திருச்செந்தூர் முருகனுக்கும் வீரபாண்டிய கட்டபொம்மனுக்கும் என்ன தொடர்பு?

thiruchendur muruga Kattabomman
thiruchendur muruga Kattabomman
நான்சி மலர்

வணக்கம். என் பெயர் நான்சி மலர். என்னைப் பற்றி தெரிந்து கொள்ள ஆர்வம் காட்டியதற்கு நன்றி. நான் B.E. Computer science Engineering முடித்துள்ளேன். எனக்கு சிறுவயது முதலே எழுதுவதில் அதிக ஆர்வம் உண்டு. ‘எழுத்துக்கள் மூலம் நம் எண்ணங்களை எளிதில் வெளிப்படுத்த முடியும்’ என்று நம்புகிறேன். கட்டுரைகள், கவிதைகள் எழுதுவதில் அனுபவம் உண்டு. Content writing துறையில் சாதிக்க வேண்டும் என்ற ஆர்வம் உள்ளது. மோட்டிவேஷன், பயணம், ஆரோக்கியம், ஃபேஷன், ஆன்மீகம் போன்ற கட்டுரை எழுதுவதில் ஆர்வம் அதிகம். என்னுடைய எழுத்து வாசகர்களாகிய உங்களை கவர்ந்தால், அது எனக்கு மகிழ்ச்சியே! ‘ இன்னும் எதிர்காலத்தில் உங்கள் மனதில் என் எழுத்துக்கள் மூலம் இடம் பிடிப்பேன்’ என்று முழுமையாக நம்புகிறேன்.

Updated on

வீரபாண்டிய கட்டபொம்மன் வீரத்தில் மட்டும் சிறந்தவரில்லை, தெய்வ பக்தியிலும் சிறந்தவர் ஆவார். வீரபாண்டிய கட்டபொம்மன் திருச்செந்தூர் முருகனின் மீது தீவிரமான பக்தி கொண்டிருந்தார். திருச்செந்தூரில் முருகப்பெருமானுக்கு நைவேத்தியம் படைக்கப்பட்ட பிறகு தான் கட்டபொம்மன் சாப்பிடவே ஆரம்பிப்பார். அவருடைய தீவிரமான பக்தியை பற்றி இந்தப் பதிவில் காண்போம். 

வீரபாண்டியனின் கோட்டை பாஞ்சாலங்குறிச்சியில் அமைந்திருந்தது. அங்கிருந்து திருச்செந்தூருக்கு கிட்டத்தட்ட 65 கிலோ மீட்டர் தூரம் இருக்கும். இப்போது இருப்பது போல தகவல் தொடர்பிற்கு எந்த ஒரு கருவியும் கிடையாது. அப்படியானால் எப்படி கட்டபொம்மன் திருச்செந்தூர் முருகனுக்கு நைவேத்தியம் படைத்ததை தெரிந்துக் கொண்டார் தெரியுமா? 

திருச்செந்தூர் கோவிலின் ராஜ கோபுரத்தில் ஏழாவது மாடத்தில் மிக பிரம்மாண்டமான வெண்கல மணியைக் கட்டித் தொங்க விட்டார் கட்டபொம்மன். அதைப்போல திருச்செந்தூர் முதல் பாஞ்சாலங்குறிச்சி வரை ஒவ்வொரு இரண்டு கிலோ மீட்டருக்கும் ஒரு கல் மண்டபம் அமைத்து அதற்குள் வெண்கல மணியை பொருத்தி ஒவ்வொரு கல் மண்டபத்திற்கும் பணி ஆட்களை நியமித்தார் வீரபாண்டிய கட்டபொம்மன். 

திருச்செந்தூரில் உச்சிக்கால பூஜை முடிந்து முருகனுக்கு நைவேத்தியம் படைக்கப்பட்டதுமே திருச்செந்தூர் ராஜ கோபுரத்தில் ஏழாவது மாடியில் உள்ள வெண்கல மணி அடிக்கப்படும். உடனே அந்த ஒலி பக்கத்தில் இரண்டு கிலோ மீட்டர் தூரத்தில் உள்ள கல் மண்டபத்திற்கு கேட்கும். உடனே அந்த மண்டபத்தில் இருக்கும் வெண்கல மணியை அடிப்பார்கள்.

இப்படியே அந்த ஒலி ஒவ்வொரு மண்டபமாக சென்று கடைசியாக பாஞ்சலங்குறிச்சியை சென்றடையும். அங்கேயிருக்கும் வெண்கலைமணியை அடிக்கும் போது வீரபாண்டிய கட்டபொம்மன் திருச்செந்தூர் முருகனுக்கு நைவேத்தியம் படைத்து விட்டார்கள் என்பதை அறிந்துக் கொண்டு அவர் மதிய உணவை சாப்பிடுவார். 

இதையும் படியுங்கள்:
வருங்காலத்தை உங்கள் மூளையால் கணிக்க முடியுமா? விஞ்ஞானிகள் சொல்லும் அதிர்ச்சியூட்டும் உண்மை!
thiruchendur muruga Kattabomman

வீரபாண்டிய கட்ட பொம்மன் தன்னுடைய நெற்களஞ்சியங்களில் இருந்து திருச்செந்தூர் முருகப்பெருமான் கோவிலுக்கு அன்னதானம் வழங்க பல்லாயிரம் கோட்டை நெல்லை அனுப்பி வைப்பாராம். அதை எப்படி அனுப்பி வைப்பார் என்றால், அந்த ஊர் மக்கள் அந்த நெல்லை காவடியாக சுமந்து சென்று திருச்செந்தூர் கோவிலில் சேர்ப்பார்களாம். வீரபாண்டிய கட்டபொம்மன் வீரத்தில் மட்டும் அல்ல பக்தியிலும் சிறந்தவராக விளங்கினார் என்றே சொல்ல வேண்டும்.

இதையும் படியுங்கள்:
ஆரா ஃபார்மிங்னா என்ன? இன்ஸ்டா ரீல்ஸை கலக்கும் Gen Z ட்ரெண்ட்!
thiruchendur muruga Kattabomman
logo
Kalki Online
kalkionline.com