20 ஆண்டுகளுக்குப் பின்பு நடைபெற்ற கோம்பை திருமலைராயப் பெருமாள் கோயில் தேரோட்டம்!

Kombai Thirumalairaya Perumal temple Therottam
Kombai Thirumalairaya Perumal temple Therottam
தேனி மு.சுப்பிரமணி

தேனி மு. சுப்பிரமணி தேனியில் சுயநிதிப் பொறியியல் கல்லூரி ஒன்றில் நிருவாக மேலாளர் மற்றும் செயலாளர் (கூடுதல் பொறுப்பு) நிலையில் பணியாற்றிய தேனி மு. சுப்பிரமணி, கல்லூரி நிருவாகத்துடன் ஏற்பட்ட கருத்து வேறுபாட்டால் அங்கிருந்து வெளியேறிய பின்பு, தமிழில் வெளியாகும் பல்வேறு இதழ்களில் எழுதி வருகிறார். ஆன்மிகம், கணினி, இணையம், கல்வி உள்ளிட்ட பல்வேறு துறைகளில் இரண்டாயிரத்துக்கும் அதிகமான கட்டுரைகளை எழுதியிருக்கிறார். இதுவரை இவர் எழுதிய பத்தொன்பது நூல்கள் வெளியாகியிருக்கின்றன. இவர் எழுதிய ‘தமிழ் விக்கிப்பீடியா’ எனும் நூலுக்குத் தமிழ்நாடு அரசின் தமிழ் வளர்ச்சித் துறையின் சிறந்த நூலுக்கான பரிசு கிடைத்திருக்கிறது என்பது இங்கு குறிப்பிடத்தக்கது. நடைமுறை வாழ்க்கையில் தூயதமிழைப் பயன்படுத்தி, தமிழ் மொழியின் வளர்ச்சிக்கும், பாதுகாப்பிற்கும் உறுதுணையாக இருக்கும் இவரைப் பாராட்டித் தமிழ்நாடு அரசின் செந்தமிழ்ச் சொற்பிறப்பியல் அகரமுதலித் திட்ட இயக்ககம் 2022 ஆம் ஆண்டுக்கான ‘தூயதமிழ்ப் பற்றாளர் விருது’ வழங்கிச் சிறப்பித்திருக்கிறது. தமிழ்நாடு அரசின் தமிழ் வளர்ச்சித் துறையினால் நடத்தப்பெற்று வரும் இளந்தமிழர் இலக்கியப் பட்டறை, ஆட்சி மொழிப் பயிலரங்கம், கருத்தரங்கம் உள்ளிட்ட நிகழ்வுகளிலும், தமிழ்நாட்டிலுள்ள பல்வேறு கல்லூரிகளில் நடத்தப்பெறும் பயிலரங்கம் மற்றும் கருத்தரங்கம் உள்ளிட்ட நிகழ்வுகளிலும் கலந்து கொண்டு ‘இணையத்தமிழ்’ தொடர்பாகப் பல்வேறு பயிற்சி வகுப்புகளை நடத்தி வருகிறார். தேனித் தமிழ்ச் சங்கத்தின் தலைவராக ஆறு ஆண்டுகளாகச் செயல்பட்டு வந்த இவர், தற்போது தேனித் தமிழ்ச் சங்கத்தின் செயலாளராகவும், சென்னை, சங்கம் தமிழ் அறக்கட்டளையின் செயலாளராகவும் செயல்பட்டு வருகிறார். முத்துக்கமலம் (www.muthukamalam.com) எனும் பெயரில் பன்னாட்டுத் தமிழ் மின்னிதழ் (ISSN: 2454 - 1990) ஒன்றினை 2006 ஆம் ஆண்டில் தொடங்கி, அதன் ஆசிரியராகத் தொடர்ந்து செயல்பட்டு வருகிறார். மாதமிருமுறை புதுப்பிக்கப்பட்டு வரும் முத்துக்கமலம் இணைய இதழ் குறித்து ஆய்வு செய்து இருவர் எம்.பில் பட்டங்களைப் பெற்றிருக்கின்றனர். ‘முத்துக்கமலம் இணைய இதழின் இலக்கியப் பணிகள்’ எனும் தலைப்பில் ஒருவர் மதுரை காமராசர் பல்கலைக்கழகத்தில் முனைவர் பட்டத்திற்கான (Ph.D) ஆய்வு மேற்கொண்டு வருகிறார் என்பதும் இங்கு குறிப்பிடத்தக்கது. பல்கலைக்கழக மானியக் குழுவின் தமிழ் மொழிக்கான ஆய்விதழ்களின் பட்டியலில் முத்துக்கமலம் இதழ் ஒரு ஆண்டு காலம் இடம் பெற்றிருந்தது என்பதும் இங்கு கவனிக்கத்தக்கது.

