கஷ்டங்களைத் தீர்க்கும் கல் உப்பின் பயன்கள் தெரியுமா?

Do you know the benefits of rock salt?
Do you know the benefits of rock salt?https://www.youtube.com

மது வீட்டில் பயன்படுத்தப்படும் உப்பு சாப்பாட்டிற்கு மட்டுமே சுவை சேர்க்க பயன்படுகிறது என்று நினைத்திருப்போம். ஆனால், உப்பால் நம் வாழ்வில் எண்ணற்ற பலன்கள் ஏற்படுகிறது என்பதை நாம் அறிவதில்லை. யாரும் பெரிதாக கண்டுக்கொள்ளாத உப்பில் ஏராளமான பலன்கள் உள்ளது. அவை என்னவென்பதை இந்தப் பதிவில் காணலாம்.

வாஸ்து சாஸ்திரத்தில் உப்பு என்பது மிகவும் முக்கியமான பங்கு வகிக்கிறது. உப்பு உடல் நலம் சம்பந்தமான பிரச்னைகளைப் போக்குவது மட்டுமில்லாமல், மகிழ்ச்சி, அமைதி, செல்வம் போன்றவற்றை வீட்டில் கொண்டு வந்து சேர்க்கிறது. உப்பு முக்கியமாக வீட்டில் உள்ள கெட்ட சக்திகளை விரட்டி பாசிட்டிவ் எனர்ஜியை தருகிறது.

நம் வீட்டில் பயன்படுத்தும் கல் உப்பை தண்ணீரில் கரைத்து அத்துடன் மஞ்சள் சிறிது சேர்த்து வீட்டை சுத்தம் செய்வதால் பாசிட்டிவ் எனர்ஜி வீடு முழுவதும் பரவும். வீட்டில் உப்பை மண் பாத்திரத்திலோ அல்லது மரபாத்திரத்திலோ வைப்பது சிறந்ததாகும்.

உப்பிற்கு லட்சுமி கடாட்சம் உண்டு என்று கூறுவார்கள். ஏனெனில் உப்பும் கடலில் தோன்றுகிறது, லட்சுமி தேவியும் கடலில் தோன்றியவர் என்பதால் உப்பு செல்வம் தரக்கூடிய பொருளாகப் பார்க்கப்படுகிறது.

ஒரு பவுலில் கல் உப்புடன் 4 கிராம்பை சேர்த்து ஏதேனும் வீட்டின் மூலையில் வைத்துவிட்டால் செல்வம், வெற்றி போன்றவற்றை ஈர்க்கும் என்று நம்பப்படுகிறது.

ஒரு டம்ளர் நீரில் ஒரு சிட்டிகை அளவு உப்பு சேர்த்து அதை வீட்டின் தென்மேற்கு மூலையில் வைத்து விட வேண்டும். இதனால் வீட்டில் பணக்கஷ்டம் நீங்கி பொருளாதார உயர்வு ஏற்படும்.

உப்பு தீபம் ஏற்றுவது என்று தற்போது மிகவும் பிரபலமாகப் பேசப்படுகிறது. இதில் முக்கியமாக கவனிக்க வேண்டிய விஷயம் என்னவென்றால், உப்பை குவித்து அதில் எண்ணெய் ஊற்றி தீபம் ஏற்றக்கூடாது. ஒரு தாம்பாளத்தில் உப்பை பரப்பி அதன் மீது மண் விளக்கை வைத்து தீபம் ஏற்றலாம். இதனால் செல்வ செழிப்பும், லட்சுமி கடாட்சமும் கிடைக்கும். இதை வெள்ளிக்கிழமை ஏற்றுவது சிறந்ததாகும்.

இதையும் படியுங்கள்:
தண்ணீரில் மிதக்கும் அதிசய மகாவிஷ்ணு சிலை எங்குள்ளது தெரியுமா?
Do you know the benefits of rock salt?

திருஷ்டி கழிக்கும்போதும் அதில் கண்டிப்பாக கல் உப்பை பயன்படுத்துவதை பார்த்திருப்போம். வெள்ளிக்கிழமை உப்பு வாங்கி வீட்டில் வைப்பது விசேஷமாகும்.

குளிக்கும்போது உப்பை தண்ணீரில் சிறிது கலந்து குளிப்பதால், நம்மிடம் இருக்கும் எதிர்மறை சக்தியைப் போக்கும். அதுமட்டுமில்லாமல், சரும நோய் போன்றவை நமக்கு வரவே வராது.

சிலருக்குக் கெட்ட கனவுகள், கண் திருஷ்டி, போட்டி பொறாமை போன்றவை வாழ்க்கையில் இருக்குமாயின், கருப்பு உப்பு என்று நாட்டு மருந்து கடைகளில் கிடைக்கும். அந்த உப்பை வாங்கி தூங்கும் இடத்தில் வைத்து கொண்டு படுத்தால் இது போன்ற தீய எண்ணங்களில் இருந்து பாதுகாப்பு கிடைக்கும். வீட்டு வாசலில் கருப்பு உப்பை தூவி விடுவதால் வீட்டில் நெகட்டிவ் எனர்ஜி தங்காது.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com