‘இறைவனின் ஒளி’ பஹாவுல்லா வழியில் ஏழு மில்லியன் மக்கள்!

Bahaullah
Bahaullah
தேனி மு.சுப்பிரமணி

தேனி மு. சுப்பிரமணி தேனியில் சுயநிதிப் பொறியியல் கல்லூரி ஒன்றில் நிருவாக மேலாளர் மற்றும் செயலாளர் (கூடுதல் பொறுப்பு) நிலையில் பணியாற்றிய தேனி மு. சுப்பிரமணி, கல்லூரி நிருவாகத்துடன் ஏற்பட்ட கருத்து வேறுபாட்டால் அங்கிருந்து வெளியேறிய பின்பு, தமிழில் வெளியாகும் பல்வேறு இதழ்களில் எழுதி வருகிறார். ஆன்மிகம், கணினி, இணையம், கல்வி உள்ளிட்ட பல்வேறு துறைகளில் இரண்டாயிரத்துக்கும் அதிகமான கட்டுரைகளை எழுதியிருக்கிறார். இதுவரை இவர் எழுதிய பத்தொன்பது நூல்கள் வெளியாகியிருக்கின்றன. இவர் எழுதிய ‘தமிழ் விக்கிப்பீடியா’ எனும் நூலுக்குத் தமிழ்நாடு அரசின் தமிழ் வளர்ச்சித் துறையின் சிறந்த நூலுக்கான பரிசு கிடைத்திருக்கிறது என்பது இங்கு குறிப்பிடத்தக்கது. நடைமுறை வாழ்க்கையில் தூயதமிழைப் பயன்படுத்தி, தமிழ் மொழியின் வளர்ச்சிக்கும், பாதுகாப்பிற்கும் உறுதுணையாக இருக்கும் இவரைப் பாராட்டித் தமிழ்நாடு அரசின் செந்தமிழ்ச் சொற்பிறப்பியல் அகரமுதலித் திட்ட இயக்ககம் 2022 ஆம் ஆண்டுக்கான ‘தூயதமிழ்ப் பற்றாளர் விருது’ வழங்கிச் சிறப்பித்திருக்கிறது. தமிழ்நாடு அரசின் தமிழ் வளர்ச்சித் துறையினால் நடத்தப்பெற்று வரும் இளந்தமிழர் இலக்கியப் பட்டறை, ஆட்சி மொழிப் பயிலரங்கம், கருத்தரங்கம் உள்ளிட்ட நிகழ்வுகளிலும், தமிழ்நாட்டிலுள்ள பல்வேறு கல்லூரிகளில் நடத்தப்பெறும் பயிலரங்கம் மற்றும் கருத்தரங்கம் உள்ளிட்ட நிகழ்வுகளிலும் கலந்து கொண்டு ‘இணையத்தமிழ்’ தொடர்பாகப் பல்வேறு பயிற்சி வகுப்புகளை நடத்தி வருகிறார். தேனித் தமிழ்ச் சங்கத்தின் தலைவராக ஆறு ஆண்டுகளாகச் செயல்பட்டு வந்த இவர், தற்போது தேனித் தமிழ்ச் சங்கத்தின் செயலாளராகவும், சென்னை, சங்கம் தமிழ் அறக்கட்டளையின் செயலாளராகவும் செயல்பட்டு வருகிறார். முத்துக்கமலம் (www.muthukamalam.com) எனும் பெயரில் பன்னாட்டுத் தமிழ் மின்னிதழ் (ISSN: 2454 - 1990) ஒன்றினை 2006 ஆம் ஆண்டில் தொடங்கி, அதன் ஆசிரியராகத் தொடர்ந்து செயல்பட்டு வருகிறார். மாதமிருமுறை புதுப்பிக்கப்பட்டு வரும் முத்துக்கமலம் இணைய இதழ் குறித்து ஆய்வு செய்து இருவர் எம்.பில் பட்டங்களைப் பெற்றிருக்கின்றனர். ‘முத்துக்கமலம் இணைய இதழின் இலக்கியப் பணிகள்’ எனும் தலைப்பில் ஒருவர் மதுரை காமராசர் பல்கலைக்கழகத்தில் முனைவர் பட்டத்திற்கான (Ph.D) ஆய்வு மேற்கொண்டு வருகிறார் என்பதும் இங்கு குறிப்பிடத்தக்கது. பல்கலைக்கழக மானியக் குழுவின் தமிழ் மொழிக்கான ஆய்விதழ்களின் பட்டியலில் முத்துக்கமலம் இதழ் ஒரு ஆண்டு காலம் இடம் பெற்றிருந்தது என்பதும் இங்கு கவனிக்கத்தக்கது.

