இந்தியாவில் அதிகம் அறியப்படாத ரகசியங்களைக் கொண்ட 6 தனித்துவமான கோயில்கள்!

Unique Indian temples
Unique Indian temples
Published on

மது இந்தியா வளமான வரலாறு, செழுமையான கலாசாரம் மற்றும் தனித்துவமான கோயில்களுக்கு பெயர் பெற்ற நாடு. உலகில் வேறெங்கும் இல்லாத அளவில் தனித்துவமிக்க 6 இந்திய கோயில்களைப் பற்றி இந்தப் பதிவில் பார்ப்போம்.

1. கைலாசநாதர் கோயில் - மகாராஷ்டிரா: எல்லோரா குகைகளுக்குள் மறைந்திருக்கும் கைலாசநாதர் கோயில் பெரும்பாலும் கவனிக்கப்படாமல் இருக்கும் ஒரு அற்புதமாகும். ஒரே ஒரு பாறையில் இருந்து செதுக்கப்பட்ட இந்தக் கோயில் பண்டைய கட்டடக் கலைஞர்களின் படைப்பாற்றலுக்கு ஒரு சான்றாக விளங்குகிறது. இந்தக் கோயிலின் சுவர்கள் மற்றும் கூரைகளில் இந்துக் கடவுள்களின் அழகான உருவங்கள் மற்றும் புராணக் கதைகள் சிவப்பு, மஞ்சள், பச்சை நிறங்களில் அழகாக வடிக்கப்பட்டுள்ளன. இது ஒரு அற்புதமான கலைக்கூடம் ஆகும்.

இதையும் படியுங்கள்:
திருப்பதியில் உள்ள சுவாமி புஷ்கரணி முதல் பாபவிநாசன தீர்த்தம் வரை... நீராடுவதால் கிடைக்கும் பலன்கள்!
Unique Indian temples

2. பிரம்மன் கோயில் - ராஜஸ்தான்: ராஜஸ்தானில் உள்ள புஷ்கர் ஒரு பிரபலமான புனித யாத்திரைத் தலம். இங்குள்ள பிரம்மன் கோயில் உலகில் பிரம்மாவுக்காக அர்ப்பணிக்கப்பட்ட சில முக்கியமான கோயில்களில் ஒன்றாகும். தனித்துவமான கட்டடக்கலை பாணியில் துடிப்பான வண்ணங்கள் மற்றும் கவர்ச்சிகரமான வடிவமைப்பால் தனித்து நிற்கிறது. மென்மையான இளம் சிவப்பு மற்றும் ஆழமான நீல நிறங்களுடன் அழகிய வெள்ளைக் கற்களுடன் பளிச்சிடுகிறது. இவ்வூரின் மறைக்கப்பட்ட ரத்தினம் போல விளங்குகிறது.

3. மெஹந்திப்பூர் பாலாஜி கோயில் - ராஜஸ்தான்: இந்தக் கோயில் வினோதமான ஆன்மிக நடைமுறைகள் மற்றும் சடங்குகளுக்கு பிரபலமானது. இது அனுமனுக்கு அர்ப்பணிக்கப்பட்ட கோயிலாகும். தீய சக்திகளால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு சிறந்த நிவாரணியாக இந்தக் கோயில் விளங்குகிறது. மந்திரங்கள் ஓதுதல், தீ சம்பந்தமான சடங்குகளை செய்வது போன்றவை இங்கே பிரபலம். முழுக் கோயிலும் சிவப்பு, ஆரஞ்சு மற்றும் மஞ்சள் நிறங்களால் நிரம்பியுள்ளது. எதிர்மறை சக்திகளில் இருந்து நிவாரணம் பெற விரும்பும் மக்களுக்கான கோயில் இது.

4. முண்டேஸ்வரி தேவி கோயில், கைமூர் - பீகார்: உலகின் மிகப் பழைமையான இந்து கோயில்களில் ஒன்றான இது, கி.பி. 108ம் ஆண்டைச் சேர்ந்தது. அதன் எண்கோணக் கருவறை ஒரு அரிய கட்டடக்கலை அம்சமாகும். இந்த கோயிலில் சிவன் மற்றும் சக்தி தேவியின் பழங்கால சிலைகள் உள்ளன. பல நூற்றாண்டுகளாக இந்த இடத்தில் தொடர்ந்து வழிபாடு நடத்தப்பட்டு வருவதும், குப்தர் கால கல்வெட்டுகள் மற்றும் கல் சிற்பங்களும் இதை ஒரு குறிப்பிடத்தக்க வரலாற்று மற்றும் ஆன்மிக பொக்கிஷமாக ஆக்குகின்றன.

இதையும் படியுங்கள்:
ஆலயத்துக்குச் சென்றால் சற்று நேரம் அமர்ந்து விட்டு வர வேண்டியதன் ரகசியம் தெரியுமா?
Unique Indian temples

5. குடிமல்லம் ஸ்ரீ பரசுராமேஸ்வரர் கோயில் - ஆந்திரப் பிரதேசம்: சித்தூர் மாவட்டத்தில் அமைந்துள்ள இந்த தனிமைப்படுத்தப்பட்ட மற்றும் பழைமையான கோயில், கி.மு. 3 அல்லது 2ம் நூற்றாண்டைச் சேர்ந்த சிவனின் சித்தரிப்புடன் சிக்கலான முறையில் செதுக்கப்பட்ட அதன் தனித்துவமான சிவலிங்கத்திற்குப் பெயர் பெற்றது. இந்தக் கோயிலின் கட்டுமான பாணி, தென்னிந்தியாவில் பொதுவாகக் காணப்படும் பிரம்மாண்டமான திராவிடக் கட்டடக் கலைக்கு முந்தையது என்பது குறிப்பிடத்தக்கது. அதிகம் பிரபலமாகாத இந்தக் கோயில் ஆர்வமுள்ள வரலாற்றாசிரியர்கள் மற்றும் பக்தர்களுக்கு சிறப்பான ஆலயமாகக் கருதப்படுகிறது.

6. நச்சனா பார்வதி கோயில், பன்னா - மத்தியப் பிரதேசம்: 5ம் நூற்றாண்டு, குப்தர் காலத்தைச் சேர்ந்த இந்த அரிய ஆலயம், பார்வதி தேவிக்கு அர்ப்பணிக்கப்பட்டுள்ளது. மத்தியப் பிரதேசத்தில் ஒரு தொலைதூரக் கிராமத்தில் இது அமைந்துள்ளது. அதன் எளிமையான வடிவமைப்பு மற்றும் புராணக் காட்சிகளின் விரிவான சிற்பங்கள் ஆரம்பகால நகரா கோயில் கட்டடக்கலை மற்றும் கலைத்திறனை வெளிப்படுத்துகின்றன. இந்தியாவின் பண்டைய கிராமப்புற பக்தி மரபுகளைப் பற்றிய உண்மையான பார்வையை வழங்கும் இந்தக் கோயில், பிரதான சுற்றுலாப் பயணிகளால் பெரும்பாலும் கவனிக்கப்படாமல் உள்ளது. இந்தக் கோயில் இரண்டு மாடி அமைப்பைக் கொண்டுள்ளது. இது ஆரம்பகால அரிதான இந்து கட்டடக் கலைக்கு சான்றாக உள்ளது. தரைத்தள கருவறையின் மேல் ஒரு கூடுதல் கருவறை கட்டப்பட்டுள்ளது. இருப்பினும், மேல் அறைக்கு ஏறுவதற்கு படிக்கட்டு போன்ற எந்த வழியும் இல்லை என்பது மர்மமாகவே உள்ளது.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com