கிடைத்த வாழ்க்கையை நேசிப்பது எப்படி? மகிழ்ச்சிக்கான சூட்சுமம்!

எதிர்பாராத மாற்றங்கள் உங்கள் வாழ்வின் வரமா? உங்களை மாற்றிக்கொண்டு மகிழ்ச்சியைத் தேடும் வழிமுறை
மகிழ்ச்சியாக வாழ்
மகிழ்ச்சியாக வாழ்AI image
Updated on

வாழ்க்கையில் பிடித்த வாழ்க்கையை வாழ்பவன் அதிர்ஷ்டசாலி என்பது மிகச்சிறந்த தத்துவார்த்த சிந்தனையாகும். நம் இலக்குகளை நோக்கி நாம் பயணிக்கும் பொழுது, நம் விருப்பங்களை நடைமுறைக்குக் கொண்டுவர இது மிகவும் பயனுள்ளதாக இருக்கும்.

தனது கனவு மற்றும் விருப்பங்களுக்கு ஏற்ப வாழ்பவன் இயற்கையிலேயே பாக்கியவான்தான். ஒருவேளை தனக்குப் பிடித்த வாழ்க்கை அமையாவிட்டாலும், கிடைத்த வாழ்க்கையைத் தனக்குரியதாக மாற்றிக் கொண்டு அதில் மகிழ்ச்சியைக் காண்பவனே உண்மையான புத்திசாலி.

இதைத்தான் வாழ்க்கையில் பிடித்த வாழ்க்கையை வாழ்பவன் அதிர்ஷ்டசாலி, ஆனால் கிடைத்த வாழ்க்கையைப் பிடித்து வாழ்பவன் புத்திசாலி என்ற பொன்மொழியின் அழகிய வரிகள் ஆழமான அர்த்தங்களைக் கொண்டுள்ளது. கிடைத்த எந்த வாழ்க்கையாக இருந்தாலும் மகிழ்ச்சியாக அதைக் கொண்டாடி வாழவேண்டும்.

சூழ்நிலைக்கு ஏற்ப நம்மை மாற்றிக்கொண்டு மகிழ்ச்சியாக வாழ்வது எப்படி?

நாம் விரும்பிய வேலை, அன்பு காட்டும் குடும்பம் மற்றும் ஆசைப்பட்ட சூழல் அமைவது எல்லாம் பெரும் கொடுப்பினை தான். இவை அனைவருக்கும் கிடைத்துவிடாது. எந்த ஒரு பெரிய போராட்டமும் இன்றி நினைத்த காரியங்கள் தடையின்றி நடப்பது அதிர்ஷ்டத்தின் அடையாளமே!

ஆரம்பத்தில் இருந்தே தனக்குப் பிடித்தமான பாதையில் பயணிப்பதால் இவர்களது மனம் எப்போதும் மகிழ்ச்சியாக இருக்கும். ஆனால் ஒருவேளை அப்படி அமையாவிட்டாலும், கிடைத்த வாழ்க்கையை ரசித்து வாழ கற்றுக் கொண்டால் நாம்தான் உண்மையான புத்திசாலி!

எதிர்பாராத தடைகள் அல்லது ஏமாற்றங்கள் வரும்பொழுது அதைக் கண்டு சோர்ந்து போகாமல் தற்போதைய நிலையை ஏற்றுக்கொண்டு வாழ்வதே சிறப்பு. கிடைத்த சூழலில் இருக்கும் நன்மைகளைக் கண்டறிந்து அதை தனக்கு சாதகமாக மாற்றிக் கொண்டால் என்றும் மகிழ்ச்சிதான். சூழ்நிலைகள் எப்படி இருந்தாலும் தன் மன அமைதியையும் மகிழ்ச்சியையும் மற்றொன்றைச் சார்ந்து வைக்காமல் வாழப் பழகினோம் என்றால் வாழ்வில் என்றும் சந்தோஷம் நிலைத்திருக்கும்.

வாழ்க்கை என்பது நாம் விரும்பியபடியே எப்பொழுதும் அமைவதில்லை. எந்த சூழலையும் நம் மனநிலைக்கு ஏற்ப மாற்றிக்கொண்டு மகிழ்ச்சியாக வாழ்வதுதான் உண்மையான வெற்றி.

கிடைக்கும் வாய்ப்புகளை ஏற்றுக்கொண்டு அதில் நேர்மறையான விஷயங்களைத் தேடுவதுதான் புத்திசாலித்தனம்.