Updated on

நானே இறைவன் என்றும், இறைத்தூதர் என்றும் அறிவித்துக் கொண்டவர்கள் பலர் இருக்கின்றனர். அப்படி அறிவித்துக் கொண்டவர்களது வழியைப் பின்பற்றித் தங்களது வாழ்க்கையை மாற்றிக் கொண்டவர்களும் அதிகமாகத்தான் இருக்கின்றனர்.

1844 ஆம் ஆண்டில் பாரசீக (தற்போதைய ஈரான்) நாட்டில் ஷிராஸ் எனும் நகரில் இருந்த சையது அலி முகம்மது என்பவர், பாப் என்று தன் பெயரை மாற்றிக் கொண்டு, அனைத்துச் சமயங்களிலும் வாக்களிக்கப்பட்ட இறைத்தூதர் தாமே என்று தன்னை முன்னிலைப்படுத்திக் கொண்டார். அதன் பிறகு, “எனக்குப் பின்னால் வரவிருக்கும் ஒரு மாபெரும் இறைத்தோற்றத்தின் முன்னோடியும் நானே” என்றார்.

அதனைத் தொடர்ந்து, 1863 ஆம் ஆண்டில், பாரசீக (தற்போதைய ஈரான்) நாட்டின் தெஹரான் நகரத்தின் மேல்குடிகளில் ஒருவரான மிர்சா ஹூசைன் அலி என்பவர், தனது பெயரை அரபி மொழியில், ‘இறைவனின் ஒளி’ எனப் பொருள் தரும் பஹாவுல்லா என்று மாற்றிக் கொண்டு, தனது அரச வாழ்க்கை மற்றும் பாதுகாப்பைத் துறந்து, ஈராக் நாட்டின் பாக்தாத் நகருக்குச் சென்று, அங்கு பாப் அவர்களால் சொல்லப்பட்ட, ‘இறைவனின் தோற்றம் தானே’ என்று அறிவித்தார்.

அவரது அறிவிப்பைத் தொடர்ந்து, பாப் கொள்கையில் நம்பிக்கை கொண்டவர்கள் அனைவரும் பஹாவுல்லாவை ஏற்றுக் கொண்டனர். பஹாவுல்லாவை இறைவனாகக் கொண்டு, பஹாய் சமயம் தோன்றியது. இன்று உலகம் முழுவதும் சுமார் 7 மில்லியன் பேர் பஹாய் சமயக் கொள்கையில் நம்பிக்கை கொண்டவர்களாக இருக்கின்றனர்.

இதையும் படியுங்கள்:
அஷ்ட திக் கஜங்கள் வணங்கிய அத்திகிரி அருளாளனின் தேரோட்டம்!
Bahaullah

பஹாவுல்லா, பெருந்துன்பம் மற்றும் இல்லாமைக்கிடையே, ஒற்றுமை மற்றும் ஐக்கியம் குறித்த மனம் நெகிழச் செய்கின்ற செய்தி ஒன்றை மனிதக் குலத்திற்கு அளித்தார். பஹாவுல்லா, தாம் புதிய மற்றும் சுதந்திரமான இறைத்தூதர் என்பதையும் மிகத் தெளிவாக அறிவித்தார். அவரது வாழ்வுமுறை, செய்த செயல்கள் மற்றும் அவருடைய செல்வாக்கு போன்றவை ஆபிரகாம், மோசே, ஸோராஸ்டர், புத்தர், இயேசு, முகம்மது நபி ஆகியோரைப் பிரதிபலித்தது. பஹாவுல்லாவைத் தெய்வீகத் தோற்றங்களின் தொடர்வரிசையில் மிகவும் அண்மையில் தோன்றியவர் என்று அவரது வழியைப் பின்பற்றி வரும் பஹாய் சமயத்தினர் கருதுகின்றனர்.

பஹாவுல்லாவின் அடிப்படையான செய்தி ஐக்கியம் குறித்ததாகும். இறைவன் ஒருவரே எனவும், ஒரு மனித இனமே உள்ளது எனவும், உலகின் சமயங்களெல்லாம் மனிதக் குலத்திற்கான இறைவனின் விருப்பம், நோக்கம் ஆகியவற்றின் படிப்படியான கட்டங்களைப் பிரதிபலிக்கின்றன எனவும் அவர் போதித்தார். மனிதக்குலம் இக்காலத்தில் கூட்டாக முதிர்ச்சி நிலை அடைந்துவிட்டதென பஹாவுல்லா கூறினார். உலகப் புனித சாஸ்திரங்களில் முன்னறிவிக்கப்பட்டுள்ளது போல், எல்லா மக்களும் ஒரே அமைதியான ஒன்று சேர்க்கப்பட்ட உலகளாவிய சமூகமாக ஐக்கியப்படுத்தப்பட வேண்டிய காலம் கனிந்துவிட்டது, “உலகம் ஒரே நாடு, மனிதர்கள் யாவரும் அதன் குடிகள்” என அவர் தெரிவித்துள்ளார்.

logo
Kalki Online
kalkionline.com