கவிதை - கடலென எழு!

motivation image
motivation imageImage credit pixabay.com
Published on

ழம் அறியா

அலை கடலாய்

மனதில் நாளும்

மலரும் எண்ணம்

நேர்மறை ஆனால்

நிலைக்கும் வாழ்க்கை.

அகத்தில் குமுறல்

அடையும் தாக்கம்

ஆழிப் பேரலையாய்

ஆதிக்கம் செலுத்தும்.

அனைத்தையும் அழித்து

அமைதியை நிறைக்கும்.

மௌனம் காக்கும்

மௌவல் பரவும்.

ஆழ் மனதில்

ஆழ் நினைவுகள்

உறக்கத்தில் விழிக்கும்

கிறங்கித் தவிக்கும்.

ஆழத்தில் பிறக்கும்

ஆணி முத்தாகும்.

பேரொளி வீசும்.

பேரின்பம் நல்கும்.

பலருக்கும் வாழ்வு

பதமாய்த் தந்திடும்.

இதையும் படியுங்கள்:
கலை, கலாச்சாரப் பிரியர்களுக்கான இடம் சம்பா! அப்படி என்ன ஸ்பெஷல்?
motivation image

முயற்சியை விடாது

முன்னேறும் அலையாகு.

தோல்வியை நுரையென

தூக்கி எறிந்திடு.

வெற்றியைப் பெற்றிட

விரைந்து எழுந்திடு.

நடுகடலென அமைதியை

நிலை நாட்டிடு.

மனதில் நிறைவு

மலரும் உறையும்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com