சில நேரங்களில் திட்டமிடாத மாற்றங்கள் நிகழலாம். அவற்றை ஏற்றுக்கொண்டு அதற்கேற்ப வாழ்வதுதான் வாழ்க்கையை சுமையாக்காமல் எளிதாக்கும். இருப்பதைக்கொண்டு திருப்தி அடைவதும், மாற்றங்களுக்கு ஏற்ப நம்மை மாற்றிக் கொள்வதும் அவசியம்.

மகிழ்ச்சியாக வாழ்
மகிழ்ச்சியாக வாழ்AI image

கிடைக்காத ஒன்றை நினைத்து ஏங்குவது நேர விரயம். எதிர்பார்ப்புகளை குறைத்துக் கொண்டால் ஏமாற்றங்கள் வராது. கிடைத்த வாழ்க்கையை நேசிக்கும் போது மன அழுத்தம் குறைகிறது. இதுவே நிரந்தர மகிழ்ச்சிக்கு வழிவகுக்கும். கடந்த காலத்தை மாற்ற முடியாது; எதிர்காலத்தைக் கணிக்க முடியாது.

நிகழ்காலத்தை நேசித்து வாழ்வதே சிறப்பு. வாழ்க்கை என்பது நாம் அமைத்துக் கொள்ளும் மனநிலையைப் பொறுத்து அமைகிறது. சூழ்நிலைகள் எப்படி இருந்தாலும் அதை பாசிட்டிவாக எதிர் கொள்வதே ஒரு சிறந்த மனிதனின் அடையாளமாகும்.

கிடைத்த வாழ்க்கையை அன்புடன் ஏற்று, அதை நேசித்து வாழ வேண்டும். இதற்கு ஒரு குட்டி கதையைப் பார்ப்போமா?

அடர்ந்த காட்டுப் பகுதியில் இருந்த ஒரு பெரிய ஆலமரத்தில் பல பறவைகள் வாழ்ந்து வந்தன. ஒருநாள் காட்டுத் தீ பரவத் தொடங்கியதும் பறவைகள் அனைத்தும் தங்கள் கூட்டை விட்டு அலறி அடித்துக் கொண்டு பறந்து ஓடின. ஆனால் ஒரு சிறிய குருவி மட்டும் அங்கிருந்து தப்பித்து ஓடாமல் அருகில் இருந்த குட்டையிலிருந்து தன் சிறிய அலகில் நீர்த்துளிகளை எடுத்து காட்டித் தீயின் மீது வீசியது. இதைப் பார்த்த கழுகு ஒன்று மூடப் பறவையே உன்னால் இந்த காட்டுத்தீயை அணைக்க முடியுமா? வீணாக உன் உயிரை மாய்த்துக் கொள்ளாதே இங்கிருந்து பறந்து விடு என்று கூறியது.

இதையும் படியுங்கள்:
உங்கள் இலக்கை அடைய இதுதான் ஒரே வழி!
மகிழ்ச்சியாக வாழ்

அதற்கு சிறிய குருவியோ சிரித்தபடியே, "இந்தக் காடு எனக்கு எல்லாவற்றையும் கொடுத்தது; இன்பத்தை, நிழலை, உணவை அளித்தது. இப்பொழுது என் வீடு ஆபத்தில் இருக்கும்போது என்னால் முடிந்ததை நான் செய்கிறேன். என் சக்திக்கு மீறி நான் போராடுகிறேன் என்ற மனநிறைவோடு நான் என் உயிரை விடுவேனே தவிர, ஓடிப்போக மாட்டேன் என்றது.

இந்த குருவியின் தன்னலமற்ற, கிடைத்த வாழ்க்கையை நேசிக்கும் குணத்தைப் பார்த்த வானத்தின் தேவதைகள் அதன் மீது மழை பொழிந்து காட்டுத்தீயை அணைத்தன. இந்தக் கதை தரும் பாடம்: நம்மிடம் உள்ளதை குறை கூறாமல், கிடைத்த வாழ்க்கையை நேசித்து, அதற்கு நன்றி உணர்வுடன் வாழும்போது எந்த பெரிய சோதனையையும் நாம் வென்று வாழ்வில் வெற்றிபெற முடியும்! உண்மைதானே நண்பர்களே!

இதையும் படியுங்கள்:
புக் படிச்சா மட்டும் பத்தாது.. எலான் மஸ்க் சொல்ற இந்த சீக்ரெட் உங்களுக்குத் தெரியுமா?
மகிழ்ச்சியாக வாழ்

இந்த ஆலோசனைகளைப் பின்பற்றுவதன் மூலம், உங்கள் அன்றாட வாழ்வின் சிக்கல்களைக் கையாளும் திறன் மேம்பட்டு, எந்தச் சூழலிலும் உங்களைச் சுற்றி நேர்மறையான அதிர்வுகளை உருவாக்க முடியும்.

logo
Kalki Online
kalkionline.com