மரியாதை என்பது மனிதத் தொடர்புக்கு மிகவும் முக்கியமான அம்சமாகும். இது பெரும்பாலும் ஒருவரின் தன்மை மற்றும் நடத்தையின் அடிப்படையில் கொடுக்கப்படுகிறது. மற்றவர்களால் மதிக்கப்படுவது மக்களின் வாழ்க்கையில் ஒரு நேர்மறையான தாக்கத்தை ஏற்படுத்துகிறது. இந்த பதிவில் உங்களைச் சுற்றியுள்ள நபர்கள் உங்களை மதிக்கிறார்கள் என்பதற்கான அறிகுறிகள் என்னென்ன என்பது பற்றி பார்க்கலாம்.
உங்களை ஒருவர் மதிக்கிறார் என்றால், நீங்கள் சொல்லும் விஷயங்களை காது கொடுத்து கேட்டு அதன்படியே நடந்து கொள்வார்கள். ஏனெனில் உங்கள் மீது அவர்களுக்கு இருக்கும் நம்பிக்கை உங்கள் வார்த்தைகளை முழுமையாக நம்ப வைக்கும். இது பிறரால் நீங்கள் மதிக்கப்படுகிறீர்கள் என்பதற்கான தெளிவான அறிகுறியாகும். பிறர் அவர்களது முடிவுகளை எடுப்பதற்கு உங்களது கருத்துக்கள் மற்றும் யோசனைகளை கேட்பார்கள். அவர்கள் தங்களின் எண்ணங்களையும் கவலைகளையும் உங்களுடன் பகிர்ந்து கொள்வதை அதிகம் விரும்புவார்கள்.
மற்றவர்களிடமிருந்து மரியாதையைப் பெறுவதில் நேர்மை மிக முக்கிய பங்கு வகிக்கிறது. நேர்மை, நம்பகத்தன்மை மற்றும் நல்ல பழக்கங்கள் போன்றவற்றை நீங்கள் தொடர்ந்து வெளிப்படுத்தும்போது உங்கள் மீது பிறருக்கு மரியாதை வர வாய்ப்புள்ளது. உங்களது வார்த்தைகள் செயல்களுடன் ஒத்துப் போகும்போது மற்றவர்கள் உங்களை அதிகம் மதிக்க ஆரம்பிப்பார்கள். எனவே நீங்கள் நேர்மையாக இருந்தால் பிறர் உங்களை மதிப்பதற்கான அறிகுறிகளை நீங்கள் உணர முடியும்.
உங்களை சிலர் மதிக்கிறார்கள் என்றால், பலர் முன்னிலையில் உங்களை அதிகம் பாராட்டுவார்கள். உங்களது சாதனைகளை பிறருக்கு எடுத்துரைப்பார்கள். பிறரிடம் இருந்து மரியாதை கிடைத்ததற்கு உங்களது குணம், பழக்க வழக்கங்கள் பேச்சு நடத்தைப் போன்றவையே முக்கிய பங்காற்றுகின்றன. இது பிறருக்கு உங்களை ஈர்ப்பு மிக்கவர்களாக காட்டும்.
மேலும், உங்களைப் பிடித்தவர்கள் உங்களிடம் எல்லா உண்மைகளையும் சொல்வார்கள். திறந்த புத்தகமாக பழகுவார்கள். எதையும் உங்களிடம் மறைக்க மாட்டார்கள். உங்களிடமிருந்து பல விஷயங்களை கற்றுக்கொள்ள ஆர்வம் காட்டுவார்கள். பெரும்பாலான சமயங்களில் உங்களுடன் இருப்பதை அதிகம் விரும்புவார்கள்.
மற்றவர்களால் நீங்கள் மதிக்கப்படுகிறீர்கள் என்பதற்கான மற்றொரு அறிகுறி, எல்லா சூழ்நிலைகளிலும் உங்களுக்கு உறுதியான ஆதரவு கிடைக்கும். ஏதேனும் தவறு நிகழ்ந்துவிட்டால், உங்களுக்காக உங்களை மதிக்கும் நபர்கள் உங்களுடனே இருப்பார்கள். ஒருபோதும் உங்களை கைவிட மாட்டார்கள். தேவைப்பட்டால் உங்களுக்கு ஊக்கமளிப்பது, வழிகாட்டுதல் மற்றும் உதவிகளை செய்வார்கள்.
இந்த அறிகுறிகளை வைத்து உங்களை பிறர் மதிக்கிறார்கள் என்பதை நீங்கள் உணர்ந்து கொள்ளலாம்.