
பப்பற வீட்டிருந்து உணரும் நின்னடியார் பந்தனையறுத்து வந்தறுத்தார் அவர் பலரும்
மைப்புறு கண்ணியர் மானுடத்து இயல்பில் வணங்குகின்றார், அணங்கின் மணவாளா
செப்புறு கமலங்கள் மலரும் தண்வயல் சூழ் திருப்பெருந்துறையுறை சிவபெருமானே
இப்பிறப்பறுத்து எமையாண்டு அருள்புரியும் எம்பெருமான் பள்ளி எழுந்தருளாயே