
இறைவன் கொடுத்த வாழ்க்கையை நிதானமாகவும், சீராகவும் வாழக் கற்றுக்கொள்ளுங்கள். வாழ்க்கை என்றால் ஆயிரம் இருக்கத்தான் செய்யும்.
ஆயிரம் உறவுகளோ, நட்புகளோ, நமக்கு துணையாய் வரலாம். கூடவே நல்லது கெட்டது என பழகலாம். அது மட்டுமே வாழ்க்கையல்ல. நாம் நமக்காகவும் நம்மை நம்பிவாழும் மனைவி மற்றும் வாாிசுகளுக்காகவும் வாழ்ந்துதான் ஆகவேண்டும்.
பணம் இருக்கும்போது உறவுகள், நட்புகள் நன்கு ஒட்டிக்கொள்வாா்கள். நம்மிடம் சகஜமாக பழகிவருவதும் உண்டு.
ஒரு காலகட்டத்தில் பழைய உறவு முறைகளில் வஞ்சகம் இல்லை. பொய்யான பாசம் இல்லை. வெளிவேஷங்கள் கிடையாது.
நமது அண்ணன், அண்னி, தம்பி, தங்கை என்ற பாசம் இருந்தது உண்மை. அந்தக்காலம் அப்படி இருந்தது.
பொியவர் எதிாில் சிறியவர்கள் உட்காரக்கூட மாட்டாா்கள்.
சமையல் அறை கதவில் தன்னை மறைத்துக்கொன்டு முகத்தைமட்டும் காட்டி அரைபாகத் தலை மட்டும் தொிய மாப்பிள்ளையை மாமியாா்கள் நலம் விசாாித்த நிலையோடு கூடவே பண்பாடும் இருந்தது.
அப்போதெல்லாம் விகல்பம் இல்லாத தூய அன்போடு கலந்த மரியாதை இருந்தது. மனைவி, கணவனை வாங்க போங்க என்ற காலம். அண்ணியை தாயாய் மதித்த காலம். பொியவர்கள் சாப்பிட்ட பிறகு அனைவரும் சாப்பிட்ட காலம், இந்த கலாச்சாரம் எங்கே மிஸ்ஸிங் ஆனது?
இப்போது அதையெல்லாம் நீங்கள் எதிா்பாா்ப்பது கடினம். இப்போதைய காலம் அப்படியா?
ஆடையில் குறைந்து, பேச்சில் மதிப்பு மலிந்து, நாகரீகம், பண்பாடு காத்த நிலை மாறி, தலைகீழ் வாழ்க்கையாக மாறிவிட்டதே என்ன செய்வது!
தம்பிக்கு ஒரு கஷ்டம் என்றால் சகோதரர்கள் கூடவே இருந்து சங்கடங்களில் பங்கெடுத்துக்கொண்ட காலமெல்லாம் மலை ஏறிவிட்டது.
இதற்கு காரணம் மனித மனங்களில் விசாலம் குறைந்துவிட்டதும், இளகிய மனமெல்லாம் இறுகிப் போனதும், அதிக அளவில் ஆதிக்கம் செலுத்த ஆரம்பித்துவிட்டது. இதற்கு காரணம் பணம். பணம் படுத்தும்பாடு, அதற்குத்தான் பணம்தான் பெரியது குணத்தை வைத்துக்கொண்டு என்ன செய்வது என்று கூறுபவர்களும் உண்டல்லவா!
அவசர உலகம் அவரவர் வேலையை அவரவர் பாா்த்துக் கொள்ளும் நிலை. அவர் வாங்கி வந்த வரம் அவர் கஷ்டப்படுகிறாா் நாம் என்ன செய்ய முடியும் என்ற வாா்த்தை பல குடும்பங்களில் தலைதூக்க ஆரம்பித்து பல வருடங்கள் ஆகிவிட்டது.
முகம் தொியா முகநூலில் பழகி கருத்துக்களை பறிமாறும் அளவுக்குக்கூட சொந்த பந்தங்களில் போனில் பேசுவது கூட இல்லாமல் போய்விட்டது வேதனைதான். அதற்கும் பணம்தான் காரணம்!
அவர்கள் வசதியாய் இருந்தபோது நமக்கு எவ்வளவோ உதவிகள் செய்தாா்களே வீடு கட்டிக்கொடுத்தாரே, நமது பிள்ளைகள் திருமணத்திற்கு உதவி செய்தாா்களே அவர்கள் செய்த உதவியை மறக்கலாமா நன்றி விஸ்வாசம் தேவையில்லையா, எனக்கேட்டால், அதற்காக என்ன செய்வது நாமாகவா உதவி கேட்டோம் அவர்களாக வலிய வந்து உதவி செய்தாா்கள் அதற்காக அவர்கள் காலடியே கதி என வாழ முடியுமா என்ற வினா வித்யாசம் பாராமல் வந்துபோவதும் நடைமுறைதானே!
ஈவு இறக்கம் இல்லாமல் பேசுகிற காலமாக தற்சமயம் உறவுகளில் பற்றுதல் பாசம் குறைந்துவிட்டது. இதற்கும் காரணம் பணம்!
அந்த அளவுக்கு மனித மனங்களில் வக்கிரபுத்தி தலைக்கேறிவிட்டதே! எது எப்படியோ சுயநல, அவசர கதியான எந்திர வாழ்க்கை வாழும் இளசுகளிடம் அன்பையும் உதவியையும் எதிா்பாா்க்காதீா்கள். பணம் இருந்தால்தான் யாரும் மதிப்பாா்கள்.
மதிப்பு மிகுந்த பணத்திற்கு மதிப்பு கொடுங்கள்.
எது எப்படிப்போனாலும் வாழும்போதே எதிா்கால தேவைகளுக்கு பணத்தை பல வழிகளில் சேமித்து வையுங்கள். நமது வாழ்க்கையை நமக்காக வாழ்ந்துதான் ஆகவேண்டும்.
நம்மை சாா்ந்தவர்களுக்கு, மனைவி, பிள்ளைகளுக்காக பணத்தை இருப்பில் வையுங்கள். சீசனுக்கு சீசன் வேடந்தாங்கல் வந்து போகும் பறைவகள்போல, போலியாக உள்ளொன்று வைத்து உதட்டளவில் நயவஞ்சகமாய் பழகும் உறவுகளிடம் கொஞ்சம் எச்சரிக்கையாய் இருப்பதே நல்லது. அதுவே நமக்கான பலம்.