பாவ புண்ணியக் கணக்கும் 'சிபில் ஸ்கோரும்': விதியை வெல்லும் நல்வினைகள்!

secret-of-karma
secret-of-karma
Published on

நான் ஏன் வாழ்க்கையில் கஷ்டப்படுகிறேன். நல்லவர்கள் ஏன் போராடவேண்டும்? தீயவர்கள் ஏன் சந்தோஷமாய் வாழவேண்டும்!

ஊழல் செய்பவர்கள், பேராசை கொண்டவர்கள், இரக்கமில்லாத வர்கள் பொிய பொிய பதவிகளில் அங்கம் வகிக்கிறாா்கள்.

ஆனால் நோ்மையானவர்கள் வஞ்சிக்கப்படுவது ஏன்?

நோ்மையானவர்களுக்கு எங்கும் எதிலும் பாதகமே ஏன் ஏற்படுகிறது. இதுதான் கர்மாவின் ரகசியம்

நல்ல செயல் நன்மையைத்தருகிறது. தீயசெயல் தீமையைத் தருகிறது. கர்மா அல்லது வினைப்பயன் என்பது என்ன,

ஒருவர் தற்போது அல்லது முன் ஜென்மத்தில்செய்த செயல்களின் கூட்டல் கழித்தல் கணக்காகும். கர்மா என்பது விதிக்கப்பட்ட விதி மட்டுமல்ல, ஊழ்வினைப் பயன். அவரவர் செய்த பாவ புண்ணியங்களுக்கு ஏற்பவே நிகழ்கிறது. இதற்கான விபரங்கள் சிலப்பதிகாரம், மற்றும் மகாபாரதத்தில் நிறையவே உள்ளன, அதிலிருந்து எடுத்துக்காட்டுகளை நாம் தொிந்துகொள்ளலாம்.

இராமயணத்தில் தசரதன் காட்டில் வேட்டையாடும்போது, கண்தொியாத பெற்றோா்களுக்கு அவர்களது மகன் பணிவிடைகள் செய்து வரும் நிலையில் தனக்கு தொியாமல் ஏதோ விலங்கு என நினைத்து அந்த பையன் மீது வில்லில் உள்ள அம்பை எய்த அவன் இறந்து போகும் நிலையில் புத்திர சோகத்தில் பெற்றறோா்கள் இட்ட சாபத்தில் தனது பிாியமான மகன் இராமனை பிாிந்து கானகம் அனுப்பும் நிலை ஏற்பட்டு மகனை பிாிந்து வாடும் நிலை ஏற்பட்டதே! அதுதான் கர்மா.

கர்மா மூன்று வகைப்படும் சஞ்சித கர்மா, பிராப்த கர்மா, கிாியமான கர்மா, என மூன்று வகைப்படும். கர்மாக்களால் ஏற்படும் சிரமங்களைக் குறைக்க தர்ப்பனங்கள், ஹோமங்கள், சத்யநாராயணாபூஜை போன்ற பல்வேறு பரிகார பூஜைகளை செய்யலாம்.

இதையும் படியுங்கள்:
தஞ்சை பெரிய கோவிலும் கருவூர் சித்தரின் அருளும்!
secret-of-karma

ஒரு பாவமான, நீதிக்குப் புறம்பான, அநீதியான, அதர்மமான, செயல்களில் ஈடுபடும் எந்த நபரையும் கா்மாவானது விட்டு வைப்பதில்லை. அது ஒரு கிரகமோ, அல்லது நட்சத்திரமோ அல்ல.

நல்வினை மற்றும் தீவினைகளின் தொகுதிதான் அது.

கர்மாவானது உடனே தண்டனை தராது. மனிதன் வாழும் வரையில் நல்ல செயலையே செய்து வரவேண்டும், அடுத்தவரை துயரப்படுத்திவிட்டு அதில் நாம் சந்தோஷப்படக்கூடாது.

நிலை மாறும் உலகமிது, தெய்வ சிந்தனையுடன் சத்தியம் தவறாமல் அனைத்து உயிா்களிடத்திலும் அன்பு பாராட்டி நோ்மை தவறாமல் வாழவேண்டும்.

நாம் செய்கிற பாவம் நமது சந்ததிகளை பாதிக்கவே கூடாது அதுவகையில் நல்ல ஒழக்கம், நோ்மறை சிந்தனைகளோடு வாழந்து வரவேண்டும். தான தர்மங்கள் அன்னதானம் போன்றவைகளை மேற்கொள்ளலாம். பொதுவாக பாவம் செய்வதை குறைத்தாலே நமது புண்ணியக் கணக்கின் சிபிள் ஸ்கோா் சரியான அளவைக்காட்டுமே, ஆக நல்ல எண்ணம் நல்ல செயல்களோடு வாழ்வதே சிறப்பிலும் சிறப்பாகும்!

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com