ஆண்டி முதல் அரசன் வரை அனைவருக்கும் அருள் மழை பொழிவான் ஆருர் நாயகன்!

சோமஸ்கந்தர் வடிவத்தில் ஈசரோடு உள்ள உமையாளுக்கு என்று தனி திருநாமம் கொண்ட ஒரே திருக்கோவில் திருவாரூர் மட்டுமே.
thiruvarur Thyagaraja Temple
Thiruvarur Thyagaraja TempleImg Credit: Tamilnadu Tourism
நெய்வாசல் நெடுஞ்செழியன்

தொழில்: விவசாயம், விற்பனை பிரிதிநிதி மற்றும் பத்திரிகை பணி பத்திரிகை அனுபவம்: 40 ஆண்டுகள் வளர்தொழில் மாத இதழில் மாவட்ட செய்தியாளராக பத்தாண்டுகள் பணி நூற்றுக்கும் மேற்பட்ட தொழில் வணிக கட்டுரைகள் தினத்தந்தி ஆன்மீக பிரிவுக்காக 200க்கும் மேற்பட்ட ஆன்மீக கட்டுரைகள் மற்றும் சப்தகிரி, கல்கி தீபம் போன்றவற்றிலும் ஆன்மீக தினமணிகதிர், தினமலர் வாரமலர், மை விகடன், சிறுகதை டாட் காம் இதழ்களில் 40க்கும் மேற்பட்ட சிறுகதைகள். தினமலர் அமரர் ராமசுப்பையர் நினைவு சிறுகதை போட்டியில் மூன்று தடவை பரிசு, தினமணி கதிரில் எழுதப்பட்ட கதைக்கு இலக்கியச் சிந்தனை பரிசு தற்போது விகடன் குழுமத்தின் பசுமை விகடன், அவள் விகடன், நாணயம் விகடன், குமுதம் குழுமத்தின் மண்வாசனை மற்றும் கல்கி குழும இதழ்களில் தொடர்ந்து எழுதி வருகிறார். கடலூர் மாவட்ட பாடல் பெற்ற தலங்கள் என்னும் ஆன்மீக நூல், வெற்றிப் படிகள் என்னும் தன்னம்பிக்கை கட்டுரைகள் அடங்கிய நூல், தேடக் கிடைக்கும் திறந்திட வரும் என்னும் தன்னம்பிக்கை கவிதை நூல். என்றும் இனிதாய் வாழ்வோம் என்னும் நாவல் ஆகியவற்றை பிரசுரிக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளார்.

Updated on

நாம் அடிக்கடி ஆரூர் சென்று வந்திருந்தாலும் இவ்வாலயம் பற்றிய தகவல்களை முழுமையாக அறிந்திருக்க மாட்டோம். இதை கட்டியவன் மூன்றாம் குலோத்துங்கன் என்னும் பிற்கால சோழனாகும்.

திருக்கோவிலின் பிரதான கிழக்கு வாயிலில் 113 அடி உயரம் கொண்ட ராஜகோபுரம் உள்ளது. இதற்கு மகாமதுரம் என்று பெயர். தெற்கு கோபுரத்தின் பெயர் தென்னன் திருவாசல். இரண்டாம் பிரகாரத்தின் கிழக்கில் உள்ள கோபுரம் ஆரியன் கோபுரம். மந்திரமயமான மணிபுற்றில் எழுந்தருளும் இறைவருக்கு முன்புள்ள கோபுரம் அழகியான் கோபுரம்.

புற்றிடம்கொண்டார் கருவறைக்கு முன்பு தூணோடு கூடிய மண்டபம் (அர்த்த மண்டபம்) அந்தராள மண்டபமாகும். இந்த மண்டபத்தில் தான் அம்மை மணோன்மணி அமர்ந்திருப்பாள்.

செங்கல் கோவிலாக இருந்த பூங்கோவிலை கற்கோவிலாக அமைத்தவர் மூன்றாம் குலோத்துங்கன் மனைவி பரவை நாச்சியார் ஆவார். இவள் கொடுத்த இரு பாவை விளக்கு இன்றும் சுவாமி சன்னதியில் ஏற்றி வைக்கப்படுகிறது. மூன்றாம் குலோத்துங்கன் 42,000 கிலோ எடையுள்ள பொன் தகடுகளால் பூங்கோவில் கூரை மற்றும் சுவற்றை அலங்கரித்தான்.

தங்கத்தால் பூங்கோல் கதவுகள் மற்றும் சாமரம், பூஜைக்குரிய பாத்திரங்கள் ஆகியவற்றை செய்து கொடுத்தான். சன்னதியை அடைக்கும் போது தியாகேசனை சிவப்பு நிற திரையால் மறைப்பார்கள். இதற்கு த்ரஸ்கரணி என பெயர்.

தியாகேசர் திருமேனியைச் ஒன்பது விளக்குகள் எப்போதும் எரிந்த வண்ணம் இருக்கும். இங்கு ஒன்பது நவகிரகங்களும் விளக்காக உருமாறி வந்து வழிபாடு செய்வதாக ஐதீகம்.

தியாகேசகருக்கு இருபுறம் விளங்கும் இருவாள்கள்

  1. ஞானகட்கம்

  2. வீரகட்கம்

சோமஸ்கந்தர் வடிவத்தில் ஈசரோடு உள்ள உமையாளுக்கு என்று தனி திருநாமம் கொண்ட ஒரே திருக்கோவில் திருவாரூர் மட்டுமே.வேறு எங்கும் இல்லை.

அதே போல் நீலோத்பலம் என்னும் மலரால் அர்ச்சனை நடப்பது தியாகேசருக்கு மட்டுமே. இம்மலர் ஒரு நீர் வாழ் உயிரினமாகும்

புற்றிடங் கொண்டார் சன்னதியில் நந்தி பெருமானுக்கு பின்னே பித்தளையால் ஆன கண்ணாடி உண்டு. இதனை கண்டபின்னே மூலவரை காண வேண்டும். இந்த கண்ணாடி பிரம்மஹத்தி தோஷம் உள்ளிட அனைத்து தோஷங்களை உள்வாங்கும் தன்மை உடையதாக நம்பப்படுகிறது.

பூங்கோவிலில் துவார பாலகர்களாக முசுகுந்தனும் இந்திரனும் இருப்பதாக ஐதீகம். இதனை திருக்கோவில் முகப்பிலும் (வெள்ளி திருக்கதவில்) காணலாம்.

பூங்கோவில் தியாகேசரை தரிசிக்க (அர்த்த மண்டபம்) நுழையும் திருவாயில் பெயர் திரு அனுக்கன் திருவாயில்.

இறைவராம் ஈசனுக்கு இங்கு மட்டுமே இன்றும் புலித்தோல் தரிக்கின்றார்.

இந்த ஊரில் வழங்கப்படும் திருநீறுக்கு மட்டுமே சிறப்பு பெயர் உண்டு. இங்கு தரப்படும் திருநீறுக்கு திருமந்திரம் என்று பெயர்.

இதையும் படியுங்கள்:
திருவாதிரையில் வடபாத தரிசனம் காட்டும் திருவாரூர் தியாகேசர்!
thiruvarur Thyagaraja Temple
logo
Kalki Online
kalkionline.com