தான் நமது எதிர்காலத்தின் அஸ்திவாரம்.

வாழ்க்கை என்பது ஒருமுறைதான். அதில் ‘பிறகு’ என்ற வார்த்தைக்கு இடம் கொடுக்காதீர்கள். கனவுகள், ஆசைகள், கடமைகள் என எதற்கும் ‘இப்போதே’ என்று உயிர் கொடுங்கள். இந்த மாற்றத்தை இன்று முதல், இந்த நிமிடம் முதல் தொடங்குங்கள். வெற்றி நிச்சயம்! எதையும் தள்ளிப்போடாமல், ஒவ்வொரு கணத்தையும் ஒரு வாய்ப்பாகக் கருதி பயனுள்ளதாக மாற்றுவதே உண்மையான வெற்றி.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com