நம் குறிக்கோளை நோக்கி கவனம் செலுத்தவேண்டும்!


Focus on our goal!
Motivation artilces
நான்சி மலர்

வணக்கம். என் பெயர் நான்சி மலர். என்னைப் பற்றி தெரிந்து கொள்ள ஆர்வம் காட்டியதற்கு நன்றி. நான் B.E. Computer science Engineering முடித்துள்ளேன். எனக்கு சிறுவயது முதலே எழுதுவதில் அதிக ஆர்வம் உண்டு. ‘எழுத்துக்கள் மூலம் நம் எண்ணங்களை எளிதில் வெளிப்படுத்த முடியும்’ என்று நம்புகிறேன். கட்டுரைகள், கவிதைகள் எழுதுவதில் அனுபவம் உண்டு. Content writing துறையில் சாதிக்க வேண்டும் என்ற ஆர்வம் உள்ளது. மோட்டிவேஷன், பயணம், ஆரோக்கியம், ஃபேஷன், ஆன்மீகம் போன்ற கட்டுரை எழுதுவதில் ஆர்வம் அதிகம். என்னுடைய எழுத்து வாசகர்களாகிய உங்களை கவர்ந்தால், அது எனக்கு மகிழ்ச்சியே! ‘ இன்னும் எதிர்காலத்தில் உங்கள் மனதில் என் எழுத்துக்கள் மூலம் இடம் பிடிப்பேன்’ என்று முழுமையாக நம்புகிறேன்.

Updated on

நாம் ஒரு நாளைக்கு எவ்வளவு வேலை செய்கிறோம், எத்தனை மணிநேரம் வேலை செய்கிறோம் என்பது முக்கியமில்லை. எவ்வளவுதான் முயற்சியைப் போட்டு வேலை செய்தாலும், அது நம் குறிக்கோளை நோக்கி இல்லை என்றால் வீணாகிவிடும். நாம் செய்யும் வேலைகள் கவனச்சிதறல் இன்றி நம் குறிக்கோளை நோக்கி இருக்கிறதா? என்பது மிகவும் முக்கியமாகும். அப்போதே விரைவில் வெற்றியடைய முடியும். இதைப் புரிந்துக்கொள்ள ஒரு குட்டி கதையை பார்ப்போம்.

ஒரு ஊரில் துப்பாக்கி சுடும் போட்டி ஒன்று நடந்தது. அதில் ஒருவர் பத்து முறை துப்பாக்கியால் சுட்டார். இன்னொருவர் ஒரேயொரு முறை சுட்டார். ஆனால், பரிசு கிடைத்ததோ ஒருமுறை துப்பாக்கி சுட்டவருக்குத்தான்.

உடனே பத்து தடவை துப்பாக்கி சுட்டவருக்கு கோபம் வந்துவிட்டது. அவர் போட்டி நடத்துபவரிடம் சென்று சண்டைப் போட்டார். ‘என்ன இது! நான்தானே அதிக முறை துப்பாக்கி சுட்டேன்! எனக்குத்தானே பரிசு தரவேண்டும்’ என்று கேட்டார். அதற்கு அந்த போட்டியை நடத்துபவர் சொன்னாராம், ‘அப்பா! நீ பத்து முறை துப்பாக்கி சுட்டாலும் மையப்புள்ளியை சுற்றியுள்ள இடத்திலேதான் சுட்டாயே தவிர மையப்புள்ளியில் சுடவில்லை. அவர் ஒருமுறை சுட்டாலும், மையப்புள்ளியில் சரியாக குறிவைத்து சுட்டார். அதனால்தான் அவருக்கு முதல் பரிசு கிடைத்தது’ என்றார்.

இந்தக் கதையில் சொன்னதுப்போல, சிலர் நிறைய நேரம் செலவழித்து ஒரு குறிக்கோளிற்காக முயற்சித் திருந்தாலும் வெற்றியடைய தாமதம் ஆவதற்கான முக்கிய காரணம் இதுதான். எவ்வளவு நேரம் வேலை செய்கிறோம், எவ்வளவு அதிகமாக வேலை செய்கிறோம் என்பது நம் வெற்றியை நிர்ணயிக்காது.

இதையும் படியுங்கள்:
வாழ்க்கையில் எடுக்கும் முடிவுகளில் அவசரம் வேண்டாம்!

Focus on our goal!

நாம் செய்யும் காரியத்தில் கவனச்சிதறல் இன்றி  எவ்வளவு மணிநேரம், எத்தனை வேலைகள் நம்முடைய குறிக்கோளை நோக்கி இருக்கிறது என்பது மிகவும் முக்கியமாகும். எனவே, நன்றாக யோசித்து குறிக்கோள் சார்ந்த வேலையில் மட்டும் கவனம் செலுத்துங்கள். இதை தெளிவாக புரிந்துக்கொண்டால் வாழ்க்கையில் வெற்றியடைவது சுலபமாகிவிடும். முயற்சித்துப் பாருங்களேன்.

logo
Kalki Online
kalkionline.com