புட்டு முதல் ரசகுல்லா வரை: இந்தியாவின் புகழ் பெற்ற கோயில் பிரசாதங்கள்!

Azhakarkovil Perumal Temple Dosai Prasatham
Azhakarkovil Perumal Temple Dosai Prasatham
Published on

ம் நாடு முழுவதும் எண்ணற்ற கோயில்கள் இருக்கின்றன. அவற்றில் மிகவும் பிரசித்தி பெற்ற கோயில்களின் பிரசாதங்கள் பற்றி இப்பதிவில் பார்ப்போம்.

புட்டு: காஞ்சி காமாட்சி அம்மனுக்கு ஆவணி மாதம் மூல நட்சத்திரத்தன்று புட்டு நிவேதனம் செய்யப்படுகிறது.

அதிரசம்: காரைக்கால் அருகில் உள்ள திருமலைராயன் பட்டணத்தில் குடி கொண்டிருக்கிறார் ஆயிரம் காளி அன்னை. 5 ஆண்டுக்கு ஒரு முறை மூன்று நாட்கள் அம்மனை பெட்டியில் இருந்து எழுந்தருளச் செய்து ஆயிரம் அதிரசம் படைத்து படையல் வைத்து வணங்கி அருள் பெறுகின்றனர்.

அக்கார அடிசில்: ஆண்டாளுக்கு மார்கழி மாதம் 27ம் நாள் அக்கார அடிசில் நிவேதனம் செய்யப்படுகிறது. இதற்கு பால், நெய் மிக அதிகம் தேவை.

இதையும் படியுங்கள்:
சொர்க்கவாசல் இல்லாத பெருமாள் கோயில்கள்: ஆச்சரியமூட்டும் பின்னணி காரணங்கள்!
Azhakarkovil Perumal Temple Dosai Prasatham

தோசை பிரசாதம்: மதுரை அடுத்த அழகர்கோவிலில் மலை உச்சியில் நூபுர கங்கை பாய்கிறது. இந்த தண்ணீரை பயன்படுத்தி தோசை பிரசாதம் தயார் செய்யப்பட்டு அழகருக்கு படைக்கப்பட்டு பிரசாதமாக வழங்கப்படுகிறது.

ஒப்பிலியப்பர் உப்பில்லா வடை: கோயில் பிரசாதத்தில் உப்பில்லாமல் தரும் தட்டை, முறுக்கு, வடையை அங்கே சாப்பிட்டால் உப்பு போடாத குறையே தெரியாது. கும்பகோணம் அருகில் இருக்கும் இந்த பெருமாள் கோயில் பிரசாதத்தல் உப்புப் போட மாட்டார்கள்.

அரவணை: சுவாமி ஐயப்பன் மற்றும் ஸ்ரீரங்கம் கோயில் அரங்கனுக்கும் அவனது அணையான ஆதிசேஷனுக்கும் அமுதுசெய்யப்படும் பிரசாதம் இது.

லாப்சி: சத்யநாராயண சுவாமிக்கு நைவேத்யம் செய்யும் பலகாரம் இது. ஜெயின் கோயில்களிலும் வழங்கப்படுகிறது.

காரா பிரசாதம்: பஞ்சாப் பொற்கோயிலில் வழங்கப்படும் பிரசாதம் இது.

இதையும் படியுங்கள்:
ஒரு கிலோ எடை தங்க சடாரி: வைகுண்ட ஏகாதசி அன்று மட்டும் கிடைக்கும் பெருமாள் பாத தரிசனம்!
Azhakarkovil Perumal Temple Dosai Prasatham

பால் மாங்கா: திருவனந்தபுரம் பத்மநாப சுவாமி கோயில் பிரசாதம். தங்கத்தால் பூசப்பட்ட சிரட்டை அல்லது தேங்காய் ஓட்டில் வைத்து மட்டுமே பத்மநாப சுவாமி கோயிலில் நைவேத்தியம் செய்யப்படுகிறது. இங்கிருக்கும் சிரட்டை 1200 வருடங்களுக்கும் மேல் பழைமையானது.

கொஜ்ஜா வலக்கி/ ஹூலியா வலக்கி: இது கர்நாடக கிருஷ்ணர் கோயில் பிரசாதம். இந்த நைவேத்யம் உப்பு, புளிப்பு, காரம், இனிப்பு சேர்ந்து வித்தியாசமான சுவையோடு இருக்கும்.

சர்க்கரைப் பொங்கல்: பெருமாள் கோயில்களில் சர்க்கரை பொங்கல் பிரசாதமாக தரப்படுகிறது.

வெண் பொங்கல்: மார்கழி மாதம் முழுவதும் அதிகாலை வேளையில் பெருமாள் கோயில்களில் இதனை பிரசாதமாக கொடுப்பது வழக்கம்.

தயிர் சாதம்: இது தேய்பிறை அஷ்டமி நாளில் பைரவருக்குப் படைத்து பிரசாதமாக வழங்கப்படுகிறது.

மிளகு புளியோதரை: இது திருவல்லிக்கேணியில் உள்ள பார்த்தசாரதி பெருமாள் கோயிலில் நைவேத்தியமாகப் படைக்கப்படுகிறது.

சுக்கு கசாயம்: கொல்லூர் மூகாம்பிகை கோயிலில் சுக்கு கஷாயம் பிரசாதமாக வழங்கப்படுகிறது.

இதையும் படியுங்கள்:
மன பயம் நீங்கி, தைரியம் பெருக சனிக்கிழமையும் அஷ்டமி திதி வழிபாடும்!
Azhakarkovil Perumal Temple Dosai Prasatham

சம்பா சாதம்: தில்லை என்கிற சிதம்பரத்தில் நடனம் புரியும் நடராஜ பெருமானுக்கு சம்பா சாதம், கொத்சு நைவேத்தியம் செய்யப்படுகிறது. சாம்பா சாதத்தை சில ஆஞ்சனேயர் கோயில்களிலும் பிரசாதமாக கொடுப்பதும் உண்டு.

எள்ளு சாதம்: இதை சனிக்கிழமைகளில் சனி பகவானுக்குப் படைத்து பிரசாதமாக தரப்படுகிறது.

கோதுமைப் பொங்கல்: ராஜஸ்தான் மாநிலத்தில் உள்ள நாத்வாரா என்னும் திருத்தலத்தில் அருள்பாலிக்கும் பகவான் கண்ணனுக்கு கோதுமை பொங்கல் நைவேத்தியம் செய்யப்படுகிறது.

ரசகுல்லா: கொல்கத்தா காளி தேவிக்கு ரசகுல்லா நைவேத்தியம் செய்யப்படுகிறது. அதுவே பக்தர்களுக்கு பிரசாதமாக வழங்கப்படுகிறது.

பாலடை பிரதமன்: இது குருவாயூர் கோயிலில் பிரசித்தி பெற்ற பிரசாதம்.

மோதகம்: பிள்ளையார்பட்டியில் இந்த மோதகம் நைவேத்தியமாகப் படைக்கப்பட்டு பின்பு பிரசாதமாக வழங்கப்படுகிறது.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com