தனிநபர் வளர்ச்சி வெற்றிக்கான நேர்மைப் பாதை!

Motivational articles
Self-confidence development
Published on

ரு நாட்டு வளர்ச்சிக்கும், சமுதாய ஒழுங்குக்கும் அடிப்படை தூணாக இருப்பது, தனிநபரின் ஒழுக்கமும் நேர்மையும் ஆகும். ஒவ்வொரு மனிதனின் மனப்பான்மை, அவரது சொற்கள் மற்றும் செயல்களால் நிரூபிக்கப் படுகிறது. நேர்மை என்பது வெறும் ஒழுக்க நெறி அல்ல; அது வாழ்க்கையின் ஒளிக்கான வழிகாட்டி.

நேர்மையின் உச்சம்:  நேர்மை என்பது உண்மையைப் பேசும் திறமையோ, பொய் சொல்லாத தன்மையோ மட்டும் அல்ல. இது ஒருவரின் நடத்தை, செயல்கள், மனநிலையின் தூய்மை, மற்றவர்களிடம் நியாயமாக நடந்துகொள்ளும் பூரண நேர்த்தி. நம்மால் யாரும் காணாத இடத்திலும் தவறில்லாமல் நடந்துகொள்ளும் மனப்பான்மைதான் நேர்மையின் உச்சம்.

நேர்மையின் மதிப்பு

1.தன்னம்பிக்கை வளர்ச்சி: நேர்மையான நபர்கள் தங்களைப்பற்றி நம்பிக்கையுடன் இருப்பார்கள். ஏனெனில் அவர்கள் யாருக்கும் பொய் சொல்லத் தேவையில்லை.

2.அறநெறி வளர்ச்சி: நேர்மையான வாழ்க்கை வாழ்பவர்கள் ஒழுக்கத்திற்கு முக்கியத்துவம் அளிப்பவர்கள். இது அவர்களின் பண்பையும் அறநெறியையும் மேம்படுத்துகிறது.

3.நம்பிக்கையை உருவாக்கும்: சமூகத்தில் ஒருவரின் மீது நம்பிக்கையை உருவாக்குவது, அவரின் நேர்மையான நடத்தைதான். நிர்வாகத்தில், தொழிலில் அல்லது நண்பர்களிடையே, நேர்மையுள்ளவர்கள் எப்போதும் மதிப்பிற்குரியவர்களாக இருப்பார்கள்.

4.தொழில் மற்றும் வாழ்க்கை வெற்றி: இடைக்கால சிக்கல்களை நேர்மையானவர்கள் எதிர்கொள்ளக்கூடியவர்களாக இருந்தாலும், நீண்ட காலத்தில் அவர்கள் பெரும் வெற்றியை அடைவார்கள்.

5.சமாதானமான மனநிலை: பொய்கள் பேசுபவர்களுக்கு பயம், குழப்பம், வருத்தம் போன்றவை ஏற்படலாம். நேர்மையான நபர்கள் மனதில் அமைதியாக இருப்பார்கள்.

இதையும் படியுங்கள்:
நட்பு என்னும் கோபுரத்தை கட்டுங்கள்!
Motivational articles

6.தனி நபர் வளர்ச்சிக்கு நேர்மையின் பங்கு:  தனிநபரின் உண்மை முன்னேற்றம் என்பது கல்வி, பணம், பதவி அல்ல. அவனது மனித நேசம், ஒழுக்கம், உண்மை, பொறுப்பு உணர்வு, நாடும் சமூகத்திற்கும் செய்த தொண்டுகள் ஆகியவையே அவரது வளர்ச்சியின் அடையாளம். இவற்றில் முக்கியமானது நேர்மை. நேர்மையற்ற வளர்ச்சி வெறும் முகமூடி போன்றது.  ஒருநாள் அவிழ்ந்துவிழும்.

7.நல்ல முறையில் நேர்மையை வளர்க்கும் வழிகள்:  சிறுவயதிலிருந்தே ஒழுக்கக் கல்வி வழங்குதல். பெற்றோரும் ஆசிரியர்களும் நேர்மைக்கு முன்மாதிரியாக இருக்க வேண்டும். பொய் சொல்லும் சூழ்நிலையைத் தவிர்த்து, உண்மையை உரைக்கும் பொறுப்பு உணர்வை வளர்த்தல். சின்ன தவறுகளையும் ஒளிக்காமல் சுதாரிக்க கற்றுத்தரல்.

நேர்மையின் சிறப்பு;

நேர்மை என்பது ஒரு நபரின் உண்மையான வளமாகும். நேர்மையான நபரை உலகம் எப்போதும் மதிக்கும். நேர்மை இல்லாத வாழ்க்கை, வேரற்ற மரம்போல இருக்கிறது. உண்மை பேசுவது கடினமாயிருந்தாலும், அதில் தைரியம் உண்டு. நேர்மை உள்ள இடத்தில் நம்பிக்கை, மதிப்பு மற்றும் நல்வாழ்வு பிறக்கின்றன.

ஒருவரின் வார்த்தைகளும் செயல்களும் நேர்மையானவையாக இருக்க வேண்டும். நேர்மை என்பது பிறருக்காக அல்ல, நம் மன அமைதிக்காகவே.

கல்வியுடன் நேர்மையும் இணைந்தால், ஒருவரின் வாழ்க்கை சிறக்க வாய்ப்பே அதிகம்.

இதையும் படியுங்கள்:
இலக்கை அடைவதை எளிதாக்குவதற்கு வழிகள் உள்ளதா?
Motivational articles

சிறு வயதிலிருந்து நேர்மையை பழக்கமாக்கினால், அது வாழ்நாள் முழுவதும் வழிகாட்டும்.

நேர்மை என்பது தனிநபர் வளர்ச்சிக்கு ஒரு உறுதியான அடித்தளம். ஒழுக்கமும் நேர்மையும் ஒருவரை மக்களிடையே உயர்த்துகிறது. வாழ்க்கையில் எதையும் இழந்தாலும் மீண்டும் பெறலாம், ஆனால் நேர்மையை இழந்தால் நம்பிக்கையும், மதிப்பும் என்றென்றும் நிழலாகிவிடும். அதனால், நாம் அனைவரும் நேர்மையுடன் நடந்து, ஒழுக்கம் சார்ந்த வாழ்க்கையை மேற்கொள்வோம். இது நம்மையும், நமது சமூகத்தையும் உயர்த்தும்.

“நேர்மை என்ற ஒளி, நம் உள்ளத்தை ஒளிரச் செய்யும் வாழ்வின் ஒளிக்கதிர்.”

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com