ஆங்கிலேயர்கள் உருவாக்கிய 8 ஹில் ஸ்டேஷன்கள்!

8 hill stations created by the British!
Tourist places
Published on

ந்தியாவை ஆங்கிலேயர்கள் ஆட்சி செய்த காலத்தில் இங்குள்ள சுட்டெரிக்கும் வெப்பத்திலிருந்து தப்பிக்க அவர்களால் நிறுவப்பட்ட பல மலை வாசஸ்தலங்கள் உள்ளன. அவற்றின் மிகப்பழமையான 8 கோடை வாழிடங்கள் குறித்து இப்பதிவில் காண்போம்.

1.சிம்லா

பிரிட்டிஷ் இந்தியாவின் கோடைகால தலைநகரமாக விளங்கிய சிம்லாவில், காலனித்துவ காலத்தைச் சேர்ந்த கட்டிட கலைகளில் அமைந்த சிறந்த சுற்றுலாத் தலங்களான ஸ்ரீ ஹனுமான் ஜக்கு கோயில், கிறிஸ்து தேவாலயம், ஆல் சாலை தி ரிச் மற்றும் அன்னை டெலாகியவே ஆகியவை உள்ளன. யுனெஸ்கோவின் உலக பாரம்பரிய தலமான ஆங்கிலேயர்களால் கட்டப்பட்ட கல்கா சிம்லா ரயில் பாதையும் ஒரு முக்கிய சுற்றுலா தலமாகும்.

2.டார்ஜிலிங்

பிரிட்டிஷ் அதிகாரிகளால் உருவாக்கப்பட்ட டார்ஜிலிங் ஆங்கிலேயர்களின் குடும்பங்களுக்கு கோடைகால ஓய்வுக்கான இடமாக நிறுவப்பட்டது. இங்கு அதிக அளவிலான தேயிலை தோட்டங்கள் உள்ளதோடு, டார்ஜிலிங் இமயமலை ரயில்வே யுனெஸ்கோவால் உலக பாரம்பரிய தலமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

3.முசோரி

ஆங்கிலேயர்களால் உருவாக்கப்பட்ட உத்தரகாண்ட் மாநிலத்தில் உள்ள முசோரி மலைகளின் ராணி என்று அழைக்கப்படுவதோடு,பிரிட்டிஷ் அதிகாரிகளுக்கு மிகவும் பிடித்தமான ஓய்வு இடமாகவும் இருந்தது. கர்வால் இமயமலை தொடரின் அடிவாரத்தில் உள்ள முசோரி ஒரு பிரபலமான சுற்றுலா தலமாகும் உள்ளது. இங்கு அமைந்துள்ள கேமல்ஸ் பேக் ரோடு, தனால்டி லால் டிப்பா போன்ற பல இடங்கள் மிகவும் ரம்மியமான சூழ்நிலையில் அமைந்துள்ளன.

4.நைனிடால் ஏரி

நைனிடால் ஏரி
நைனிடால் ஏரி

இனிமையான காலநிலைக்காகவும், ஏரியின் அழகிற்காகவும் ஆங்கிலேயர்களால் நிறுவப்பட்டதுதான் இந்த நைனிடால் ஏரி.நைனிடாலில் உள்ள நான்கு முக்கியமான ஏரிகளில் ஒன்றாகவும், உத்தரகண்ட் பரப்பளவில் மூன்றாவது பெரிய ஏரியாக உள்ளதோடு, இதில் உள்ள படகு சவாரி சுற்றுலா பயணிகளை கவரும் விதமாக அமைந்துள்ளது. மற்ற மூன்று ஏரிகள் சத்தால் ஏரி, பீம்த்தால் ஏரி மற்றும் நவ் குல்த்தால் ஏரி ஆகும்.

5.கொடைக்கானல்

இயற்கை எழில் கொஞ்சும் அழகுடன் மிஷினரிகளுக்கான சுகாதார மையமாக ஆங்கிலேயர்களால் நிறுவப்பட்ட கொடைக்கானல் இன்றளவும் அமைதியான ஓய்வு இடமாக தொடர்ந்து உள்ளது. கோக்கர்ஸ்வாக் கோடை ஏரி மற்றும் பில்லர் பாறைகள் மனதை மயக்குபவையாக இருக்கின்றன.

6.ஊட்டி

தென்னிந்தியாவில் ஆங்கிலேயர்களால் நிறுவப்பட்ட முதல் மலைவாசஸ்தலமான ஊட்டி ,தேயிலை தோட்டங்கள் மற்றும் நீராவி மலை ரயிலுக்கு பெயர்பெற்ற இடமாகும். இந்த மலை ரயிலில் பயணிக்கும் அனுபவமே மிக சுவாரஸ்யமானதாகும்.

இதையும் படியுங்கள்:
ஜோடியாகச் செல்ல தென்னிந்தியாவின் 10 இடங்கள்!
8 hill stations created by the British!

7.மாத்தோரான்

இந்தியாவில் மிகச் சிறிய மற்றும் வாகன போக்குவரத்து இல்லாத ஒரே மலைவாசஸ்தலம் மாத்தோரான். மாத்தோரான் பாயிண்ட்ஸ் சாரலோட் ஏரி நீராவி ரயில் ஆகியவை இங்கு கட்டாயம் பார்க்க வேண்டிய இடங்கள் ஆகும்.

8.மவுண்ட் அபு ராஜஸ்தான்

ராஜஸ்தானில் உள்ள ஒரே மலை வாசஸ்தலம் மவுண்ட் அபு. இது பிரிட்டிஷ் பாசறையாக பயன்படுத்தப்பட்டது. இங்கு கட்டாயம் பார்க்க வேண்டிய இடங்களாக நக்கி ஏரி, தில்வாரா கோயில்கள் மற்றும் குரு சிகராக் ஆகியவை அமைந்துள்ளன. மேற்கூறிய 8 மலை வாசஸ்தலங்களும் ஆங்கிலேயர்களால் உருவாக்கப்பட்டு இன்றளவும் மக்கள் பயன்பாட்டில் உள்ளன.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com