ஈசனின் 10 திருநாமங்களும் அவற்றின் பெருமையும்!

The glory of Lord Shiva's names
The glory of Lord Shiva's names
Updated on

‘கயிலாய நாயகன்’ என சிவபெருமானை போற்றுவோம். பல்வேறு திருநாமங்கள் சிவனுக்கு இருந்தாலும் 10 புகழ் பெற்ற திருநாமங்களை பற்றி இந்தப் பதிவில் அறிந்து கொள்வோம்.

1. நீலகண்டன்: ஆலகால விஷயத்தை உண்டு, அதை கண்டத்தில் நிறுத்திய சிவபெருமானின் திருக்கோலமாகும் இது. நீல நிற கழுத்தை உடையவர் என்பதால் சிவனுக்கு நீலகண்டன் என்னும் திருநாமம் உண்டாயிற்று. பிரதோஷ விரதம் உருவானதற்குக் காரணமாக அமைந்த சம்பவம் என்பதால் இந்தத் திருநாமம் மிகவும் சக்தி வாய்ந்ததாகும்.

2. கங்காதரன்: பாவங்களைப் போக்கும் புனித நதியான கங்கையை தனது தலையில் தாங்கியவர் என்பதால் சிவனுக்கு கங்காதரன் என்னும் பெயர் உண்டு. இந்தத் திருநாமத்தை சொல்வதால் கங்கை நதியையும் வணங்கிய புண்ணியம் கிடைக்கும்.

3. பூதநாதன்: அனைத்து பூத கணங்களுக்கும் தலைவன், தீய சக்திகளை அடக்கி ஆளக்கூடியவன் என்பதால் சிவனுக்கு பூதநாதன் என்ற பெயர் ஏற்பட்டது. நன்மை, தீமை என அனைத்தும் சிவனுக்குள் அடக்கம் என்பதை குறிக்கும் திருநாமம் இதுவாகும்.

4. ருத்ரன்: சிவபெருமானின் மிகவும் புகழ் பெற்ற திருநாமங்களில் ஒன்று ருத்ரன். சிவபெருமான் நெருப்பின் அம்சமானவர் என்பதாலும், உக்கிர வடிவமானவர் என்பதாலும் அவருக்கு ருத்ரன் என்ற பெயர் உண்டு. மகாதேவரின் தீவினைகளை அழிக்கும் வடிவத்திற்கு ருத்ரன் என்று பெயர்.

5. த்ரிநேத்ரா: மூன்று கண்களை உடையவர் என்பதால் சிவனுக்கு த்ரிநேத்ரன் என்ற திருநாமம் உண்டு. நெற்றியில் ஞானம் என்னும் மூன்றாவது கண்ணை உடைய சிவரூபமாகும்.

6. பசுபதிநாதர்: விலங்குகளின் தலைவன் அல்லது பசு இனங்களின் தலைவன் என்பதால் சிவனுக்கு பசுபதிநாதர் என்ற பெயர் உண்டு. பசு என்பது விலங்குகளை குறிக்கும் சொல்லாகும். பதி என்றால் பாதுகாவலர் என்று பொருள். விலங்குகளின் பாதுகாவலர் என்பதால் பசுபதிநாதர் என்ற பெயர் உண்டாயிற்று.

7. மகாதேவன்: அனைத்து தெய்வங்களையும் விட உயர்வானவர் என்பதால் சிவனுக்கு மகாதேவன் என்ற பெயர் உண்டு. தெய்வங்கள், தேவர்கள், அசுரர்கள் என அனைவராலும் வணங்கப்படுவதால் இவர் தெய்வங்களுக்கு எல்லாம் தெய்வம் ஆவார்.

இதையும் படியுங்கள்:
கிரீஸ் உணவு வகைகளை உண்பதால் ஏற்படும் தீங்குகள் தெரியுமா?
The glory of Lord Shiva's names

8. மிருத்யுஞ்ஜயா: சிவபெருமானுக்கு மிருத்யுஞ்ஜயா என்ற ஒரு திருநாமம் உண்டு. மிருத்யு என்றால் மரணம். மரணத்தை வென்றவன் அல்லது காலனை வெற்றி கொண்டவன் என்பதால் சிவனுக்கு மிருத்யுஞ்ஜயன் என்ற பெயர் ஏற்பட்டது.

9. நடராஜர்: சிவபெருமானின் நடன திருக்கோலத்திற்கு நடராஜர் என்று பெயர். மாயை, சுயநலம், சோம்பல், எதிர்மறை எண்ணங்கள் உள்ளிட்ட குணங்களுக்கு எல்லாம் தலைவனாக விளங்கும் அபஸ்மரன் என்ற சுரனை தனது காலில் மிதித்து, தனது கட்டுப்பாட்டில் வைத்த நிலையில் சிவன் காட்சி தரும் கோலம் இதுவாகும்.

10. மகாகாலன்: தனது பக்தன் மார்கண்டேயனை காப்பதற்காக எமதர்மனையே வதம் செய்து, காலனுக்கே காலனானவன் என்பதால் சிவனுக்கு மகாகாலன் என்ற திருநாமம் ஏற்பட்டது. சிவனை வழிபடுபவர்களுக்கு கால பயம், எம பயம் கிடையாது. அவர்கள் நீண்ட ஆயுள், நல்ல ஆரோக்கியம் பெறுவார்கள் என்பதால் சிவனுக்கு இந்தத் திருநாமம் ஏற்பட்டது.

logo
Kalki Online
kalkionline.com