ஸ்ரீ சத்யசாயி பாபாவின் பொன்மொழிகள்!

நவம்பர் 23 - ஶ்ரீ சத்ய சாயி பாபா ஜயந்தி!
Shri Sathya Sai Baba Jayanti
Sri Sathya Sai baba
Published on

டவுள் அனைத்து பெயர்களிலும் மற்றும் அனைத்து வடிவங்களிலும் உள்ளது.

உண்மையான சந்தோஷம் உங்களிடமே உள்ளது.

நாளைய ஆசிரியர்கள் இன்றைய மாணவர்கள்.

சிறிய மனங்கள் குறுகிய சாலைகளை தேர்ந்தெடுக்கின்றன. உங்கள் மனப் பார்வையை விரிவு படுத்தி உதவி, இரக்கம் மற்றும் சேவையின் பரந்த பாதையில் செல்லுங்கள்.

வீட்டில் நல்லிணக்கம் இருந்தால் நாட்டில் ஒழுங்கு இருக்கும். நாட்டில் ஒழுங்கு ஏற்பட்டால் உலகில் அமைதி நிலவும்.

மனிதனுக்கு சேவை செய்வதே கடவுளுக்கு சேவை செய்ய ஒரே வழி.

எளிமையாகவும் நேர்மையாகவும் இருங்கள்.

யாருக்கும் எதிராக நச்சு வார்த்தைகளைப் பயன்படுத்தாதீர்கள். ஏனென்றால் வார்த்தைகள் அம்புகளை விடவும் மிகவும் ஆபத்தானவை.

அன்பு தன்னை சேவையாக வெளிப்படுத்த வேண்டும்.

அன்பு இல்லாத கடமை வருந்தத்தக்கது, அன்புடன் கூடிய கடமை விரும்பத்தக்கது, கடமை இல்லாத அன்பு தெய்வீகமானது.

நம்பிக்கை நம் உயிர் மூச்சு போன்றது. நம்பிக்கை இல்லாமல் இந்த உலகில் ஒரு நிமிடம் கூட வாழ முடியாது.

இதையும் படியுங்கள்:
நேர்மறை உணர்வோடு (Positive feeling) பயணியுங்கள்..!
Shri Sathya Sai Baba Jayanti

எந்தவொரு புலன்கள் மூலமாகவும் பெறப்படும் ஒவ்வொரு அனுபவமும் ஒருவரின் ஆரோக்கியத்தில் தாக்கத்தை ஏற்படுத்துகிறது.

நம் மனதை முழுவதுமாக கடவுளிடம் ஒப்படைத்து விட்டால் அவர் நம்மை எல்லா வகையிலும் கவனித்துக் கொள்வார்.

நீங்கள் உங்கள் தாயை மதிக்கிறீர்கள் என்றால், பிரபஞ்சத்தின் தாய் உங்களை தீங்கு விளைவிக்காமல் பாதுகாப்பார்.

உலக விஷயங்களிலும் நாட்டங்களிலும் பற்றுக் கொள்ளாதே. உலகில் இருங்கள், ஆனால் உலகம் உங்களுக்குள் இருக்க விடாதீர்கள்.

நீ எதை நினைக்கிறாயோ அதை பேசு. நீ எதை பேசுகிறாயோ அதை செய்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com