காசியில் எந்த ஐந்து பேரை எரிக்க மாட்டார்கள் தெரியுமா?

Kasi
Kasi
Published on

இந்துக்களின் புனித தளமான காசியில் இந்த ஐந்து பேரை எரிக்க மாட்டார்களாம். வாருங்கள் யார் யார் என்று பார்ப்போம்.

பாரத தேசத்தின் ஆன்மீகத் தலைநகராகவும், சிவபெருமானின் உறைவிடமாகவும் போற்றப்படும் காசி, இறையன்பு கொண்டோரின் இறுதிப் புகலிடமாக விளங்குகிறது. கங்கை நதிக்கரையில் அமைந்துள்ள இந்த புனித ஸ்தலத்தில் உயிர் நீத்தவர்களின் உடல்கள் தகனம் செய்யப்படுவது முக்தியை அளிக்கும் என்பது இந்துக்களின் ஆழ்ந்த நம்பிக்கை. இருப்பினும், காசியில் சில குறிப்பிட்ட ஐந்து வகையான உடல்கள் தகனம் செய்யப்படுவதில்லை என்பது குறிப்பிடத்தக்கது. இந்த மரபுகளுக்குப் பின்னால் ஆன்மீக மற்றும் தத்துவ காரணங்கள் உள்ளன.

முதலாவதாக, குழந்தைகள் தகனம் செய்யப்படுவதில்லை. 12 வயதிற்குள் மரணிக்கும் குழந்தைகள் தூய்மையான ஆத்மாக்களாகவும் கடவுளாகவும் கருதப்படுவதால், அவர்கள் மீண்டும் பிறவி எடுக்கத் தகுதியுடையவர்கள் என்று நம்பப்படுகிறது. அவர்களின் உடல்கள் கங்கையில் ஜலசமாதி செய்யப்படுகின்றன.

இரண்டாவதாக, சாதுக்கள் மற்றும் துறவிகள் தகனம் செய்யப்படுவதில்லை. உலக பந்தங்களிலிருந்து விடுபட்டு, ஆன்மீக மார்க்கத்தில் தங்களை அர்ப்பணித்துக் கொண்ட இவர்களின் உடல்கள் பூமிக்குள் சமாதி செய்யப்படுகின்றன. அவர்கள் ஏற்கனவே பந்தங்களிலிருந்து விடுபட்ட முக்தி நிலையை அடைந்துவிட்டதாக நம்பப்படுவதே இதற்குக் காரணம்.

மூன்றாவதாக, கர்ப்பிணிப் பெண்கள்.  இவர்களின் உடல்களும் கங்கையில் விடப்படுகின்றன. ஏனெனில், இவர்களை எரிப்பதால், வயிறு வெடிக்கும் என்பதால் எரிக்க மாட்டார்கள்.

நான்காவதாக, தொழுநோயாளிகள் மற்றும் சில குறிப்பிட்ட தொற்று நோய்களால் இறந்தவர்களின் உடல்கள் தகனம் செய்யப்படுவதில்லை. நோயின் தாக்கம் மற்றவர்களுக்குப் பரவாமல் இருக்கவும், சுகாதாரக் காரணங்களுக்காகவும் இந்த முறை பின்பற்றப்படுகிறது. இவர்களின் உடல்களும் கங்கையில் விடப்படுகின்றன அல்லது அடக்கம் செய்யப்படுகின்றன.

ஐந்தாவதாக, பாம்பு கடித்து இறந்தவர்கள் தகனம் செய்யப்படுவதில்லை. ஏனெனில், இவர்களின் மூளை 21 நாட்களுக்கு உயிரோடு இருக்குமாம். இவர்களை தண்ணீரில் விட்டால், மீண்டும் உயிரித்தெழ வாய்ப்புகள் இருப்பதாக சொல்லப்படுகிறது.  

இவ்வாறு, காசியில் இந்த ஐந்து வகையான நபர்களின் உடல்கள் தகனம் செய்யப்படாமல், கங்கையில் விடப்படுவது அல்லது அடக்கம் செய்யப்படுவது பல நூற்றாண்டுகளாகப் பின்பற்றப்படும் ஒரு தனித்துவமான மரபாகும். இந்த மரபுகள் ஆன்மீக, தத்துவ மற்றும் சமூகக் கண்ணோட்டங்களை உள்ளடக்கியதாக உள்ளன.

இதையும் படியுங்கள்:
இந்த புத்தகங்களை மிஸ் பண்ணிடாதீங்க... அப்பறம், வருத்தப்பட போறீங்க!
Kasi

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com