புண்ணியத்தால் முளைத்த இறக்கைகள்!

Punniyathaal  Mulaitha Irakkaigal
Punniyathaal Mulaitha Irakkaigalhttps://www.quora.com

சீதா தேவியை ராவணன் இலங்கைக்கு கடத்திச் சென்ற பிறகு உதவும் எண்ணத்துடன் அனுமன் தென் திசை நோக்கி வந்தான். அவனுடன் அங்கதன், ஜாம்பவான் போன்றோரும் வந்தனர். அவர்கள் ஒரு குகையில் அமர்ந்து ஓய்வெடுத்தனர். அப்போது தங்களது இயலாமையையும், ராவணன் சீதையை கடத்தியபோது ஜடாயு அவனுடன் போரிட்டு உயிரிழந்ததையும் வருத்தத்துடன் பேசிக்கொண்டிருந்தனர். அதைக் கேட்டு இறக்கைகள் இல்லாத பெரிய கழுகு ஒன்று அழுதது. அனுமனும் மற்றவர்களும் அந்தக் கழுகின் அழுகைக்கான காரணத்தை அதனிடம் கேட்டனர்.

எனது பெயர் சம்பாதி. நான் ஜடாயுவின் அண்ணன். சிறு வயதில் எங்களுக்குள் ஒரு போட்டி. யார் அதிக உயரம் பறப்பது என்று. ஜடாயு மிக உயரத்தில் பறந்து சூரியனின் வெப்பம் தாங்காமல் தவித்தான். நான் ஜடாயுவின்  மேலாகப் பறந்து எனது இறக்கைகளை விரித்து ஜடாயுவுக்கு நிழல் தந்து உதவினேன். அப்போது சூரிய வெப்பத்தால் எனது இறக்கைகள் எரிந்து விட்டன. அதனால் தரையில் விழுந்து நகர முடியாமல் இங்கேயே தங்கி விட்டேன்.

அசுரன் ராவணனால் தாக்கப்பட்டு எனது தம்பி ஜடாயு இறந்தான் என்ற செய்தியை உங்கள் மூலமாகக் கேட்டு அழுதேன்” என்றது. மேலும் சம்பாதி, “ராவணன் சீதையை கடத்திச் சென்றதை நான் பார்த்தேன்” என்று கூறிவிட்டு, மலை உச்சிக்குச் சென்று தனது கூரிய கண்களால் ஊன்றிப் பார்த்தது.

இதையும் படியுங்கள்:
மன அழுத்தக் கவலைக்கான 7 ஆச்சரியமான காரணங்கள்!
Punniyathaal  Mulaitha Irakkaigal

திரும்பி வந்த சம்பாதி, “இலங்கை தீவின் ஒரு வானத்தில் சீதை இருக்கிறாள். அவளுக்குக் காவலாக நான்கு அரக்கிகள் இருக்கின்றனர்” என்று கூறியது.

அப்படிக் கூறிய உடனே சம்பாதியின் உடலில் புதிய இறக்கைகள் முளைத்தன. ஸ்ரீராமனுக்கான பணியில் சிறிதளவு உதவிய புண்ணியத்தால் சம்பாதி பறவை புதிய இறக்கைகளைப் பெற்றது.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com