திருவண்ணாமலை கிரிவலம் தரும் நன்மைகள்!

திருவண்ணாமலை கிரிவலம் தரும் நன்மைகள்!

மிழ் மாதங்கள் தோறும் 15 நாட்களுக்கு ஒருமுறை அமாவாசையும் பௌர்ணமியும் வரும். தமிழ் ஆண்டின் முதல் மாதமான சித்திரைக்கு இருக்கும் சிறப்புகள் அதிகம். சித்திரை திங்கள் விழா என்பது சூரியனின் நகர்வு நிலையைக் கொண்டு தமிழர்களால் கொண்டாடப்படும் விழாவாகும்.

இது வசந்த காலத்தின் துவக்கம் என்பதால் செடி, கொடிகள் பூத்துக் குலுங்குகின்ற காலமாக அமைகிறது. மற்ற மாதங்களில் வரும் பௌர்ணமியை விட சித்திரா பௌர்ணமி அனைவராலும் சிறப்பாகக் கொண்டாடப் படுகிறது. இந்த நாளில் நம்முடைய தலைவிதியை பாவக்கணக்கு மூலம் தீர்மானிக்கும் சித்திரகுப்தரை  வணங்குதலும் , ஆலயங்களுக்குச் சென்று வழிபடுவதும் மிகவும் சிறப்பு வாய்ந்தது. காரணம், ஆலயத்தின் சக்தி சித்திரை மாதப் பெளர்ணமி நாளில் இன்னும் அதிகமாக வெளிப்படும் என்பது  ஐதீகம்.

சக்தி அதிகம் கொண்ட பௌர்ணமி நாளில் இறைவன் குடியிருக்கும் மலையை பக்தியுடன் சுற்றி வரும் கிரிவலம்  நன்மைகளைத் தரும் என்பது பக்தர்களிடையே நம்பிக்கையாக கடைபிடிக்கப்பட்டு வருகிறது. கிரிவலம் என்றாலே நம் நினைவுக்கு முதலில் வருவது  உலகப் பிரசித்தி பெற்ற சிவ தலங்களில் ஒன்றான   திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயில்தான். பஞ்சபூத தலங்களில் அக்னி தலமாக விளங்கும் சிறப்பு கொண்ட  இத்தலத்தில் ஒவ்வொரு பௌர்ணமி அன்றும் கோயிலையொட்டி அமைந்துள்ள மலையைச் சுற்றி சுமார் 14 கிலோ மீட்டர் தொலைவிற்கு பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் கிரிவலம் செல்வது வழக்கம்.

திருவண்ணாமலை கோயில் பல்வேறு புராண வரலாறு மற்றும் யோகிகள் வாழ்ந்த சிறப்புகளுக்கு பெயர் பெற்றிருந்தாலும  இந்த மலையை மக்கள் முக்கண் முதல்வனாக வணங்கப்படும் சிவனின் அம்சமாக எண்ணி வழிபடுவதுதான்  சிறப்பு. காரணம், லிங்கமே இங்கு மலையாக அமைந்திருப்பதாக  ஐதீகம். இதனால்தான் நம் முன்னோரும் திருவண்ணாமலையை நினைத்தாலே முக்தி கிடைக்கும் என்று  சொல்லி இருக்கிறார்கள்.

இதையும் படியுங்கள்:
முட்டைக்கோஸ் சாற்றில் மறைந்திருக்கும் மருத்துவ குணங்கள்!
திருவண்ணாமலை கிரிவலம் தரும் நன்மைகள்!

இப்படி சிறப்பு மிக்க திருவண்ணாமலையை சுற்றி வருவதை ஈஸ்வரனை சுற்றி வருவதாகவே எண்ணி இந்தியாவின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் ஏராளமான பக்தர்கள் இங்கு வந்து சாமி தரிசனம் செய்து கிரிவலம் மேற்கொள்கின்றனர். இன்று சித்திரா பௌர்ணமி என்பதால், கிரிவலம் செல்ல உகந்த நேரமாக இன்று அதிகாலை 4.16 மணிக்கு தொடங்கி, நாளை அதிகாலை 5.47 மணி வரை என்று கோயில் நிர்வாகம் அறிவித்துள்ளது.

கிரிவலம் செல்வதால் கால்களில் உள்ள நரம்புகள் தூண்டப்பட்டு, களைப்பு நீங்கி, உடல் ஆரோக்கியம் மற்றும் வலு பெறுகிறது. மேலும், வேண்டுதல்கள் மற்றும் இறை நம்பிக்கை மூலம் கிரிவலம் செல்வதால் நேர்மறை எண்ணங்கள் அதிகரித்து நினைத்தது அனைத்தும் நிறைவேறும். மன நலம் உடல் நலம் இரண்டும் தரும் கிரிவலத்தை வாய்ப்பிருக்கும் அனைவருமே மேற்கொண்டு ஈசன் அருள் பெறலாம்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com