தெய்வீக அம்சம் கொண்ட இந்த 5 சிலைகள் அவசியம் வீட்டில் இருக்க வேண்டும்!

Vastu idols with divine aspects
Vastu idols with divine aspects
நான்சி மலர்

வணக்கம். என் பெயர் நான்சி மலர். என்னைப் பற்றி தெரிந்து கொள்ள ஆர்வம் காட்டியதற்கு நன்றி. நான் B.E. Computer science Engineering முடித்துள்ளேன். எனக்கு சிறுவயது முதலே எழுதுவதில் அதிக ஆர்வம் உண்டு. ‘எழுத்துக்கள் மூலம் நம் எண்ணங்களை எளிதில் வெளிப்படுத்த முடியும்’ என்று நம்புகிறேன். கட்டுரைகள், கவிதைகள் எழுதுவதில் அனுபவம் உண்டு. Content writing துறையில் சாதிக்க வேண்டும் என்ற ஆர்வம் உள்ளது. மோட்டிவேஷன், பயணம், ஆரோக்கியம், ஃபேஷன், ஆன்மீகம் போன்ற கட்டுரை எழுதுவதில் ஆர்வம் அதிகம். என்னுடைய எழுத்து வாசகர்களாகிய உங்களை கவர்ந்தால், அது எனக்கு மகிழ்ச்சியே! ‘ இன்னும் எதிர்காலத்தில் உங்கள் மனதில் என் எழுத்துக்கள் மூலம் இடம் பிடிப்பேன்’ என்று முழுமையாக நம்புகிறேன்.

Updated on

ம் வீட்டில் உள்ள வாஸ்து பிரச்னைகளை சரிசெய்யவும், தொழிலில் முன்னேற்றம் மற்றும் லாபம் கிடைக்கவும் சில சிலைகளை வீட்டில் வைக்க வேண்டியது அவசியமாகும். அந்த சிலைகள் என்னவென்பதைப் பற்றி இந்தப் பதிவில் காண்போம்.

1. காமதேனு சிலை: காமதேனு சிலையை வீட்டில் வைப்பது நல்லது. அதுவும் கன்றோடு இருக்கும் காமதேனுவை பூஜையறையில் வைப்பது லக்ஷ்மி கடாட்சத்தை அதிகரிக்கும், தெய்வ சக்தியை கூட்டும். காமதேனுவில் மும்மூர்த்திகளும், மூன்று தேவியரும், ரிஷிகளும், முனிவர்களும்,  தேவர்களும் வாசம் செய்வதாக ஐதீகம். இந்த சிலை நம் வீட்டில் இருந்தால், நாம் கேட்கக்கூடிய அனைத்து வரங்களும் கிடைக்கும், செல்வ செழிப்பு அதிகரிக்கும் என்று சொல்லப்படுகிறது.

2. குதிரை சிலை: குதிரை சூரிய பகவானின் வாகனமாகவும் சுக்கிர பகவானின் வாகனமாகவும் கருதப்படுகிறது. வீட்டில் குதிரை சிலையோ அல்லது ஏழு குதிரை வாஸ்து படத்தை வைப்பதின் மூலமாக முன்னேற்றமும், வளர்ச்சியும், உயர்வும் ஏற்படும். தொழில் செய்யும் இடத்தில் குதிரை படம் வைப்பதால், தொழிலில் வேகமும், லாபமும் ஏற்படும்.

3. ஆமை சிலை: மகாவிஷ்ணுவின் முக்கியமான அவதாரமாக ஆமை கருதப்படுகிறது. பாற்கடலை கடையும்போது மத்தாக மகாவிஷ்ணுவின் அவதாரமாக ஆமை விளங்கியது. அப்போது பாற்கடலில் இருந்து மகாலக்ஷ்மி, காமதேனு, வலம்புரி சங்கு, தன்வந்திரி போன்ற புனிதமான விஷயங்கள் தோன்றியன. அதற்கு முக்கியக் காரணமாக இருந்த ஆமையின் சிலையை நம் வீட்டின் பூஜையறையில் வைப்பது வாஸ்து பிரச்னையை சரிசெய்யும், தெய்வீக சக்தியை கொடுக்கும், செல்வ வளம் பெருகும் என்று சொல்லப்படுகிறது. இதை தொழில் செய்யும் இடத்தில் வடக்கு திசை மற்றும் வடகிழக்கு திசையை நோக்கி வைப்பதின் மூலமாக செல்வ செழிப்பை அடையலாம்.

இதையும் படியுங்கள்:
வீட்டில் எந்த நிறத்தில் மீன் வளர்த்தால் என்ன பலன்கள் தெரியுமா?
Vastu idols with divine aspects

4. ஆந்தை சிலை: ஆந்தை மகாலக்ஷ்மியின் வாகனமாக கருதப்படுகிறது. எனவே, வீட்டில் ஆந்தை சிலை வைப்பதால், செல்வம், செல்வாக்கு, மிகபெரிய முன்னேற்றம் ஏற்படும் என்று சொல்லப்படுகிறது.

5. யானை சிலை: இரட்டை யானை மகாலக்ஷ்மியின் அம்சமாகக் கருதப்படுகிறது. இரட்டை யானை சிலையை பூஜையறையில் வைப்பதன் மூலமாகவும் அல்லது வீட்டின் ஹாலில் வைப்பதின் மூலமாகவும் நல்ல பண வரவு, முன்னேற்றம், லாபம் அதிகரிக்கும். வீட்டில் லக்ஷ்மி கடாட்சத்தை அதிகரிக்கும். இந்த 5 சிலைகளில் எந்த சிலை உங்கள் வீட்டில் உள்ளது என்று சொல்லுங்கள் பார்க்கலாம்.

logo
Kalki Online
kalkionline.com