முதியோர்கள் குழந்தைகளுடன் நேரத்தை கழிப்பதால் உருவாகும் மனமகிழ்ச்சி!

Motivational articles
Social relations development..
Published on

முதியோரின் வாழ்கையில் மனமகிழ்ச்சி என்பது மிகவும் முக்கியமான ஒரு பகுதி. வயதாகும்போது உடல் வலிமை குறையலாம்; ஆனால் மன உற்சாகம் வளரவேண்டியது அவசியம். இந்த நிலையை சரி செய்ய சிறந்த வழிகளில் ஒன்று, குழந்தைகளுடன் நேரத்தை கழிப்பது.

1. மன அழுத்தம் குறைதல்: குழந்தைகளின் அப்பாவி பேச்சு, சிரிப்பு, கேள்விகள் மூலமாக பெரியவர்கள் தங்கள் கவலைகளை மறந்து விடுகிறார்கள். அவர்களுடன் விளையாடும்போது சிரிப்பு அதிகரித்து மன அழுத்தம் குறைகிறது.

2. இளமையாக உணர்வது: வயதானவர்கள் குழந்தைகளுடன் விளையாடும்போது தாங்கள் மீண்டும் ஒரு குழந்தையாக மாறுகிறார்கள். இதனால் மனதிலும், உடலிலும் இளமையால் பூரணமடைந்த ஒரு உணர்வு உருவாகிறது.

3. தனிமை உணர்வு நீங்குகிறது: பல முதியோர் ஒருவரால் மட்டுமே வாழும் சூழ்நிலையில் இருக்கிறார்கள். குழந்தைகளின் அண்மை, அவர்களின் விளையாட்டு மற்றும் உரையாடல், அவர்களுக்கு ஒரு குடும்பத்தைப் போல் ஒரு சூழலை ஏற்படுத்துகிறது.

4. சமூக உறவுகள் மேம்பாடு: குழந்தைகளுடன் நட்பாக பழகுவதன் மூலம், பெரியவர்களுக்கு குடும்ப உறவுகள் மேலும் வலுப்பெறும். இது அவர்களின் சமூக உட்புகுந்த உணர்வை அதிகரிக்கிறது.

5. மன அழுத்த குறைப்பு, புத்துணர்ச்சி: குழந்தைகள் செய்யும் சிறு சாகசங்களும், சிரிப்பும், தவறுகளும் பெரியவர்களை சிரிக்க வைக்கின்றன. இது மூளையின் சிரிப்பு ஹார்மோன்களான ‘எண்டார்பின்களை’ அதிகரிக்க உதவுகிறது.

6. வாழ்க்கை குறித்த புதிய பார்வை: முதியோருக்கு, குழந்தைகள் காட்டும் ஆர்வம், புது விஷயங்களை கற்றுக்கொள்ளும் முயற்சிகள் போன்றவை வாழ்க்கையை மீண்டும் ஒருமுறை ரசிக்க உதவுகின்றன. இது அவர்களின் வாழ்வின் மீது புதிய நம்பிக்கையை ஏற்படுத்துகிறது.

முதியோர்கள் குழந்தைகளுடன் விளையாடும் தருணங்கள், அவர்களின் வாழ்வில் புதிய ஒளியையும், உற்சாகத்தையும் கொண்டு வருகிறது. இது மனநலம் மட்டும் அல்லாமல் உடல் நலத்தையும் மேம்படுத்தும் ஒரு நேரடி வழியாகும். குடும்பத்தில் மூத்தவர்களையும், சிறுவர்களையும் இணைக்கும் இந்த உறவை ஊக்குவிப்பது ஒவ்வொரு குடும்பத்திற்கும் ஒரு பொன்னான கடமை.

இதையும் படியுங்கள்:
எங்கும் எதிலும் காண்போம் வெற்றி தரும் நேர்மறை எண்ணம்..!
Motivational articles

என்னென்ன விளையாட்டுகள் விளையாடுவது நல்லது

முதியோர்கள் குழந்தைகளுடன் வயது ரீதியாக உகந்த, சிரமமில்லாத, நகைச்சுவை தன்மை உள்ள விளையாட்டுகளை விளையாடலாம்.

1. பழமொழி / தொடர்கதை: ஒருவர் பழமொழியின் முதல் பாதியை சொல்வார், மற்றவர் முடிப்பது. அல்லது ஒரு கதையை ஒருவர் ஆரம்பிக்க, மற்றவர் தொடர்வது. நகைச் சுவையும், அறிவுத்திறனும் கூடும்.

2. போர்டு விளையாட்டுகள்: லூடோ: சதுரங்கம், சாகோ (Snake and ladder), கேரம். இவை அமைதியான சூழலில் உடல் சிரமமில்லாமல் விளையாட இயலும்.

3. வினா விடை / ஞாபகசக்தி விளையாட்டு: பழைய படங்கள் காட்டி “இவர் யார்?” என்று கேட்பது. பழைய நிகழ்வுகள் பற்றிக்கேள்வி கேட்பது. குழந்தைகளும், பெரியவர்களும் ஞாபகசக்தியை வளர்க்க உதவும்.

4. ஓவியம் / வண்ணம் புகட்டும் விளையாட்டு: ஓவியங்கள் வரைந்து குழந்தைகள் நிறம் போடலாம். அல்லது தாமும் ஓவியம் வரையலாம், கலை சிந்தனை வளரும்.

5.சமையல்கலை விளையாட்டு: பெரியவர்கள் குழந்தைகளுடன் எளிய உணவு வகைகளைச் செய்யலாம். எடுத்துக்காட்டு: பிஸ்கட் டெக்கரேஷன், பழவகை கலவை.

இதையும் படியுங்கள்:
சமையலறையில் நேரத்தை மிச்சப்படுத்த சில சமையல் டிப்ஸ்!
Motivational articles

6.பாரம்பரிய விளையாட்டுகள்: பல்லாங்குழி, தேர் உருட்டல்,  குச்சி கிரிக்கெட், இவை நம் பாரம்பரியத்தை குழந்தைகளுக்குப் பயிற்றுவிக்கும் ஒரு நல்ல வழி.

மிகுந்த உடல் இயக்கம் தேவைப் படும் விளையாட்டுகளை தவிர்க்க வேண்டும். இருவரும் மனம் திறந்து உற்சாகமாக கலந்துகொள்ளக்கூடிய விளையாட்டுகள் தேர்வு செய்யவேண்டும். உறவுகளை மேம்படுத்தும் மற்றும் அறிவை தூண்டும் விளையாட்டுகள் சிறந்தவை.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com