உங்கள் வாழ்க்கையை மாற்றி அமைக்கும் பேசும் பெருமாள் கோயில் ரகசியங்கள்!

Pesum Perumal
Pesum Perumal
Updated on

திருவண்ணாமலை மாவட்டம், கூழமந்தலில் அமைந்துள்ளது அருள்மிகு பேசும் பெருமாள் திருக்கோயில். இந்தக் கோயில் மிகவும் பழைமையானது. சோழர் மற்றும் பாண்டியர் ஆட்சிக் காலத்தில் கூட இந்தக் கோயில் இருந்ததற்கான சான்றுகள் காணப்படுகின்றன. இக்கோயில் பெருமாள் ‘பக்தர்களிடம் பேசுபவர்’ என்று நம்பப்படுகிறது. அதனால் பெருமாளுக்கு இப்பெயர் ஏற்பட்டது.

கந்தர், சப்த ரிஷிகள் போன்றோர் இங்கு தவம் செய்தனர். அவர்கள் மனதில் எழுந்த சந்தேகங்களுக்கும், பிரார்த்தனைகளுக்கும் பெருமாள் நேரடியாக பதில் அளித்ததாகச் சொல்லப்படுகிறது. சில தல புராணங்களில், இங்குள்ள பெருமாள், பக்தர்களுக்கு கிருஷ்ணர் போலவே நெருக்கமாக இருந்து, அவர்களுடன் உரையாடுவதாகக் குறிப்பிடப்படுகிறது.

இதையும் படியுங்கள்:
நவராத்திரி சிறப்பு: இந்த கோயில்களுக்கு சென்றால் நினைத்தது நடக்கும்!
Pesum Perumal

இக்கோயில் வரும் பக்தர்கள் தங்களின் மனக் குழப்பங்களை பெருமாளிடம் சொல்லும்போது, உடனடியாக உள்ளத்தில் ஒரு தெளிவு கிடைக்கும். சிலர் நேரடியாகவே பெருமாள் குரலைக் கேட்டதாகவும் பகிர்ந்துள்ளனர். திருமணத் தடையால் அவதிப்படுபவர்கள் பேசும் இக்கோயில் பெருமாள் குறித்து விரதம் இருந்து வழிபட்டால் விரைவில் நல்ல துணைவன் / துணைவி கிடைப்பர் என்ற நம்பிக்கை உள்ளது.

பலர் வேலை வாய்ப்பு, தொழில் முன்னேற்றத்திற்காகவும் இத்தல பெருமாளை வந்து வழிபடுகிறார்கள். வழிபட்ட பிறகு விரைவில் நல்ல பலன் கிடைத்ததாக பலரின் அனுபவங்கள் கூறப்படுகின்றன. அதேபோல், குழந்தை பாக்கியம் கிடைக்காமல் தவிக்கும் தம்பதிகள் இங்கு வந்து விரதமிருந்து பெருமாளிடம் பிரார்த்தனை செய்தால், குழந்தைப் பாக்கியம் விரைவில் அருளப்படுவதாக மக்கள் நம்புகிறார்கள்.

பக்தர்கள் மனதில் கேள்வி கேட்டு, பெருமாள் ‘ஆம்’ என்றால் விளக்கின் சுடர் மேலே எழும்பும், ‘இல்லை’ என்றால் சுடர் அசையாமல் இருக்கும் என்பது மக்களின் நம்பிக்கை. இக்கோயில் பெருமாளுக்கு துளசி மாலை, வெண்ணெய், பால், வெற்றிலை, பழங்கள் ஆகியவை முக்கிய நெய்வேத்தியமாக செலுத்தப்படுகின்றன.

இதையும் படியுங்கள்:
புரட்டாசி மாதத்தில் வீட்டில் இவற்றைச் செய்தால் வாழ்வில் வளம் பெருகும்!
Pesum Perumal

இக்கோயிலில் வைகாசி மாத திருவிழா மிகவும் கோலாகலமாக நடத்தப்படுகிறது. ஆடி மாதத்திலும், பங்குனி மாதத்திலும் சிறப்பு வழிபாடுகள் நடைபெறுகின்றன. ஸ்ரீ கிருஷ்ண ஜயந்தி, வைகுண்ட ஏகாதசி போன்ற நாட்களில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் இக்கோயிலுக்கு வருகை தருகின்றனர்.

பேசும் பெருமாள் திருக்கோயில் ஒரு சாதாரண ஆலயம் அல்ல. இங்கு பக்தர்களின் மனக் கேள்விகளுக்கு பெருமாள் தெய்வீகமாக பதில் அளிப்பதாகவும், அவரது கருணை மனிதர்களின் வாழ்க்கையை மாற்றுவதாகவும் பக்தர்கள் நம்புகிறார்கள். திருமணத் தடைகள், வேலை வாய்ப்பு, குழந்தை பாக்கியம், மன அமைதி போன்றவற்றிற்காக இங்கு பக்தர்கள் வந்து பெருமாள் அருள் பெற்றுள்ளனர்.

logo
Kalki Online
kalkionline.com