Updated on

தேனி மாவட்டம், கோம்பையில் ராமக்கல் மலையில் தெற்குத் திசையில் தலையை வைத்து, வடக்குதிசை நோக்கிக் கால் நீட்டியபடி, கோம்பை நகரைப் பார்த்தபடி திருமலைராயப் பெருமாள் கிடந்த (சயன) நிலையில் சுயம்புவாக எழுந்தருளியிருக்கும் திருமலைராயப் பெருமாள் கோயில் இருக்கிறது.

ஆண்டுதோறும் வைகாசி மாதம் விசாகம் நட்சத்திர நாளில் நடத்தப் பெற்று வந்த இக்கோயிலுக்கான தேரோட்டம் 20 ஆண்டுகளுக்கு முன்பாக நின்று போனது. கடந்த 20 ஆண்டுகளாக நடைபெறாமலிருந்த கோயில் தேரோட்டத்தை இப்பகுதி ஜமீன்தாரும், பரம்பரை அறங்காவலருமான சீனிவாசராயர் தலைமையில் இந்த ஆண்டு நடத்துவதென்று முடிவு செய்யப்பட்டது.

இக்கோயில் தேரோட்டத்திற்கான கொடியேற்றம் கடந்த மே 12 அன்று நடைபெற்றது. கொடியேற்ற நாளில், ஜமீன் வீட்டிலிருந்து செங்கோல் கோயிலுக்குக் கொண்டு செல்லப்பட்டது. அன்றிலிருந்து ஜூன் மாதம் 5 ஆம் நாள் வரை இக்கோயிலில் நாள்தோறும் பல்வேறு சிறப்பு நிகழ்வுகள் தொடர்ந்து நடைபெறவிருக்கின்றன.

ஜமீன் வீட்டிலிருந்து கொண்டு செல்லப்பட்ட செங்கோலுடன், திருமலைராயப் பெருமாள் ஸ்ரீதேவி மற்றும் பூமாதேவி ஆகியோருடன் வலம் வரும் தேரோட்ட நிகழ்வு கிழக்கு ரத வீதியிலிருந்து மே 23 அன்று மாலை 4.10 மணிக்குத் தொடங்கியது. தெற்கு ரத வீதி வழியாக மேற்கு ரத வீதிக்கு வந்த தேர் கோயிலருகில் மாலை 5.45 மணிக்கு நிலை நிறுத்தப்பட்டது. அதன் பின்னர் மே 24 அன்று மதியம் மீண்டும் மேற்கு ரத வீதியிலிருந்து தேரோட்டம் தொடங்கப்பெற்று வடக்கு ரத வீதி வழியாகக் கிழக்கு ரத வீதியில் நிலை நிறுத்தப்பட்டது.

இதையும் படியுங்கள்:
யாருக்கும் கடனாகக் கொடுக்கக் கூடாத பொருட்கள் எவை தெரியுமா?
Kombai Thirumalairaya Perumal temple Therottam

தமிழகத்திலுள்ள கோயில்களில் இருக்கும் 12 மிகப்பெரிய தேர்களில் ஒன்றாக இருக்கும் கோம்பை திருமலைராயப்பெருமாள் கோயில் தேரோட்டம் 20 ஆண்டுகளுக்குப் பின்பு நடைபெற்றதால், தேரோட்ட நிகழ்வில் பக்தர்கள் அதிக அளவில் கலந்து கொண்டனர்.

இத்தேரோட்ட நிகழ்வில் கோம்பை ஜமீன் சீனிவாசராயர், கம்பம் சட்டமன்ற உறுப்பினர் என். ராமகிருஷ்ணன், இந்து சமய அறநிலையத்துறை இணை ஆணையர் பாரதி, கோயில் செயல் அலுவலர் அருணாதேவி உட்பட ஊரில் முக்கியமானவர்கள் பலரும் கலந்து கொண்டனர்.

logo
Kalki Online
kalkionline.com